Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இத்தருணத்தில் எழாது விடின்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீலாறு தொடக்கம் புலிகள் பின்வாங்குகின்றார்கள் என்ற கேள்வியை பலர் எழுப்புவதைக் பார்க்க முடிகின்றது. ஆனால் அதற்கான பதிலாக யாரும் எதையும் ஏற்றுக் கொள்வதுமில்லை.

மாவிலாறு சமரை ஏதோ காரணத்தை வைத்துச் சிங்கள அரசு போரைத் தொடங்கியதற்கும், சமாதான காலத்தில் போருக்கான தயார்ப்படுத்தலைத் தாங்கள் செய்து கொண்டிருந்தோம் என சரத்பொன்சேகா சமீபத்தில் சொன்ன வாக்குமூலத்திற்கும் நிறையவே தொடர்புண்டு.

ஆனால் அவர் கொண்டிருந்த போர்த் தயார்ப்படுத்தல்கள் மக்களை நோக்கிய இலக்குகளாகவே இருந்தன என்பதையே இது வரை கால அவரது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

மூதூர் பகுதியில் சிறிலங்கா அரசு தொடங்கிய கண்மூடித்தனமான தாக்குதல்கள் பொதுமக்களின் இலக்குகளாகவே இருந்தன. வாகரையில் வைத்தியசாலை மீது இலக்கு வைத்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஒரு வாரத்தில் மட்டும் 200க்கு மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்தது. இதன் மூலம் அப்பிரதேசத்தைச் சிறிலங்கா அரசின் ஆக்கிரமிப்புக்குள் அகப்படுத்துவதைத் தவிர்க்க முடியாவில்லை. பின்னர் கொக்கட்டிச்சோலையில் நடந்தவையும் அப்படியானவையே.

யாழ்ப்பாணத்தில் அல்லைப்பிட்டியைக் கைப்பற்றியபோது, அம்மக்களைக் கொல்வதற்காக தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலைச் சிங்களப் பேரினவாதம் நடத்தியது.

புலிகள் தாக்குதல்கள் நடத்தும்போது எல்லாம், அல்லது புலிகள் பதிலடி நடத்தும்போது எல்லாம் பொதுமக்களையே இலக்குகளாகச் சிங்கள அரசு மாற்றி வந்தது.

ஒரு கிளைமோர் தாக்குதலைச் சிறிலங்காப் படையினர் மீது தாக்கும்போது கூட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டைச் சிறிலங்காப் படைகள் செய்தன. யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் பல மணிநேரம் கழித்துச் சிறிலங்காப் படைகள் வந்த பின்னர் கூட, பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கின்றார்கள். தாங்கள் கொல்லப்படும்போது பதிலடியாக அவர்களின் இலக்கு பொதுமக்களாகத் தான் இருந்தன.

இன்று கூட அவர்களின் பெரும்பாலான இலக்குகள் தமிழ்மக்களின் வதிவிடங்களாகத் தான் இருக்கின்றன. இப்படியான இடங்கள் மீது குண்டு போடும்போது மக்களுக்கு தமிழீழம் பற்றிய எண்ணவோட்டம் நின்று போய், அங்கே தங்களுடைய வாழ்வினைப் பற்றித் தான் கவலைப்படுவார்கள் என நினைத்துக் கொள்கின்றார்கள்

ஒரு போராட்டம் எம்மக்களில் இருந்து வருகின்றதோ, அம்மக்களை துன்புறுத்துவதன் மூலம் போராட்ட அமைப்பினை நசுக்கிவிடலாம் எனச் சிங்கள அரசு கனவு காண்கின்றது. அது சில தருணங்களில் பாதிப்பைத் தான் ஏற்படுத்துகின்ற. அந்தப் பதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள ஒவ்வொரு தமிழனும் முனையாதபோது, அங்கே எதிரி வெற்றி கொள்கின்றான். தினமும் ஒவ்வொரு, இருவராக கிட்டத்தட்ட 16 ஆயிரம் பொதுமக்கள் எதிரியால் கொல்லப்பட்டு விட்டனர். தினமும் கொல்லப்படுகின்றனர். இன்று 10 பேரளவில் கொல்லும் அளவிற்கு எதிரி துணிந்து விட்டான். ஆனால் நாம் அது பற்றி அலட்டிக் கொள்வதில்லை.

இத்தனை மக்கள் படுகொலைகளைச் சிங்கள அரசு செய்து ஆக்கிரமித்தபோதும் அதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல், புலிகளுக்கு ஏற்படும் நெருக்கடிகளைப் புரிந்து கொள்ளாமல், வெற்றிச் செய்திக்காக காத்து நிற்பதும், அது கிடைக்காவிடின் கோபம் கொள்வதும் நியாயமானதா?

இன்றைக்கு வன்னியில் ஒழுங்கான உணவில்லை. அழுகிய உணவுகளில், அழுகிய பகுதியைத் தூக்கி எறிந்து விட்டு, மற்றய பகுதியைத் தான் மக்கள் சாப்பிடும் அளவிற்கு பொருளாதாரப் பஞ்சம். அடுத்த வேளை உயிரோடு இருப்பமோ என்ற பயம். மருத்துவ சேவைகளைத் தொடர்ந்து வழங்க முடியா நிலை. அப்படி வழங்கினாலும், எத்தனை காலத்திற்கு தடைகளின் மத்தியில் நின்று வழங்க முடியும்?

இன்றைக்கும் மக்களைக் கொன்று சிங்கள தேசம் வன்னி மண்ணை ஆக்கிரமிக்க நினைக்கின்றது என்றால், அது புலத்தமிழனின் பிரச்சாரத் தோல்வியால் கிடைத்தாகும். நாம் மனித உரிமைகள் பற்றிய விடயங்களில் இராச தந்திரத்தோடு நடவாமையும், சிங்கள அரசுக்குப் பதிலளிக்காமையும், எம் போராட்டம் பற்றி, எம்மைப் பற்றித் தவறாக வருகின்ற செய்திகளுக்கு எவ்வித்ததிலும் மறுப்பினை நாம் கொடுத்தது கூட இதுவரை காலமும் கிடையாது. அதற்கான வரலாற்றினைக் குறித்த பத்திரிகைக்கு ஆதாரங்களுடன் அனுப்பியதுமில்லை.

ஒரு மனித உரிமை பற்றிக் கதைக்கும்போது, அங்கே புலிக்கொடியைத் தூக்கி முன்நிறுத்தினோம். அது தமிழீழ அங்கிகாரத்தை நாம் கேட்பதாக மாற்றியது. அங்கே நாம் கதைக்க முனைந்த மனிதஉரிமை வாதம் தோற்றுப் போனது.உண்மையில் தமிழீழக் கொடியை மற்றவர்கள் நின்று உயர்த்திப் பிடிக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.

ஒவ்வொரு உடல்களையும் கோராமாகப் பார்க்கின்றபோது நெஞ்சம் எல்லோருக்கும் கனத்துத் தான் போகின்றது. முரசுமோட்டையில் ஆங்கிலப்புதுவருடத்திற்கு சில தினங்கள் முன்பு கொல்லப்பட்ட ஒரு அப்பாவிப் பொதுமகனின் நெஞ்சுக் கீழே இல்லாத உடல் ஒவ்வொரு நிமிடமும் நினைவில் வந்து ஏதோ பாரத்தை ஏற்படுத்தித் தான் நிற்கின்றது. இக்களத்தின் சகோதரி ஒருத்தி ஒரு வாரத்தில் 2 பேரை இழந்து நிற்கின்றபோது, ஆறுதல் சொல்ல வார்த்தை வரவில்லை.

ஆனால் இத்தனை தூரம் சிங்கள அரசு தமிழனுக்குச் சவால் விடுகின்றபோது, அச் சவால்களை எதிர்கொள்ள வேண்டியது தேவையானது. இன்றைக்கு இப்படி மக்களைக் கண்மூடித்தனமாகக் கொன்று அதன் மீது வெற்றிக் கொடி நாட்டுகின்ற சிங்கள அரசோடு நாம் எப்படி வாழ முடியும்?

ஒன்றுமறியாத அப்பாவிகளான மலையகத்தின் திருமணமாகத தமிழ் இளம்பெண்களுக்கு பலவருடங்களாகக் கருத்தடை செய்வித்தும், குழந்தைகளுக்கு சிங்களக் கல்வியையும் போதித்து அம்மக்களைச் சிங்களவர்களாக மாற்ற முனையும் சிங்கள தேசம், எம் மக்களைத் தமிழ் மக்களாக வாழவிடுமா??

தினமும் ஒவ்வொரு தமிழனும் கொல்லப்படும்போது, அது புலத்தமிழனின் நெஞ்சில் அறையப்படும் ஆணியாக நினையுங்கள். நாம் செய்கின்ற பிரச்சாரத் தோல்வியால் தான் இம்மக்கள் கொல்லப்படுகின்றான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நாம் இன்னும் போராட வேண்டும்

என்ன தான் கத்தினாலும் உலகம் பார்க்கின்றது இல்லையே என்ற வருந்துகின்றார்கள் சிலர். ஆனால் 30 வருடமாக இந்த உலகை நோக்கித் தலைவன் போராடுகின்றான். அவனின் இடைவிடாத பயணத்துக்கு எம்மால் ஈடுகொடுக்க முடியாவிட்டாலும், பின்தொடர்ந்தாவது போய்த் தோள் கொடுக்கலாமே.

தலைவரைப் பற்றித் தெரிந்தவர்கள் போராட்டம் செல்லும்பாதை பற்றிக் கவலைப்படமாட்டார்கள். அவர் மீது நம்பிக்கை கொண்டிருந்தால், அது பற்றி எல்லாம் அலட்டிக் கொண்டிருக்கத் தேவையுமில்லை.

எம்முடைய இலக்கு, இம்மக்களைக் காப்பாற்றுவது மட்டுமில்லாமல், இதர சுமைகளைக் கொடுக்காமல் இருப்பது தான். அந்தக் சுமைகளை நாம் பொறுப்பெடுப்பது தான் இதற்கான வழியுமாகும்.

அடுத்தவன் செய்வான் என்ற யாருமே தயவுசெய்து தவிர்க்காதீர்கள். எல்லோரும் அப்படி நினைப்பதால் தான் ஒரு செயற்திட்டத்தில் அதிகளவு மக்களைக் காணமுடியவில்லை. மனச்சாட்சிக்கு ஏற்ப எழுவோம்.. வாருங்கள்...

இத் தருணத்தை நாம் விட்டால், எத் தருணத்திலும் நாம் எழ முடியாது.

உலகத்தை நாம் அணுகுமுறையில் உள்ள குறைகள் திருத்தப்படவேண்டும்..

அதனால் தான் இன்றுவரை எமது போரட்டம் உலகின் கண்களில் கொண்டு செல்லப்பட்டும் எமக்கு அனுதாபமோ ஆதரவோ முழுமையாக கிடைக்காமால் அழிக்கப்படவேண்டிய இனம் அல்லது அழிந்தாலும் கண்டுகொள்ளாத படுமோசமான நிலையை அடைந்துள்ளது. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை..

ஒரு மனித உரிமை பற்றிக் கதைக்கும்போது, அங்கே புலிக்கொடியைத் தூக்கி முன்நிறுத்தினோம். அது தமிழீழ அங்கிகாரத்தை நாம் கேட்பதாக மாற்றியது. அங்கே நாம் கதைக்க முனைந்த மனிதஉரிமை வாதம் தோற்றுப் போனது.உண்மையில் தமிழீழக் கொடியை மற்றவர்கள் நின்று உயர்த்திப் பிடிக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.

Edited by KUGGOO

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் எழுதிய ஆக்கம் வரவேற்கத்தக்கது.இன்றைய கால கட்டத்தில் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.