Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`ஈழ தமிழர்களுக்கு எதிரான போரை இயக்குவது மத்திய அரசு தான்' - வைகோ குற்றச்சாட்டு

Featured Replies

'ஈழ தமிழர்களுக்கு எதிரான போரை மத்திய அரசு மறைமுகமாக இயக்கி வருகிறது' என்று கோவையில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து நேற்று இரவு விமானம் மூலம் கோவை வந்தார்.

அப்போது கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் ஒரு ஆளும் கட்சி இடைத்தேர்தலுக்காக இவ்வளவு செலவு செய்ததில்லை.

அ.தி.மு.க.வினர் மீது தாக்குதல் நடத்தியதாக போலீஸ் சூப்பிரண்டு மீது நாங்கள் தகுந்த ஆதாரத்துடன் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தோம். அந்த புகாரின் அடிப்படையில் அவர்கள் மாற்றப்பட்டனர். ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சாமி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வர முடியாத அளவுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த தேர்தலில் ம.தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்ïனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்ïனிஸ்டு ஆகிய கட்சிகள் அடங்கிய எங்கள் கூட்டணி சிறப்பாக பணியாற்றியுள்ளோம்.

இலங்கை பிரச்சினையில், மத்திய அரசு தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது. சமீபத்தில் இந்திய ராணுவ அதிகாரிகள் 87 பேர் சென்னை வழியாக கொழும்பு சென்றுள்ளனர். அவர்கள் அடர்ந்த காடுகளில் தேடுதல் வேட்டை நடத்தும் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். ஆனால் இதனை மத்திய அரசு மறுக்கிறது. இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு செயற்கை கோள் மூலம் இயங்கும் காமிராக்களை அளித்துள்ளது. மத்திய அரசு வழங்கும் நிதி உதவியை கொண்டு இலங்கை அரசு பாகிஸ்தானிடமிருந்து ஆயுதங்களை வாங்கி இலங்கை தமிழர்களை அழித்து வருகிறது. சமீபத்தில் 3 ஆயுத கப்பல்கள் பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளன.

நார்வேயில், 102 நாடுகள் கலந்துகொண்ட சர்வதேச மாநாட்டில் போரில் கற்றை குண்டுகளை வீசக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விதிமுறைகளுக்கு மாறாக இலங்கை ராணுவம் தமிழர்கள் மீது கற்றை குண்டுகளை வீசுகிறது. இந்த குண்டு ஒன்று நூறாகி, ஆயிரமாகி சிதறி வெடிக்கக்கூடியது. மொத்தத்தில் இலங்கை தமிழர்களை பூண்டோடு அழிக்கும் வேலையில் இலங்கை ராணுவம் முழு மூச்சில் ஈடுபட்டு உள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், இங்கிலாந்து போன்ற சர்வதேச நாடுகளின் ஆயுத பலத்தோடு இலங்கை ராணுவம் நடத்தும் போரை விடுதலைப்புலிகள் எதிர் கொண்டு வருகிறார்கள். ஈழ தமிழர்களை இலங்கை ராணுவம் பூண்டோடு அழித்து வருகிறது. இதற்கு மத்திய அரசு ராணுவ உதவி, நிதி உதவி அளித்து வருகிறது. மொத்தத்தில் இலங்கை தமிழர்களுக்கு எதிரான இந்த போரை மத்திய அரசு மறைமுகமாக இயக்கி வருகிறது.

இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. இந்த வெறுப்பை திசை திருப்பும் முயற்சியில், தமிழக முதல்-அமைச்சர் ஈடுபட்டுள்ளார். ஈழ பிரச்சினையில் தலையிட மத்திய அரசு தயங்குவதால் தான் சர்வதேச நாடுகள் பின்வாங்குகின்றன. இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணாத மத்திய அரசை எதிர்த்து தமிழகத்தில் வாழும் 6 1/2 கோடி மக்களும் ஒன்று சேர்ந்து கிளர்ந்தெழ வேண்டும்.

கிளிநொச்சியை இலங்கை ராணுவம் பிடித்த போது அங்கு மக்கள் யாரும் இல்லை. இதற்கு காரணம் இலங்கை ராணுவத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக தான் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் இயக்குனர் சீமானும், கொளத்தூர் மணியும் தவறாக பேசவில்லை. அவர்கள் பேசியது சரி தான். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியை திருப்திபடுத்துவதற்காக தான்இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி போன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனனர்.' இவ்வாறு வைகோ கூறினார்.

-தமிழ் செய்தி மையம்

http://www.tamilseythi.com/tamilnaadu/vaiko-2009-01-11.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.