Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மத்திய அரசு ஏதும் செய்யும் என இன்னுமா நம்புகிறார் தமிழக முதல்வர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய அரசு ஏதும் செய்யும் என இன்னுமா நம்புகிறார் தமிழக முதல்வர்

[19 ஜனவரி 2009, திங்கட்கிழமை 10:30 மு.ப இலங்கை]

அண்மைக்கால தமிழ் சினிமாவில் ஒரு காட்சி. வெற்று வாயால் வெட்டி வீழ்த்தி வாய்ச்சவடால் பண்ணும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் எடுப்புகளைப் பார்த்து ஊர் மக்கள் அசந்துபோய் வாய் பிளப்பர். அதைக் கண்டு கைப்பிள்ளை வடிவேலுவுக்கே ஆச்சரியமாய் இருக்கும். "இன்னுமா உலகம் எங்களை நம்புகின்றது?" - என்று தன்னை மறந்து தோழர்களிடம் அக்காட்சியில் கேட்பார் வடிவேலு.

அதுபோலத்தான் இருக்கின்றது ஈழத் தமிழர் பிரச்சினையை ஒட்டி இப்போதும் கயிறுவிட்டுக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் போக்கும்.

வாழ்வா, சாவா என்ற இறுதிக் கட்டத்தில் அல்லாடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர் விடயத்தை ஒட்டி - இலங்கைத் தமிழர் பிரச்சினையில் - (இந்திய) மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப் போகின்றது என்பதை அறிய இன்னும் சில நாட்கள் பொறுத்திருப்போம் என்று தமிழக முதல்வர் கருணாநிதி தமது ‘உடன்பிறப்புகளுக்கு’ கடந்த வெள்ளியன்று எழுதிய தமது வழமையான கடிதத்தில் தெரிவித்திருக்கின்றார்.

இந்தக் கடிதத்தைப் பார்க்கும் போது -

ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசு ஆக்கபூர்வமாக ஏதும் செய்யும் என்று கலைஞர் கருணாநிதி இன்னுமா நம்புகின்றார் என்றே கேட்கத் தோன்றுகின்றது.

அதேசமயம், இவ்விடயத்தில், தமது பதவிக் கதிரையைப் பற்றிக் கவனிக்கப்படாமல் ஈழத் தமிழர்களுக்காகத் தமிழக முதல்வர் ஏதேனும் ஆக்கபூர்வமாகச் செய்வார் என்று நீங்களும் இன்னுமா நம்புகின்றீர்கள் என அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களும் ஈழ ஆர்வலர்களும் நம்மைப் பார்த்துக் கேள்வி எழுப்புவதையும் கூட நம்மால் உணரவே முடிகின்றது.

"விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை முழு அளவில் பூர்த்தியடைந்த பின்னரே, அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை அரசு உறுதி பூண்டுள்ளது." - என்ற செய்தி கடந்த வார இறுதியில் கொழும்புக்கு வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனனிடம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெளிவுபட எடுத்துக் கூறிவிட்டார் எனப் புதுடில்லித் தகவல்கள் அறுதியிட்டுத் தகவல் வெளியிட்டுள்ளன.

எனவே, வன்னியில் குறுகிய சிறிய பரப்புகள் சுமார் நான்கு லட்சம் அப்பாவித் தமிழ்ப் பொதுமக்கள் சிக்குப்பட்டுள்ள நிலையில் ‘புலிகள் அழிப்பு யுத்தம்’ என்ற பெயரில் அந்தப் பிரதேசம் மீதான இலங்கைப் படைகளின் இராணுவ முற்றுகைத் தாக்குதல் மேலும் முழு அளவில் தீவிரப்படுத்தப்படப் போகின்றது என்பதை புதுடில்லிக்குக் கொழும்பு இவ்வளவு தெளிவாகவும் திட்டவட்டமாகவும் உணர்த்திவிட்டது.

அதற்கு இந்திய வெளிவிவகாரச் செயலாளரும் தலையசைத்து விட்டு புதுடில்லி திரும்பிவிட்டார். எனவே இனி, இராணுவ நடவடிக்கை வன்னியில் தீவிரமாகும் - அங்கு மனிதப் பேரழிவும் அவலமும் மோசமாகும் - என்பது திட்டவட்டமாக உறுதியாகிவிட்டது.

வன்னியில் ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளப் போகும் மிக மோசமான மனிதப் பேரவலமும் கொடூரமும் இனி உறுதி என்றாகிவிட்ட நிலையில் -

இவ்விடயத்தைத் தடுத்து நிறுத்த இந்திய மத்திய அரசு ஆக்கபூர்வமான செயற்பாடு எதையும் முன்னெடுக்காது என்பது தெளிவான நிலையில் -

‘மத்திய அரசின் முடிவை அறிய இன்னும் சில நாட்கள் பொறுத்திருப்போம்’ - என்று தமது பதவியைத் தொடர்வதற்காகத் தமிழர்கள் காதில் பூச்சுற்ற முனைகின்றார் தமிழக முதல்வர் கருணாநிதி.

இப்போதுதான் திருமங்கலம் சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தமது அரசியல் செல்வாக்குப் பலத்தை நிரூபித்துத் திருப்திப்படுகின்றார் கலைஞர் கருணாநிதி. அவரது தமிழக அரசுக்கான அமோக ஆதரவு சரியாமல் அப்படியே நீடிக்கின்றது என்பதைத் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் முடிவு உணர்த்தி நிற்கின்றது.

இன்றைய நிலையில் ஈழத் தமிழர் பிரச்சினையில் நீதி செய்ய மறுக்கும் இந்திய மத்திய அரசுக்கு சூடு வைக்கும் வகையில், அந்த அரசிலிருந்து வெளியேறி, தமிழக மாநில சட்டசபைக்கான தேர்தல் ஒன்றை முற்கூட்டியே நடத்த கலைஞரின் அரசு தீர்மானிக்குமானால், அவரின் தலைமையிலான தி.மு.க. கூட்டமைப்பு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யாரும் அசைக்க முடியாத வலுவான வெற்றியை அத்தகைய உத்தேச தேர்தலில் பெறும் என்பது நிச்சயம்.

ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் இன்னும் மத்திய அரசை நம்பிக்கொண்டு காலத்தை இழுத்தடிக்கின்றார் தமிழக முதல்வர்.

பதவிச் சுகத்தையும் அதிகாரத்தையும் நீண்ட பல வருடங்களாக உருசித்து சுவைத்திட்ட கலைஞர் போன்ற மூத்த அரசியல்வாதிக்கு இத்தகைய அதிகாரம் மீதான அதீத ஆசை பெரும் அபத்தமாகும்.

கலைஞரே! இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்திய மத்திய அரசை இன்னுமா நம்புகின்றீர்கள் என்று உங்களைப் பார்த்து சர்வதேசத் தமிழர்கள் எழுப்பும் கேள்விக்கு உங்களின் பதில் என்னவோ....?

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.