Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களம் முன்னெடுக்கும் பிரச்சாரங்களும், பதிலளிக்கவேண்டிய கேள்விகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சிங்கள அரசு தமிழ்மக்களின் வாழ்வாதரத்தைப் பறிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வண்ணம் பிரச்சாரம் செய்து வருகின்றது. அவற்றுக்கு நாம் தெளிவான பதிலை வழங்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். நேற்று கனேடிய வானொலி ஒன்றில் இது பற்றிய கலந்துரையாடல் போனபோது, அது பற்றிய பிரச்சாரங்களுக்கு மபததிலளிக்க நாம் எம்மைத் தயார்பபடுத்த வேண்டும் எனத் தோன்றியது.

குறித்த வானொலித் தொகுப்பாளர் எமக்கு ஆதரவாகப் பதிலளித்தாலும், அவர் கூட வரலாற்றினை முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கவில்லை.

-------------------------------------------------------

சிங்கள அரசு செய்யும் பிரச்சாரங்கள்

1. ஈழத்தில் நடப்பவை, புலிகளின் பிரச்சனை என்றே அவர்கள் கதைக்கின்றார்கள். 83ம் ஆண்டிற்குப் பிறகே ஈழப்பிரச்சனை தொடங்கியதாகப் பிரச்சாரம் செய்கின்றார்ககள்:

குறித்த தொகுப்பாளர் சிங்களமொழிச்சட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, சிங்களவர்களுக்காகப் பேசியவர் திக்குமுக்காடிப் போனார். நீங்கள் யாராவது பதிலளிப்பவர்களாக இருந்தால், செல்வநாயகம் அகிம்சை வழியில் போராடியது, அவர் துன்பப்பட்டது. அவர் தமிழீழம் தான் இறுதித்தீர்வு என்று சொன்னது என்பவற்றைக் கட்டாயம் சொல்லுங்கள்.

83ம் ஆண்டுக்கு முன்பே 82ம் ஆண்டு யாழ்நுலாகம் எரிக்கப்பட்டதையும் நினைவுபடுத்துங்கள். அவ்வாறே தமிழராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்ட தமிழ்மக்கள் தொடர்பாகவும் சொல்லுங்கள்.

2. ஆங்கிலேயர் தான் இலங்கையை ஒன்றுபடுத்தி வைத்திருந்தனர், அதற்கு முதல் போத்துக்கேயர் போன்றோர், தனித்தனியாகத் தான் வைத்திருந்தனர் என்று தமிழர் ஒருவர் விவாதம் செய்தபோது, அதற்குப் பதிலளித்த சிங்களவர் தமிழர் தமிழகத்தில் தான் ஆண்டார்கள். இலங்கையில் அல்ல என மறுப்புச் சொன்னார்:

அதற்கு வரலாற்று ஆதாரங்களை நாம் காட்ட வேண்டும். (யாரிடமாவது இருந்தால் இங்கு பதிக) சங்கிலி அரசன் பற்றியும், பண்டாரவன்னியன், குளக்கோட்டான் பற்றியும் மனதில் வந்ததைச் சொல்லுங்கள்..

3. தமிழர்கள் பலர் கொழும்பில் இருக்கின்றனர் என்பதால் சிங்கள அரசுக்குப் பயமில்லை. புலிக்குத் தான் பயம் என்று சிங்களப் பெண்மணி ஒருத்தி கதைத்தார்:

உண்மையில் எப்போது கொழும்புக்குத் தமிழ்சனம் பெருமளவில் குடிபுகுந்தார்கள் என்றால், 95ம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சிறிலங்கா அரசு ஆக்கிரமித்த பின்னர் தான். வன்னிக்குக் கடல்மார்க்கமாகப் போக அன்று முடியததால், யாழ்ப்பாணம் சென்ற அவர்கள், பின்னர் அங்கு 600 வரையிலான தமிழ்மக்கள் பிடித்துச் சென்று சிறிலங்கா அரசால் கொல்லப்பட்டதாலும், புலிகளின் பகுதிகள் மீது தொடர்ச்சியான குண்டுத்தாக்குதல்களைச் சிங்கள அரசு செய்வதாலும் தான் வேறு வழியின்றி கொழும்புக்கு தமிழ் மக்கள் குடிபெயர்கள் என வாதிடுங்கள். அத்தோடு, கொழும்பில் கனடா(நீங்கள் வசிக்கும் நாட்டினைச் சொல்க) போன்ற மனித உரிமைகள் மதிக்கும் தூதரகங்கள், ஐநா போன்றவை கொழும்பில் இருப்பதால், யாழ்ப்பாணத்தை விடக் கொழும்பு பாதுகாப்பானது எனப் பல தமிழ்மக்கள் கொழும்புக்கு இடம்பெயர்ந்தார்கள் என வாதிடுங்கள்.

இப்போதும் கூடப் புலிகளின் பகுதிகளுக்குச் செல்லமுடியாமல் குண்டுத் தாக்குதல்களையும், படுகொலைகளையும் மேற்கொள்வதால் தான், அங்கே தமிழ்மக்கள் போக முடியாமல் இருக்கின்றார்கள் என வாதிடுங்கள்.

4. தமிழர்களைப் புலிகளோ கொன்றதாக வாதிடுவார்கள். அதற்கு லக்சம் கதிர்காமரையும், நீலன் திருச்செல்வத்தையும் இழுப்பார்கள்.: இதற்கு முகத்தில் அறைந்தது போலப் பதிலளிக்க வேண்டும்.

அ. லக்மன் கதிர்காமர் கொலை, தொடக்கம், நீலன் வரையிலான படுகொலைகளுக்கு என்னும் தீர்ப்பினைச் சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றங்கள் கூடப் புலிகளைக் குற்றவாளிகளாக இனம் காட்டவில்லை என வாதிடுங்கள். இவர்களுக்குள்ள அரசில் போட்டியால் தான் கொல்லப்பட்டதாக வெளிப்படுத்துங்கள்.

ஆ. இப்படியான சில கொலைகளைக் காட்டுவதன் மூலம், 1 லட்சம் வரையிலான தமிழ்மக்களைச் சிங்கள அரசு கொன்றதை மறைக்கப் பார்க்கின்றார்கள் என முகத்தில் அடியுங்கள்.

5. ராஜிவ் கொலை பற்றிய பிரச்சனை இழுப்பார்கள்: அது பற்றிப் பதிலளிக்கும்போது, இலங்கைக்கு அவர் வந்தபோது சிங்களச் சிப்பாய் ஒருவர் அவரை அடித்துக் கொல்ல(கொல்ல என்பது முக்கியம்) முயன்ற விடயத்தை வேணுமென்றால் படுகொலைக்குச் சம்பந்தப்படுத்துங்கள். தன் தொடர்ச்சியாகத் தான், கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகங்களைக் கிளப்புங்கள். அத்தோடு, தமிழக அரசியல்வாதிகள் அவரை வரவேற்கப் போகாது இருந்ததையும் சம்பந்தப்படுத்துங்கள். எனவே புலிகள் மீதான பழிவாங்கலாகவே அது பாவிக்கப்படுவதாக பலரும் சந்தேகம் கொண்டுள்ளார்கள் என வாதியுங்கள்.

6. மக்கள் படுகொலை தொடர்பான காணொளிகள் நாடகம் என வாதிடுகின்றனர்:

பல இடங்களில் உயிரைக் கொடுத்து அவர்கள் படம் பிடிக்கின்றார்கள். அதைச் சர்வதேசத்திற்கு காட்ட வேண்டும் என்பதற்காக... அங்கே மக்கள் மரணித்து பல காணொளிகளில் உடலின் பல பகுதிகள் சிதறுண்டதும் பிடிக்கப்பட்டன. அவை எல்லாம் பொய்யா என ஆதாரங்களோடு கேளுங்கள்.

சொந்த மக்கள் மீதே குண்டு போடுகின்ற அரசு இலங்கையரசு தான் எனவும் சொல்லுங்கள். உலகத்தில் வேறு எந்த நாடும் அப்படிச் செய்வதில்லை என்பதையும் கூறுக.

சில விடயங்களில் நாம் உண்மை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. தமிழர்களைக் கொன்று விட்டு தமிழர்கள் மீதே பழி போடுகின்ற செயலைச் சிங்கள அரசு செய்கின்றபோது, நாங்களும் அதறகேற்ற விதத்தில் நடந்து தானே ஆக வேண்டும்.

அவர்கள் செய்கின்ற பிரச்சாரங்களுக்கு ஏற்ப நாமும் எம்மைத் தயார்படுத்த வேண்டும்.

Edited by தூயவன்

இங்குள்ள எமது எம்பியை தொடர்பு கொண்டு தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் போர்நிறுத்தத்திற்க்கு ஆதரவு தருமாற் கேட்டதிற்க்கு, அவர் கூறிய பதில், புலிகள் தமிழர்களை பணயக்கைதிகளாக பிடித்து வன்னியில் வைத்திருக்கிறார்கள், இலங்கை அரசாங்கம் சொல்வது போல் அவர்களை விடுவித்தால் உயிர் இழப்புக்களை இல்லாமல் செயலாம் என்கிறார். மேலும் கடிதம் ஒன்று தனக்கு அனுப்பும்படி கேட்கிறார். அவருக்கான பதில் என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப் பணயக் கைதிகளாகப் புலிகள் பிடித்து வைத்திருக்கின்றார்கள் எனில், அந்த மக்கள் மீது ஏன் சிறிலங்கா அரசு குண்டுத்தாக்குதல்களை நடத்திக் கொல்கின்றது என்று கேளுங்கள்?? அம் மக்களை இலங்கை மக்களாக சிறிலங்கா அரசு நினைக்கவில்லையா?? ஜேவிபி கலவரம் செய்தபோது விமானத்தில், பீரங்கியில் சிங்கள மக்கள் வசித்த பிரதேசங்கள் மீது குண்டு போடவில்லையே என்றும் கேளுங்கள்.

அத்தோடு சிறிலங்கா அரசிடம் சரணடைந்த மக்கள் பலர் கொல்லப்பட்டதாக பல ஊடகங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன. அத்தோடு ஆயிரம் பேரே உள்ளதாகச் சிறிலங்கா அரசால் சொல்லப்படும் புலிகளால் எப்படி, 3 லட்சம் மக்களைப் பயணக் கைதியாகப் பிடித்து வைத்திருக்கிருக்க முடியும் எனவும் கேள்வி எழுப்புங்கள்.

அந்த ஆயிரம் புலிகளை அழிக்க, பொதுமக்கள் மீது ஏன் குண்டுத் தாக்குதல் செய்கின்றீர்கள் எனக் கேள்வி எழுப்புங்கள். அத்தோடு சிறிலங்கா அரசினால் கடத்தப்பட்ட தமிழ் மக்கள் பலரின் விபரங்களையும் சொல்லுங்கள்.

சில விடயங்கள் சொல்லும்போது, மனித உரிமை அமைப்பு, ஐநா, போன்றவற்றின் தகவல்களைச் சொன்னால், வாதம் வலுவாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.