Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டென்மார்க்கில் உறவுகளுக்கான உணர்வுமிக்க உயிர்காக்கவேண்டி நிற்கும் நோன்பு|

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sultestrejke mod Sri Lankansk statsterrorisme

~உண்ணா நோன்பல்ல உறவுகளுக்கான உணர்வுமிக்க உயிர்காக்கவேண்டி நிற்கும் நோன்பு|

இலங்கை அரச பயங்கரவாதத்துக்கு எதிராக உண்ணாநோன்பு

காலம் : 03.02.2009 ஆர. நேரம் 8.00 மு.காலம்: 04.02.2009

ஆ.இடம் :Skt Knud Lavards Kirke, Lyngbyg aardvej, Lyngby - DK.

மு.இடம் : Foran Folketinget.

அன்பார்ந்த தாய்த் தமிழகமே! உலகத் தமிழ்மக்களே!! எம் டென்மார்க் உறவுகளே!!!

வன்னி பெருநிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் நோக்கில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ள இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் காரணமாக இன்று நூற்றுக் கணக்கான அப்பாவிமக்கள் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துமுள்ளனர். தமிழின அழிப்பின் ஒரு அங்கமாக விமானத் தாக்குதல்களையும் பீரங்கித் தாக்குதல்களையும் மற்றும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களையும் தமிழ்மக்கள் இடம்பெயர்ந்து வாழும் பகுதிகளில் சிங்களப்படை மேற்கொண்டு வருகின்றது.

வன்னிப்பகுதி மீதான பொருளாதாரத் தடைகள், அந்தப்பகுதியின் மீதான எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்கள், இத்தாக்குதல்களில் காயமடையும் மக்களுக்கு சிகிச்சையளிக்க வன்னி வைத்தியசாலைகளில் மருத்துவ வசதியில்லாத நிலை போன்றவற்றால் வன்னியில் வாழும் இலட்சக்கணக்கிலான மக்களின் வாழ்வு இன்று ஒரு கேள்விக்குறியாகி நிற்கின்றது.

இலங்கை அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயத்தில் தங்கியிருந்த மக்கள்மீது தாக்குதல் நடாத்தி அவர்களின் உயிர்களை பறிக்கின்றதன் மூலமாக சிறிலங்கா அரசு மீண்டும் மீண்டும் உலகத்தை ஏமாற்றியுள்ளமை நிரூபணமாகின்றது. ஆகவே கீழ்வரும் கோரிக்கைகளை முன்வைத்து எமது உண்ணா நோன்பை ஆரம்பித்துள்ளோம்.

தமிழ் இன அழிப்பை நோக்கமாகக்கொண்டு அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களை நாம் வன்மையாக கண்டிப்பதோடு, வன்னிப்பகுதி மீதான விமான மற்றும் எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா அரசு உடன் நிறுத்தவேண்டும்.

ஐ.நா வின் மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கையில் நிறுவப்பட வேண்டும்.

சர்வதேச தொண்டு நிறுவனங்களை வன்னிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

இந்தியா உடனடியாக இலங்கையிலிருந்து தன் துருப்புக்களை திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடர் போன்ற உதவிகளைச் நிறுத்தவேண்டும். இதனை டென்மார்க் உட்பட ஐரோப்பிய ஒன்றியமும் கண்டிக்க வேண்டும்.

உடனடியான யுத்தநிறுத்தமும், அதைத்தொடர்ந்து நோர்வேயினூடு நின்றுபோன அரசியல் பேச்சுவார்தையினை ஆரப்பிக்கவேண்டும்.

தமழ் மக்களின் சுய நிர்ணய உரிமை அங்கிகரிக்கப்படவேண்டும்.

டென்மார்க் வாழ் தமிழ்மக்களின் கோரிக்கையாக, டென்மார்க் நாடாளுமன்றிடமும் ஐரோப்பிய நாடாளுமன்றிடமும் ஐ.நா சபiயிடமும் நீதி கேட்டு இந்த உண்ணா நோன்பினூடு கேட்டுக்கொள்கின்றோம்.

தர்மகுலசிங்கம் தருமன் Maagevej43, 6600 Vejen, Dk.

அல்றின் சூசைப்பிள்ளை Skt Knud Lavards Kirke, Lyngbyg aardvej, Lyngby - DK.

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.