Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்திற்காக தமிழ்நாட்டின் உட்குமுகங்கள் என்ன செய்ய முடியும்?

Featured Replies

நயனம் வலைப்பதி;விலிருந்து ஒரு பதிவு

தமிழீழத்திற்காக தமிழ்நாட்டின் உட்குமுகங்கள் என்ன செய்ய முடியும்?

ிங்களக் காடையர்களும் காங்கிரசு கட்சியும் சேர்ந்து

தமிழீழத்தமிழப் படுகொலைகளைச் செய்து வருவதைத்

தடுத்து நிறுத்த ஏலாது கையறு நிலையில் இருப்பதாகக்

காட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கும், தமிழினம்

செத்தே ஒழிய வேண்டும் என்ற வெறிபிடித்த செயலலிதா

போன்ற அரசியல்வாதிகளுக்கும் இடையே கிடந்து

தமிழகம் அல்லாடுகிறதா என்று பார்க்க வேண்டி இருக்கிறது!

தமிழகமும் தமிழக மக்களையும் மிக மோசமாக வழிநடத்தி

அடக்கி வைத்திருக்கும் சில அரசியல் தலைவர்களைத்

தாண்டி சிந்திக்க வேண்டி யிருக்கிறது.

பிணியாய்ப் போன அரசியல் தலைமைகள்தான்

தமிழகக் குமுகத்தின் ஒட்டு மொத்த பிரதிநிதிகளா?

இல்லை!!

அரசியல் கட்சிகள் அல்லது அவர்களது தலைமைகள்

என்பன குமுகத்தின் மேனிலையில் தெரியும் ஒரு அடுக்கு.

(Visible Layer of the community). ஆனால் அதைத்

தாண்டி உள்ளிருக்கும் குமுகப் பிரிவுகள்/அடுக்குகள்

எண்ணற்றன. (Inner Layer)

அரசியல் கட்சிகளுக்கு கைக்கட்டு, வாய்க்கட்டு

என்பதொடு சிந்தைக்கட்டும் ஏற்பட்டுப் போயிருக்கிறது.

பெருமளவு வணிகமயமாகிவிட்ட அரசியல்வாதிகளால்

தமிழீழத்திற்காக ஒன்றும் செய்ய ஏலாது! இவர்களின்

பிணைப்புகள் அத்தகையன. இவர்களில்

பெரும்பான்மையினர் நடை பிணங்கள்.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை இவர்களால்

எதிரொலிக்க முடியாது.

திருமா, நெடுமாறன் போன்றோர் விதிவிலக்குகள்.

இவ்வடுக்கினைத் தாண்டிப் பார்த்தால் ஒரு குமுகத்தில்

இருக்கும் உட்குமுகங்களும், துணைக் குமுகங்களும்,

சிறுகுமுகங்களும் தெரிகின்றன (subsocieties).

இவற்றைச் சார்ந்துதான் அரசியல் நடக்கின்றது.

அதற்குக் காட்டாக இவ்வமைப்புகளைச்

சொல்லலாம்.

மாணவர் சங்கங்கள்

வன்னியர் குமுகச் சங்கம்

வணிகர் சங்கங்கள்

வேளாண்மை சங்கங்கள்

முக்குலத்தோர் குமுகச் சங்கங்கள்

சட்டவாளர் சங்கங்கள்

கொங்கு மண்டலக் குமுகச் சங்கங்கள்

நகரத்தார் குமுகச் சங்கங்கள்

நாடார் குமுகச் சங்கங்கள்

அறத்துறை அமைப்புகள்

மனித உரிமை சங்கங்கள்

முசுலீம் அமைப்புகள்

மகளிர் அமைப்புகள்

கிறித்துவ அமைப்புகள்

தமிழ்ச் சான்றோர் பேரவைகள்

கவிஞர் மன்றங்கள்

அரசு ஊழியர்கள்

இவைபோல இன்ன பிற அமைப்புகள்.

இவைகளெல்லாம் என்ன செய்கின்றன?

இவற்றிற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை

என்பதுதான் அரசியல்வாதிகளின் நிலை.

குமுக ஒற்றுமைக்கும், அந்தந்த குமுகத்திற்கும்

பொதுச்சேவை செய்வதுதான்

இவர்கள் பணி என்றால்,

இவர்களெல்லாம் வீதியில் இறங்கி

தமிழீழத் தமிழர்களுக்குக் குரல்

கொடுக்கலாம்தானே?

இராமதாசின் பா.ம.கவிற்கு காங்கிரசு,

தி.மு.கவிடம் அணுசரனை தேவை என்றால்,

அதே தேவை காடுவெட்டி

குருவின் வன்னியர் சங்கத்திற்கு இல்லையே!?

அவரும் அவர் அமைப்பும் ஏன் காங்கிரசை எதிர்த்துப்

போராடக் கூடாது?

அவரின் வன்னியர் சங்கம் எதற்கு சாதிச்சண்டை

போட மட்டும்தானா?

செயலலிதா அம்மையார் தமிழர்களின் பரம வைரி

என்பதால், அ.தி.மு.கவும் அந்த வேடத்தைப் போடுகிறது.

ஓ.பி.பன்னீர் செல்வம் போன்ற மறவர்களும் அதனால்

அடங்கிப் போகிறார்கள் என்ற நிலை இருக்குமானால்,

ஏன் மறவர் குமுக சங்கத்தினர் வீதிக்கு வரக் கூடாது?

முக்குலத்தோரின் மதிப்பைப் பெற்ற நடராசன்

போன்றோர்கள், அ.தி.மு.கவிற்கு அப்பாற்பட்டு,

அவரின் குமுகத்தைத் தட்டி எழுப்பக் கூடாது?

அ.தி.மு.கவின் தலைவி ஒருவருக்கு மட்டும் தமிழர்கள்

பகைவர் என்றால் அந்தக் கட்சிக்குத் தூண் ஆக இருக்கும்

மறவர் குமுகம் முற்றும் தமிழர்களுக்கு இனத்துரோகி

ஆக வேண்டுமா?

மறவர் குமுகம் தி.மு.கவையோ

அ.தி.மு.கவையோ அல்லது

காங்கிரசையோ சார்ந்தில்லையே?

முத்துராமலிங்கத் தேவரின் விழா என்றால்,

எல்லாக் கட்சிகளும் வந்து அவரை

வணங்கி அவருக்கும் அவரின் குமுகத்துக்கும்

மரியாதை செலுத்த வேண்டிய

நிலையிலேதானே இருக்கின்றன!

பின்னர் ஏன் இந்தக் குமுகம் இப்படி

அப்பாவி போல வேடம் போடுகிறது?

ஏன் சவலை போல

அடங்கிக் கிடக்கிறது?

தமிழீழத் தமிழர்கள் தமிழர்கள் இல்லையா?

அதிலே மறவர் இரத்தம் இல்லையா?

மறவர் குமுகம் அல்லது முக்குலத்தோர்

குமுகத்தின் அரிவாள் வேல் கம்பெல்லாம்

தமிழ்ச் சாதிக்குள்ளேயே வெட்டிக்

கொள்ளுவதற்குதானா?

சாதிப் பெருமை கூறி

பீற்றிக் கொள்ளத்தானா?

"வன்னியர் மறவர் போன்ற குமுகத்தின்

சங்கங்கள் எல்லாம் வெறும் பொண்ணு மாப்பிள்ளை

பார்க்கும் தரகு வேலைக்கு மட்டும்தான் போல!"

என்று எண்ண இடம் கொடுக்காமல்

அரசியலுக்கு அப்பாற்பட்டுக் களம் இறங்க வேண்டும்

தமிழினத்திற்காக என்பதனை

இவர்களெல்லாம் உணரவேண்டும்.

தமிழ்ச்சாதியைக் காக்க

தமிழ்ச்சாதியால் முடியவில்லை

என்றால் அவமானம் இல்லையா?

இதேபோலத்தான் முதலியார் சங்கங்கள்,

பிள்ளைமார் சங்கங்கள்,நகரத்தார் சங்கங்கள்

நாடார் சங்கங்கள் எல்லாம் என்ன

பேன் பார்த்துக் கொண்டிருக்கின்றனவா?

கருணாநிதியும் செயலலிதாவும்

சோனியாகாந்தியும் சோனியாகாந்தியின்

தமிழகக் கூலியாள்களும்

முத்துராமலிங்கத் தேவரின் குமுகத்தையும்,

படையாச்சி இராமசாமியாரின் குமுகத்தையும்,

இன்ன பிற குமுகங்களையும்

பாதித்து விடுவார்களா? பாதிக்க முடியுமா?

அப்படிப் பட்ட கோழைகளா

இவைகள் எல்லாம்?

யோசிக்க வேண்டாம்?

எத்தனை ஆதினங்கள் அறத்துறையிலே

இருக்கின்றன? தமிழீழத்தில் எத்தனைக்

கோயில்கள் இடிக்கப் படுகின்றன?

தேவார முதலிகளால் பாடப்பெற்ற

தலங்களெல்லாம் எத்தனை பாதிப்புகளுக்கு

உள்ளாகி இருக்கின்றன ஈழத்தில்?

அது அடுக்குமா? அதைத் தடுக்க வேண்டாமா?

தமிழகத்தின் மக்கள் தொகையில்

10%க்கும் மேல் உள்ள மாபெரும் குமுகங்களான

இசுலாமியர் கிறித்துவர் அமைப்புகளில்

பெருமளவும் அரசியல் சாராதவர்கள்தானே?

மத இணக்கம் கொண்ட

தமிழ்ப் பெருங்குடிதானே அவர்களும்?

ஏன் அவர்கள் வீதிக்கு வந்து போராடக் கூடாது?

இப்படி, தமிழ்நாட்டின் உட்குமுகங்கள்

கிளர்ந்தெழுவதும்,அக்குமுகங்

Edited by bara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.