Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் பாடசாலைகளை காலவரையறையின்றி மூட உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் பாடசாலைகளை காலவரையறையின்றி மூட உத்தரவு

[02 - February - 2009]

*இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் பெப்.4 ஹர்த்தால் சட்டத்திற்கு முரண்; தமிழக அரசு அறிவிப்

இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக தமிழக மாணவர்கள் நடத்தும் போராட்டங்கள் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருவதாலும் தீக் குளிப்பு முயற்சிகள் அதிகரித்து வருவதாலும் தமிழகத்திலுள்ள சகல அரச, தனியார் பாடசாலைகள் மற்றும் அவற்றோடிணைந்த விடுதிகளை காலவரையறையின்றி மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதுடன், எதிர்வரும் 4 ஆம் திகதி தமிழகம் முழுவதும் நடத்தப்படவுள்ள ஹர்த்தால் சட்டவிரோதமானதெனவும் அறிவித்துள்ளது.

இலங்கையில் நடைபெறும் தமிழினப் படுகொலைகளை கண்டித்தும் இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவிகளை வழங்கக்கூடாதென வலியுறுத்தியும் தமிழக மாணவர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் இலங்கைத்தமிழரை பாதுகாக்கக்கோரி கடந்த வியாழக்கிழமை முத்துக்குமார் என்பவர் தீக்குளித்து உயிர் நீர்த்ததையடுத்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் கொதித்தெழுந்து போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையிலேயே மாணவர்களின் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைவதாலும் மாணவர்களிடையே அமைதியின்மை நிலவுவதாலும் மாணவர் கிளர்ச்சி மேலும் பரவாமல் தடுப்பதற்காகவுமே தமிழகத்திலுள்ள சகல அரச, தனியார் கல்லூரிகளையும் மூடுமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு தலைமைச் செயலர் கே.எஸ். ஸ்ரீபதி தெரிவித்தார்.

பூரண ஹர்த்தால் சட்டத்திற்கு முரண்

இதேவேளை, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் எதிர்வரும் 4 ஆம் திகதி நடத்த உத்தேசித்துள்ள ஹர்த்தால் சட்டவிரோதமானது என்று தமிழக அரசு கூறியுள்ளது. இந்த ஹர்த்தாலின் போது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடைஞ்சல் ஏற்படாமலும் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இலங்கைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ளதை எதிர்த்து, இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சனிக்கிழமை சென்னையில் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தியது.

இந்த இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், பா.ம.க. நிறுவுனர் ராமதாஸ், பா.ஜ.க. தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் இலங்கையில் போர்நிறுத்தம் கோரியும் தமிழர்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் 4 ஆம் திகதி ஹர்த்தால் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும் 7 ஆம் திகதி கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தநிலையில், இந்த முழு அடைப்பு போராட்டம் சட்டவிரோதமானது என்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு சார்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் எதிர்வரும் 4 ஆம் திகதி ஹர்த்தால் ஒன்றை தமிழகம் தழுவிய அளவிலே நடத்தவிருப்பதாக பத்திரிகைகளில் அறிவிப்பு கொடுத்துள்ளார்கள். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தற்போது ஹர்த்தால் நடத்துவது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும் எங்கும் யாரும் ஹர்த்தால் நடத்தக்கூடாதென்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேது சமுத்திரத்திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் ஹர்த்தால் நடத்தியதாக அ.தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்திலேயே அது குறித்து வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு இன்னமும் நிலுவையிலே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த ஹர்த்தால் நடைபெறவில்லை என்பதும்தான் உண்மை.

இந்தச்சூழ்நிலையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் எதிர்வரும் 4 ஆம் திகதி முழு ஹர்த்தால் நடத்துவதாகக் கூறியிருப்பது சட்டப்படி உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. எனவே இந்தப்பிரச்சினையில் தமிழக அரசு சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் அத்தியாவசியப் பொருட்களின் பரிமாற்றத்துக்கும் எந்தவிதமான இடைஞ்சலும் ஏற்படாமல் அரசு சட்டப்படி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது.

தற்கொலைகளை தடுக்க பொலிஸார் குவிப்பு

இதேவேளை, முத்துக்குமார் தீக்குளித்ததைப்போன்று மேலும் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும்பொருட்டு, சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலக வளாகங்களில் பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை சாஸ்திரிபவனில் முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து உயிர் நீத்தார். இதையடுத்து சென்னையில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பாதுகாப்பை அதிகரிக்க மாநகர பொலிஸ் ஆணையர் ராதகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் முன்பும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

எழும்பூர் கென்னத் சந்தியில் உள்ள தபால் அலுவலகம் மற்றும் அதன் அருகில் உள்ள இலங்கை சுற்றுலா விடுதி முன்பு பெண்பொலிஸார் உள்ளிட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இவைதவிர, சாஸ்திரிபவன், பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜிபவன், அகில இந்திய வானொலி நிலையம், ரிசர்வ் வங்கி, தேனாம்பேட்டை கணக்காய்வாளர் நாயகம் அலுவலகம் உட்பட பல மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபடுகிறவர்களைத் தடுப்பதற்காக பொலிஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுகிறவர்களை உடனடியாகக் கைது செய்யவும் பொலிஸாருக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

http://www.thinakkural.com/news/2009/2/2/m...s_page67094.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.