Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் தீயினில்

Featured Replies

அரியலூர்: இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இருவர் தீக்காயத்திற்குப் பலியாகினர்.

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை அடுத்த தத்தனூர் கீழவிழியைச் சேர்ந்த பாமக தொண்டர் ராஜசேகர் (30). இலங்கைத் தமிழர்கள் படுகொலையை நினைத்து பெரும் வேதனையில் இருந்து வ்நதார்.

ஈழத் தமிழர்களுக்காக தீக்குளிப்பேன் என்றும் அவரது வீட்டில் கூறி வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார், ராஜசேகரனை சமாதானப்படுத்தி சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்.

ஆனால் திடீரென ஞாயிற்றுக்கிழமை மாலையில் தனது வீட்டு வாசல் முன்பாக ராஜசேகர் தீக்குளித்து விட்டார்.

உடல் முழுவதும் கருகிய நிலையில் தஞ்சை அரசினர் சரபோஜி மன்னர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் ராஜசேகர்.

ராஜசேகருக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனர்.

இதேபோல கடலூரை அடுத்த அன்னவெலி பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர் ஆனந்த் என்பவரும் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்தார்.

கருகிய நிலையில் மயங்கி விழுந்த அவரை அப்பகுதி மக்கள் கடலூர் அரசு மருத்துவமனையில்

சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஆனந்ததும் உயிரிழந்துள்ளார்.

ஏற்கனவே இலங்கைத் தமிழர்களுக்காக சென்னை முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன், சிவப்பிரகாசம், ஸ்ரீதர் என்கிற எழில்வளவன், கடலூர் தமிழ்வேந்தன், சிவகாசி கோகுலரத்தினம், வாணியம்பாடி சீனிவாசன் ஆகிய 9 பேர் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தற்ஸ் தமிழ்.கொம்

தீயினிற் சங்கமித்து தொடர்ந்து திகைபப்பூட்டிய

தியாக செம்மல்களே!

வாயினாற் சொல்கின்ற நன்றியென்ற வார்த்தை மட்டும்

உங்கள் ஈகத்திற்கு ஈடாகுமோ?

பேய்கள் அரசு செய்து பிணந்தின்னும் நாடுகளின்

குடிமக்களாகிப் போனோம்!

எம்மவரைக் காக்கவென்று இன்னுயிரீந்த

தமிழகத்து உறவுகளே

தொட்டிட முடியாத தூரத்தில் தூரத்தில் இருந்தாலும்

இதயத்தால் உங்கள் பாத மலர் தழுவி

பணிகின்றேன் தெய்வங்களே!

மக்கள் எழுச்சிக்கு முத்துக்குமரனின் தீக்குளிப்பு பேருதவியாக இருந்த போது தொரும் இச்சம்பவங்கள் எந்த அளவிற்க்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறியாக உள்ளது... மேலும் முத்துக்குமரனிடம் இருந்த தெளிவு பின் வந்த இந்நிகழ்வுகளில் அவ்வளவாக காணப்படவில்லை...

ஒருவகையில் மனகுமுறல்களின் கொந்தளிப்பிலிருந்தும் ஆற்றாமையின் வலியிலிருந்தும் விடுபட உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எடுக்கப்பட்ட முடிவாகவே தோன்றுகிறது..

எனக்கும் ஒரு மனைவி ஒரு குழந்தை இருகிறது என்ற முறையில் எண்ணிப்பார்க்கும் போது இச்சம்பவத்தை நினைத்து கண்ணீரும் ஆத்திரமும் தான் வருகிறது...

போதும் இந்த உயிரிழப்புகள்...

உயிர்விடத்துனிந்தவனுக்கு எதிரிகளை எதிர்த்துப்போராடுவது எம்மாத்திரம்... தொடர்ந்து பல போராட்டங்களிலும் சிறை செல்வதிலும் மக்கள் எழுச்சி உண்டாக்க உழைப்பதிலும் தம் ஈடு செய்ய இயலாத இவ்வின்னுயிரை பனிக்கலாம்... ஒன்றும் முடியவில்லையா உன் தொழிலைச் செய்... வருமானத்தை ஈழ விடுதலைக்கு உழைப்பவர்களுக்கு கொடு.. இது என் சின்ன அறிவிற்கெட்டிய தாழ்மையான கருத்து...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.