Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படிக்காதவன் திரைவிமர்சனம்

Featured Replies

படித்த குடும்பத்தின் படிக்காத பையன் தனுஷ். மூவாயிரம் எம்பி-3 பாடல்களை மனப்பாடம் செய்யும் அவருக்கு ஒன்றரை வரி திருக்குறள் ஏற மறுக்கிறது. விளைவு சொந்த வீட்டிலேயே வேலைக்காரனாக நடத்தப்படுகிறார். நாமும் எப்படியாவது படித்து பெயருக்கு பின்னால் ஒரு பட்டத்தை போட வேண்டும் என்று புறப்படுகிறார். டுடோரியல் காலேஜில் சேருகிறார். காலேஜையே மூடும் அளவுக்கு போகிறது அவரது ரவுசு. கடைசியாக, படித்த பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொண்டால் அவள் பெயருக்கு பின்னால் தன் பெயர் வரும். அதற்கு பின்னால் பட்டம் வரும் என்று குறுக்கு வழியை கண்டுபிடித்து சொல்கிறார்கள் நண்பர்கள்.

தனுஷ§ம் படித்த பெண்ணை தேடுகிறார். கிடைக்கிறார் தமன்னா, கொஞ்சம் பிராடு, கொஞ்சம் ஆக்ஷன், கொஞ்சம் தமாஷ் பண்ணி அவரை தனதாக்குகிறார். காதலை தொடங்கும் நேரத்தில் ஒரு பெரிய கும்பல், தமன்னாவை துரத்த, இன்னொரு கும்பல் அவரை காப்பாற்ற, ஹெலிகாப்டரில் வந்திறங்கும் சுமன், மகளை சொந்த ஊரான ஆந்திராவுக்கு அழைத்துப் போகிறார். (தனுஷ் காதலித்தது ஆந்திராவின் பெரிய தாதாவின் மகள். அவரை கொல்ல துரத்தியது எதிர் குரூப்) படிக்காத தனுஷ், தாதாக்களை வென்று தமன்னாவை கைபிடிக்கிற பரபர கதை, படிக்காதவனின் இன்னொரு முகம்.

படபடபேச்சு, கலகல காமெடி, தடதட ஆக்ஷன் என முப்பரிமாணம் காட்டியிருக்கிறார் தனுஷ். உருப்படாத நண்பர்கள் பட்டாளத்துடன் சேர்ந்து அவர் அடிக்கிற லூட்டி சிரிப்பு, கடை முறுக்கு. முதல் சந்திப்பிலேயே தடாலடியாக தனது ‘பேமிலி பிளான்’ காதலை சொல்வது நச். “உன்னை மாதிரி அழகான பெண்களெல்லாம் அழகான ஆண்களை தேடினா என்ன மாதிரி பையன்களெல்லாம் பொண்ணுக்கு எங்க போறது’ என்று விளக்கம் கொடுப்பது, அடுத்தடுத்த காட்சிகளில் அவரை நெருங்குவது காதல் கலகலப்பு. ஆந்திராவின் இருபெரும் தாதாக்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு பிப்டி பிரசன்ட் அறிவு பிப்டி பிரசன்ட் ஆக்ஷன் என பொளந்து கட்டுகிறார்.

அழகு, அழுகை, ஆணவம் என தமன்னாவும் தனுஷ§க்கு போட்டியாக மூன்று முகம் காட்டுகிறார். பாடல் காட்சிகளில் தளதள தக்காளியாக ஜொலிக்கிறார். காதலர்களை சேர்த்து வைக்கும் அசால்ட் ஆறுமுகம் கேரக்டரில் விவேக் காமெடி கேக் வெட்டுகிறார். தாதா சுமனிடம் சரிக்கு சமமாக உட்கார பயந்து கொண்டு பாத்ரூமுக்குள் வந்து தனிமையில் அழுவது டாப் டச். சுமன், சாயாஷி ஷிண்டே, அதுல் குல்கர்னி ஆகியோர் தாதாக்களாக தாண்டவமாடுகிறார்கள்.

அப்பா பிரதாப், அம்மா மீரா கிருஷ்ணன், அண்ணன் சேத்தன், அண்ணி தேவதர்ஷினி என சென்டிமென்ட் கூட்டணி கச்சிதமாக செட்டாகிறது.

டைட்டிலுக்கு முன் வரும் மர்டர் டிவிஸ்டில் தொடங்கும் பரபரப்பை கடைசிவரை கொண்டு செல்வதற்கு இயக்குனர் சுராஜ் கடுமையாக உழைத்திருப்பது திரையில் தெரிகிறது. பணக்கார தமன்னாவை படிக்காத தனுஷ் சொல்லி வைத்து காதலிப்பதை லாஜிக் மிஸ்சாகாமல் காமெடியோடு சொல்லியிருப்பதும், மிகப்பெரிய தாதாக்களை சாதாரண இளைஞன் வெல்வதை சாமர்த்தியமாகக் கொண்டு செல்வதும் சூப்பர் ஸ்கிரீன் ப்ளே. ஏ.வெங்கடேஷின் ஒளிப்பதிவு ஆக்ஷனில் அதிர வைக்கிறது. பாடல்களில் குளிர வைக்கிறது. மணிசர்மாவின் இசையில் பாடல்கள் பஞ்சாமிர்தம்.

http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=499

-தினகரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சண் பிக்சர்ஸ் தயாரித்த படத்துக்கு தினகரன் விமர்சனம் எழுதின இப்படித்தான் இருக்கு....கடவுளே கடவுளே...

என் இனிய சினிமா ரசிகர்களே...இதை வாசித்து விட்டு தயவுசெய்து படம்பார்க்க போய் ஏமார்ந்து விடாதீர்கள்..

:o மருமகன் நடித்த படத்தின் விமர்சனத்தோடு முன்பு மாமனார் நடித்த படிக்காதவன் விமர்சனத்தையும் பார்த்தால் என்ன என்பதால் அதனையும் இங்கு இணைக்கின்றேன். :o

படிக்காதவன் திரை விமர்சனம்

வடக்கேயிருந்து இறக்குமதியாகி யிருக்கும் கதை. இதில், பாசம் மிக்க மூத்த அண்ணனாக கௌரவ வேடத்தில் சிவாஜி. இவருக்கு இரண்டு சின்னத் தம்பிகள். அவர்களைக் கண்டாலே மிஸஸ் வடிவுக் கரசி சிவாஜி கணேசனுக்கு ஏகமாய் வெறுப்பு! வக்கீல் பரீட்சை எழுதப் பட்டணம் போன சிவாஜி திரும்பி வந்தபோது தம்பிகளைக் காணோம்! அண்ணியுடன் ஏற்பட்ட லடாய் காரணமாக, சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடி விடுகிறார்கள்.

திசை மாறிப்போன சிறுவர்களுக்கு முஸ்லிம் பெரியவர் நாகேஷ் அடைக்கலம் தருகிறார். இருவரையும் தன் குழந்தைகளாக ஏற்று, குடும்பத்துடன் இணைத்துக்கொள்கிறார்.

காலச்சக்கரம் படுவேகமாகச் சுழல, சிறுவர்கள் வளர்ந்து வாலிபர்களாகி... அதில் ஒருவர் டாக்ஸி டிரைவர் ரஜினி! நியாயத்துக்கும் நேர்மைக்கும் கட்டுப்படும் முரட்டு இளைஞர். சின்னத்தம்பி படித்துப்பட்டதாரி ஆகவேண்டும் என்ற லட்சிய வெறிகொண்டவர். ஆனால், சி.த. காதல், கல்யாணம் என்று வேறு மார்க்கங்களில் பிஸி!

இனி, சோதனை ஆரம்பம்...

சகவாச தோஷம், தம்பியை ஒரு கள்ளக்கடத்தல் கும்பலோடு சேர்த்துவிட, ஒரு கட்டத்தில் அவர் சார்பாகப் போன ரஜினி மீது கொலைப் பழி! விவகாரம் கோர்ட்டுக்குப் போக, அங்கு நீதிபதியாக சிவாஜி! பரஸ்பரம் அடையாளம் புரிந்துபோக, நீதிபதி சிவாஜி, டிஃபென்ஸ் லாயராக மாறி, தம்பிகளைக் காப்பாற்றுமிடத்தில் 'வணக்கம்'!

மாமூல் மசாலாக் கதைதான் என்றாலும், அமைதியாக சிவாஜியும், ஆக்ரோஷமாக ரஜினியும் கைகொடுக்க, தரமான பொழுதுபோக்குப் படத் தைக் கொடுத்த பெருமை டைரக்டர் ராஜ சேகருக்கு!

படத்தில் முழுக்க முழுக்க ரஜினியின் ஆதிக்கம் தான்! தம்பி பங்கேற்கும் ஒரு நாடகத்துக்குப் பார்வையாளராகப் போகும் ரஜினி, அப்பாவித் தனத்தோடு அரங்கத்தில் செய்யும் சேட்டைகள் அட்டகாசம்!

தான் ஓட்டும் டாக்ஸிக்கு 'லட்சுமி' என்று பெயரிட்டு, செல்லமாக அதோடு சண்டை போடுமிடம்... தம்பியைப் 'பிள்ளை' கேட்டு வரும் பூர்ணம், அவர் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கவேண்டுமென்று கண்டிஷன் போட, அங்கு உடைந்து போகுமிடம்... இதனால் தனது எதிர் காலமே பாழாகிவிட்டது போல் தம்பி கூச்சல் போட, உடனே பூர்ணம் வீட்டுக்கு விரைந்தோடி மன்னிப்புக் கேட்குமிடம்...

இப்படிப் பல இடங்களை 'பட்டா' எழுதி வாங்கிக்கொண்டு, படத்தில் 'தனிக்குடித்தனம்' நடத்துகிறார் ரஜினி.

படத்துக்குக் கதாநாயகி வேண்டும் என்ற சம்பிரதாயத்துக்காக அம்பிகா. படு 'வீக்'கான வில்லன் வேடம் ஜெய்சங்கருக்கு!

ஜேசுதாஸ் இந்தப் படத் திலும் தொடர்ந்து கொடி கட்டிப் பறக்கிறார். 'ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்... உலகம் புரிஞ்சுக்கிட்டேன்...' பாடல், அவர் குரலில் ஓஹோ!

படத்தில் கடைசி வசனம்... ரஜினியைப் பார்த்து சிவாஜி பேசுகிறார்... ''படிக்காதவனா இருந்தாலும் நீ ஒரு மேதை!''

பழைய 'படிக்காத மேதை' (சிவாஜி) தன்னு டைய வாரிசாகப் 'புதிய படிக்காத மேதை' ரஜினி யைப் உருவாக்குவது போல் அமைந்துள்ள இந்த வசனம் யாரைத் திருப்திப்படுத்த? ரஜினியையா அல்லது அவருடைய ரசிகர்களையா? எதுவாக இருந்தாலும் அந்த வசனம் படு செயற்கை!

- விகடன் விமர்சனக் குழு

உபயம் : ஆனந்தவிகடன் 08.12.1985 இதழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.