Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் போரை நிறுத்துமாறு சொல்ல இந்திய அரசுக்கு முதுகெலும்பு இல்லை--ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி

Featured Replies

இலங்கையில் போரை நிறுத்துமாறு சொல்ல இந்திய அரசுக்கு முதுகெலும்பு இல்லை என்றும், இலங்கைக்கு இராணுவ உதவி செய்யும் இந்திய அரசை தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என்றும் வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தமிழக வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் மேலும் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் இலங்கை அகதிகளிடம் நான் பேசியபோது அங்குள்ள பெண்களும் வயதானவர்களும் தாங்கள் அனுபவித்த துன்பத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

அதைக் கேட்டு என் நெஞ்சம் கனத்துப் போனது. நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு சென்றிருந்தபோது, அங்கு ஆன்மீகக்கூட்டங்களின் மூலம் புலிகளுக்கு அறிவுரை சொல்லியிருந்தேன்.

பலம் உள்ளபோதே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுங்கள். எல்லா பலத்தையும் இழந்த பிறகு எந்தப் பலனும் இருக்காது என்றேன்.

எனவே பேச்சுவார்த்தையை தொடங்குங்கள் என்று பல வழிகளில் சொன்னேன். எந்தப் போரையும் யுக்தியால்தான் வெல்ல முடியும் என்றும் மகாபாரதத்தை உதாரணமாக முன்வைத்து அவர்களிடம் எடுத்துச் சொன்னேன்.

ஈழப் பிரச்சினையில் இங்குள்ள நமது அரசியல்வாதிகளின் செயல்பாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை. இலங்கைக்கு குருஜி வந்தால் இங்குள்ள மக்களுக்கு நம்பிக்கை கிடைக்கும் என்று அங்குள்ள பல தரப்பினரும் நம்புகிறார்கள். எனவே விரைவில் நான் இலங்கைக்கு அமைதித் தூதுவராகச் செல்லவிருக்கிறேன்.

இலங்கைக்கு அமைதி தூதராகச் செல்ல நான் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. ஒரு வீடு தீப்பற்றி எரியும்போது, "என் வீட்டை அணைக்க வாருங்கள்" என்று யாராவது அழைப்பார்களா? சுனாமி வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது யாரைக் கேட்டு உதவிகளை நாங்கள் செய்தோம். அங்கே ஓர் இனம் அழிந்து வருகிறது. அதைத் தடுக்க முயற்சிக்கிறேன்.

எங்கே துயரம் நடைபெற்றாலும், அந்தத் துயரத்தை துடைக்க வேண்டும் என்பது மனிதனின் கடமை. அதைத்தான் நான் செய்கிறேன்.

நான் தூதுவராகச் செயல்படுவதை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளுமா என்று சிலர் கேட்கிறார்கள். அமைதிக்கான ஒரு முயற்சியை நான் மேற்கொள்ளும்போது இப்படியொரு சந்தேகம் நமக்கேன் வரவேண்டும்? முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை. தற்போது அரசியல்வாதிகளை விட ஆன்மீகவாதிகளைத்தான் மக்கள் அதிகம் நம்புகிறார்கள். காரணம், அரசியல்வாதிகள் சுயநலவாதிகள். ஆன்மீகவாதிகள் மக்களின் நலனை மட்டும் பார்ப்பவர்கள். எங்களிடம் பரந்த மனப்பான்மை உள்ளது.

நான் அமைதித் தூதுவராக இலங்கை சென்றால் அதிகாரத்தால் ஒருநாளும் அமைதியைக் கொண்டு வரமுடியாது என்பதை இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் புரிய வைப்பேன்.

இலங்கை ஒரு புத்தமத நாடு. அங்குள்ள ஒருசிலரைத் தவிர வேறு யாரும் போரை விரும்பவில்லை. நான் இலங்கை சென்று அங்குள்ள புத்த பிக்குகள், ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் முக்கிய அரசியல்வாதிகளைச் சந்தித்து இதை உணர வைப்பேன்.

இலங்கை பிரச்சினையைப் பொறுத்தவரையில் இந்திய அரசுத் தரப்புக்கு தெளிவானதொரு கொள்கை இல்லை. போரை நிறுத்துங்கள் என்று சொல்வதற்கே இந்த அரசுக்கு முதுகெலும்பு இல்லை. இலங்கைக்கு இந்தியா இராணுவ மற்றும் ஆயுத உதவிகளைச் செய்து வருகிறது. இதை முடிமறைத்து மக்களை ஏமாற்ற முடியாது. இதற்காக இந்திய அதை மிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் ஈழத்தில் போரை நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் இந்திய அரசு செய்ய வேண்டிய முதல் வேலை. அதன் மூலம் ஈழத் தமிழர் களைக் காப்பாற்ற வேண்டும். மேலும் பேச்சுவார்த்தை மூலம் நல்ல தீர்வுகாணவும் இந்திய அரசு முன்வர வேண்டும்.

http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் போரை நிறுத்துமாறு சொல்ல இந்திய அரசுக்கு முதுகெலும்பு இல்லை என்றும், இலங்கைக்கு இராணுவ உதவி செய்யும் இந்திய அரசை தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என்றும் வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி கூறியுள்ளார்.

இலங்கையில் போரை நடத்துவதே இந்தியாதான் என்கிறது குரு ஜீ இற்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன். பாவம், யாராச்சும் சொல்லுங்கப்பா !!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.