Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பு வலய பகுதியில் தாக்குதல் நடத்தக் கூடாது : இலங்கை அரசிடம் இந்தியா அவசர கோரிக்கை

Featured Replies

பாதுகாப்பு வலய பகுதியில் தாக்குதல் நடத்தக் கூடாது : இலங்கை அரசிடம் இந்தியா அவசர கோரிக்கை

படையினருக்கும், புலிகளுக்குமிடையேயான மோதல்களில் இடையில் சிக்குண்டுள்ள பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு இலங்கைக்கு இந்தியா அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. இலங்கையில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையேயான மோதல்களில் சிவிலியன்கள் இரையாகாதிருப்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும். அத்துடன், புலிகளுக்கும் தமிழ் மக்களுக்குமிடையே வேறுபாட்டை பிரித்தறிந்து பார்க்க வேண்டும்

என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். பயங்கரவாத இயக்கமான புலிகள் மீது எந்த வித அனுதாபமும் கிடையாது என்றும் முகர்ஜி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வலயங்கள் உள்ளடங்கிய பிரதேசத்தில் இலங்கை படையினர் தாக்குதல் எதனையும் மேற்கொள்ளாது, புலிகளையும் தமிழ் மக்களையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். புதுடில்லியில் ஞாயிறன்று நடைபெற்ற காங்கிரஸ் கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே பிரணாப் முகர்ஜி மேற்கண்டவாறு கூறினார். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உட்பட ஆயிரக்கணக்கான காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொண்ட மேற்படி கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கூறுகையில்,"புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம். அது இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. வருடாந்தம் நாம் புலிகள் அமைப்பை தடை செய்து வருகிறோம். அத்துடன், புலிகள் தலைவர் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறும் கோரி வருகிறோம். அண்மையில் எனது கொழும்பு விஜயத்தையடுத்து 48 நேர போர் ஓய்வை அறிவித்து இலங்கை அரசாங்கம் புலிகளின் பகுதிக்குள் இருக்கும் மக்களை பாதுகாப்பு பிரதேசத்துக்குள் வருமாறும், அவர்களுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு வழங்கமுடியும் என்றும் அறிவித்திருந்தது.

பாதுகாப்பு வலய பகுதிக்குள் தாக்குதல் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும், மனிதாபிமான உதவிகள் அப்பாவிப் பொதுமக்களைச் சென்றடைய வழிசெய்ய வேண்டும் என்றும் நாம் கேட்டுக் கொண்டோம்" என்றார்.மேலும், ராஜீவ் காந்தியின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் முகர்ஜி கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, இலங்கையில் வடபகுதியில் சிவிலியன்கள் எதிர்நோக்கும் நெருக்கடி தொடர்பில் கலந்துரையாட டென்மார்க் வெளிவிவகார அமைச்சர் அழைப்பு விடுத்திருந்த போது, இதே கருத்தையே தாம் தெரிவித்ததாக முகர்ஜி கூறியுள்ளார்.

சிவிலியன்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடம்பெயர இந்தியா தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இந்தியா வழங்கியுள்ள நிவாரண உதவிகளை குறித்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதாக இலங்கை உறுதிஅளித்துள்ளதாகவும் பிரணாப் முகர்ஜி அங்கு மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

vanni_20090208002.jpgvanni_20090208001.jpg

அடிக்கிறதே நீங்கள் பிறகு ஆரையப்பா அடிக்கக்கூடாது எண்டு கதை விடுறியள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.