Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் இறுதி விமானத் தாக்குதலா?

Featured Replies

இது விடுதலைப்புலிகளின் இறுதி விமானத் தாக்குதல் அல்ல

புலிகளின் இறுதி விமானத் தாக்குதலா?

விடுதலைப் புலிகளின் விமானங்கள் இனிமேல் கொழும்புக்கு வரவே வராது என்றும் அவர்களின் அனைத்து விமான ஓடுபாதைகளும் கைப்பற்றப்பட்டு விட்டதாகவும் படைத்தரப்பு கூறியிருந்தது. ஆனால் இது முற்றிலும் தவறானது என்பதை புலிகளின் விமானங்கள் நேற்றுமுன்தினம் இரவு நிரூபித்திருக்கின்றன.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் புதுக்குடியிருப்புக்கு சற்று வடக்காக உள்ள இரணைப்பாலைப் பகுதியில் இருந்து புறப்பட்ட புலிகளின் இரண்டு இலகு ரக விமானங்கள் மாங்குளம் பகுதியில் ஏ9 வீதியைக் கடந்து மடு, சிலாவத்துறை ஊடாக மேற்கு கடற்பிரதேசத்துக்குள் பிரவேசித்தன.

அங்கிருந்து கற்பிட்டி வழியாக கொழும்புக்குள் இந்த விமானங்கள் வந்தன. இந்த விமானங்கள் வவுனியாவில் உள்ள ராடர் கருவிகளில் தெரிவதற்கு முன்னரே புதுக்குடியிருப்புக்கு அருகே நிலை கொண்டிருக்கின்ற தரைப்படையினரிடம் இருந்து, இது பற்றிய தகவல் இராணுவத் தலைமை யகத்துக்குச் சென்றிருந்தது. வவுனியாவில் உள்ள ராடர் கருவிகளில் விமானங்கள் தென்பட்டதுமே, கொழும்பு நகரம் இருளில் மூழ்கியது. விமான எதிர்ப்புப் பொறிமுறைகள் தயார்ப்படுத்தப்பட்டன.

வானத்தை நோக்கி விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் தாக்குதல் நடத்தின. விமானங்களைத் தேடி வானத்தில் தேடுதல் வெளிச்சம் பாய்ச்சி தேடப்பட்டது. இரவு 9.20 மணியளவில் புலிகளின் விமானங்கள் நீர்கொழும்பு வான்பரப்பில் தென்பட்டதுமே அவற்றின் மீதான தாக்குதல்கள் ஆரம்பமாகின. கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்பட்டது. விமானநிலையச் செயற்பாடுகள் பல மணிநேரம் ஸ்தம்பித்துப் போயின. இரவு 10.35 மணி முதல் அதிகாலை 2.25 வரையான காலப்பகுதிக்குள் ஹொங்கொங், பாங்கொக், சென்னை ஆகிய இடங்களுக்கான விமானங்கள் புறப்படுவதும் அங்கிருந்து வருவதும் இடைநிறுத்தப்பட்டன.

கட்டுநாயக்க பகுதியில் பாரிய குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அப்பகுதியில் புலிகளின் விமானம் குண்டுவீச்சு நடத்தியதா என்பதை படைத்தரப்பு உறுதி செய்யவில்லை. அதேவேளை, கொழும்பு நகருக்குள் பிரவேசித்த புலிகளின் விமானம் ஒன்று சேர் சிற்றம்பம் ஏ கார்டினர் வீதியில் விமானப்படைத் தலைமையகத்துக்கு முன்பாக உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மீது முதலாவது குண்டை வீசியது. பின்னர் இந்தப் பகுதியில் புலிகளின் விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

விமானத்தைப் புலிகள் கட்டடத் தொகுதி மீது மோதச் செய்ய முயன்றபோது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததா? அல்லது விமான எதிர்ப்புத் தாக்குதலில் விமானம் சேதமடைந்து விமானியின் கட்டுப்பாட்டை இழந்து மோதியதா? என்பது இப்பத்தி எழுதப்படும் வரை உறுதி செய்யப்படவில்லை. அதேவேளை, கட்டுநாயக்க விமானப்படைத் தளம் அருகே மற்றொரு விமானத்தை விமானப்படையின் எப்7 விமானங்கள் இரவு 10.45 மணியளவில் சுட்டு வீழ்த்தின. ஆனால், இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது இயந்திரக் கோளாறு ஏற்பட்டு வீழ்ந்து நொறுங்கியதா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

காரணம் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தால் விமானம் எரிந்து கருகி சிதைந்து போயிருக்கும். ஆனால், அத்தகைய தடயங்கள் எதையும் காணமுடியவில்லை. எனவே இது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்க சாத்தியமில்லை என்று கருதப்படுகிறது. விமானம் சதுப்பு நிலப்பகுதியில் விழுந்த போது முன்புறமும் விமானியின் அறைப்பகுதியும் சேதமடைந்திருக்கின்றன. இதன் வால் பகுதியில் 905 என்று இலக்கம் இடப்பட்டிருந்தது.

அத்துடன் விமானியின் சடலம் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் ஆசனத்தோடு இணைக்கப்பட்ட படியே அடையாளம் காணக்கூடிய நிலையில் உள்ளது. விமானம் விபத்துக்குள்ளாகப் போகின்ற நிலையில் விமானிகளைத் தூக்கியெறியும் தன்னியக்கப் பொறிமுறை போர் விமானங்கள், இலகு விமானங்களில் இருப்பதுண்டு. இது விமானிகள் உயிர் தப்புவதற்கான ஏற்பாடு. ஆனால் புலிகளின் விமானியின் ஆசனத்தோடு பரசூட் இணைக்கப்பட்டிருக்கவில்லை. எனினும் தன்னியக்க பொறிமுறை செயற்பட்டு விமானி தூக்கி வீசப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால் பரசூட் இணைக்கப்படாததால் அவர் உயிரிழந்திருக்கலாம்.

இந்த விமானத்துக்குள் வெடிபொருட்கள் பெருமளவில் இருந்ததாகப் படைத்தரப்பு தகவல் வெளியிட்டிருக்கிறது. அதேவேளை வான் கரும்புலித் தாக்குதலையே தாம் நடத்தியதாகப் புலிகள் கூறியுள்ளனர். விமானப்படைத் தலைமையகம் மற்றும் கட்டுநாயக்க விமானப்படைத் தளம் ஆகியனவே அவர்களின் இலக்குகளாக இருந்துள்ளன. இந்தத் தாக்குதலில் கேணல் ரூபன் மற்றும் லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோர் மரணமானதாக புலிகள் அறிவித்துள்ளனர். இவர்கள் முன்னர் கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் பங்கெடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை "விடுதலைப் புலிகளிடம் 3 இலகு ரக விமானங்களே இருந்தன. கடந்த செப்டெம்பரில் ஒன்றும் இப்போது இரண்டுமாக அனைத்து விமானங்களும் வீழ்த்தப்பட்டு விட்டன. எனவே இனிமேல் வான்புலிகளின் அச்சுறுத்தல் இல்லை' என்கிறது விமா னப்படை. ஏற்கனவே இதுபோன்று தான் புலிகளிடம் ஒரு ஓடுபாதை தான் இருக்கிறது என்றனர். பின்னர் இரண்டு என்றனர். ஆனால் கடைசியில் ஏழு ஓடுபாதைகள் கைப்பற்றப்பட்டதாக இராணுவத் தரப்பு உரிமை கோரியது. அதுபோன்றே முன்னர் புலிகளிடம் இரு விமானங்களே இருப்பதாக கூறிய விமானப்படை இப்போது 3 இருந்தது அனைத்தும் வீழ்ந்து விட்டனவென்று கூறுகிறது.

ஆனால் புலிகளின் வான் தாக்குதல் அச்சுறுத்தல் முற்றாக முடிந்து விட்டதா என்பது போகப் போகத்தான் தெரியவரும். அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பிரதேசங்களும் படையினரால் கைப்பற்றப்படும் வரையில் இதை உறுதிப்படுத்த முடியாது. புலிகள் மிகச் சிறிய நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டிருக்கின்ற நிலையிலும் இத்தகையதொரு வான் தாக்குதலை நடத்தியிருப்பது முக்கியமான விடயமாகப் பார்க்கப்படுகிறது. புலிகளின் விமானங்கள் இரண்டும் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதையிட்ட

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.