Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பிரச்சினையில் மெத்தனமாக செயற்பட்டதால் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தமிழகத்தில் சி.டி.பிரசாரம்

Featured Replies

இலங்கைத் தமிழர் மீதான தாக்குதலை தடுக்க தவறி மெத்தனமாக செயல்பட்டதால் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வாக்களியுங்கள் என்று வலியுறுத்தி நெஞ்சை உருக்கும் வலுவான காட்சிகள், புகைப்படங்கள், வசனங்களுடன் கூடிய சி.டி.க்கள் மூலம் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிரசாரம் நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் நலனை காங்கிரஸ் கூட்டணி அரசு பாதுகாக்க தவறியதாகவும் இதற்காக வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி டி.வி.டி.க்கள், சி.டி.க்கள் மூலம் ஈழத்தமிழர் ஆதரவு இயக்கங்கள் நூதன பிரசாரம் செய்து வருகின்றன.

“இனி என்ன செய்ய போகிறோம்?” என்ற தலைப்பில் 13 நிமிடம் ஓடும் அளவிற்கு உருவாக்கபட்டுள்ள இந்த சி.டி.யில் அப்பாவி தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தும் கொடூர தாக்குதல்கள், பாலியல் கொடுமைகள் தமிழர்கள் படும் துயரங்கள் பிஞ்சுக்குழந்தைகளின் அழுகுரல், கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களின் பிணக்குவியல்கள் என நெஞ்சை நெகிழவைக்கும் காட்சிகளும் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

சிங்கள விமான படையினர் பள்ளிக் கூடங்களின் மேல் ஈவு இரக்கமற்று குண்டு மழை பொழிவதையும், மாணவர்களும் அப்பாவி மக்களும் பதுங்கு குழிகளை தேடிச்சென்று உயிர் பிழைக்க ஓடுவதும், தாக்குதலுக்கு இலக்காகி சொந்த நாட்டை விட்டு அண்டை நாட்டுக்கு விரக்தியுடன் செல்லும் மக்களின் புலம்பல் என நெஞ்சையும் ரணமாக்கும் காட்சிகளுக்கு இடையே புகைப்படங்கள், உணர்ச்சி மிக்க வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

இதில் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த கோரி இந்தியஅரசையும் தமிழக அரசையும் வலியுறுத்தி இலங்கையிலும் தமிழகத்திலும் பொது மக்களும் , மாணவர்களும் நடத்திய போராட்ட காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட தீக்குளித்து இறந்த முத்துகுமாரின் இறுதி ஊர்வல காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த சி.டி.யின் இறுதியில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை புறக்கணிக்க வலியுறுத்தி உணர்ச்சி பெருக்குடன் பெண்குரல் ஓன்று ஒலிக்கிறது.

“தாய்தமிழகமே! ஆறரை கோடிதமிழர்கள் இருந்தும் தட்டிக் கேட்க நாதியற்றவர்களாய் ஈழத்தமிழனம் கூண்டோடு சிதைக்கப்படுவதைப் பார்த்தாயா? உங்கள் போராட்டங்கள் செவிடன் காதில் ஊதிய சங்காய் போக சிங்களவனின் வாதத்துக்கு ஆசி வழங்கி அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் அரசு செய்து வரும் நிலையில் இனி என்ன செய்யபோகிறோம்?

வாக்கு சீட்டு எனும் வரலாற்றை திரும்பும் ஒற்றைப் போராயுதம் உள்ளது என்று கூறி காங்கிரஸ் கட்சியையும் அதனுடன் கூட்டு சேரும் கட்சிகளையும் குற்றஞ்சாட்டும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

சென்னை, கோவை ,திருப்பூர்,ஈரோடு, நெல்லை, திருச்சி, விழுப்புரம் பகுதிகளில் அதிக அளவில் இவை வினியோகிக்கப்பட்டுள்ளன.

இந்த சி.டி.க்கள் மூலம் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு வேட்டு வைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த சி.டி.யை வினியோகிக்கும் நபர்களை உளவுத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

video

http://www.tamilwin.org/view.php?2a36QVZ4b...3g2hF0cc3tj0Cde

thanx

www.tamilwin.org

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ ஆதரவு பயணம் நிறைவு-சேலத்தில் மாநாடு

சேலம்: இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் குறித்து விளக்கியும், காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியும் கடந்த மாதம் 25ம் தேதி தஞ்சையில் தொடங்கி இளந்தமிழர் இயக்கத்தின் சார்பில் நடந்த தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம், சேலத்தில் நிறைவுற்றது.

சேலம் போஸ் மைதானத்தில் நடந்த இந்த மாநாட்டில் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன் என திரட்டப்பட்ட 1 லட்சம் கையெழுத்துகள் முன்வைக்கப்பட்டன. பெரியார் திகவின் இசைக்குழுவினர் இசை நிகழ்ச்சியுடன் மாநாடு ஆரம்பமானது.

மாநாட்டிற்கு இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், இளந்தமிழர் இயக்கம் கட்சி சாராது தமிழ் இனத்தின் நலம் சார்ந்த மாணவர், இளைஞர் அமைப்பாகவே விளங்கும் என்றும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களிக்காதீர் என்று விரிவாக பிரச்சாரம் நடத்தப்படும் என்றார்.

இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் நல்லதுரை, வழக்கறிஞர் செபா, ம.செந்தமிழன் உள்ளிட்டோர் உரையாற்றினர். பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவங்களையும் காங்கிரசுக்கு எதிராக மக்களிடம் உருவாகியுள்ள மனநிலை பற்றி எடுத்துக் கூறினர்.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, பசுமை விகடன் எழுத்தாளர் தூரன் நம்பி, ஓவியர் புகழேந்தி உள்ளிட்டோரும் பேசினர்.

ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமாரின் பாட்டி மற்றும் சீனிவாசனின் மனைவி ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முத்துக்குமாரின் கட்டளை எதுவோ அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என முத்துக்குமாரின் பாட்டி கண்ணீர் உரையாற்றினார்.

முத்துக்குமாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என இளந்தமிழர் இயக்கம் நிர்வாகக் குழுத் தீர்மானத்தை வழக்கறிஞர் நல்லதுரை அறிவித்தார்.

புலிகள் மீதான தடையை நீக்கி தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும், தமிழீழ ஆதரவாளர்கள் கொளத்தூர் மணி, சீமான் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- தட்ஸ் தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.