Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நோர்வேயின் செயற்பாடுகளை இலங்கையில் தடைசெய்யவேண்டும் அரசிடம் வீரவன்ஸ கோரிக்கை

Featured Replies

நோர்வே அரசாங்கம், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியில் பாரிய துரோகத்தை தொடர்ந்தும் இழைத்து வருகிறது.

எனவே, நோர்வே அரசாங்கத்துடனான இராஜதந்திர உறவுகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக ரத்துச் செய்வதுடன் இலங்கையில் நோர்வேயின் செயற்பாடுகளை தடை செய்ய வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபையினர் சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வரும் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளரான கே.பி. எனப்படும் குமார் பத்மநாதனுடன் தொலைபேசியில் உரையாடியமை இலங்கைக்கு எதிரான செயற்பாடாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். தேசிய சுதந்திர முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாடு பத்தமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற போதே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது:

நோர்வே அரசாங்கம் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளரான குமார் பத்மநாதனை ஐ.நா.வின் விஷேட பிரதிநிதியான ஜோன் ஹோம்ஸ் உடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள உதவி செய்துள்ளது. இச் செயலானது இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செய்யப்பட்ட துரோக செயலாகும். ஐ.நா.விற்கும் புலிகளின் சர்வதேச குற்றவாளியான கே.பி. எனப்படும் குமார் பத்மநாதனுடனான தொடர்பையும், அத்தொலைபேசி உரையாடல் தொடர்பாகவும் ஐ.நா. இலங்கை அரசாங்கத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

இலங்கை மீதான சர்வதேசத்தின் தவறான கருத்துக்களுக்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது. தற்போது யுத்தத்தை கொண்டுச் செல்பவர்கள் புலிகளே. புலி இயக்கத்தினர் உடனடியாக ஆயுதங்களை கீழே வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்து விட்டால் நாளையே இலங்கையில் யுத்தம் முடிவிற்கு வந்துவிடும்.

தமிழ் கூட்டமைப்பின் பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு பொதுமக்களை காரணம் காட்டி போர் நிறுத்தத்தை வலியுறுத்திகின்றமை நாட்டின் மூலச் சட்டத்திற்கே எதிரான செயல்பாடாகும். தமிழ் கூட்டமைப்பினரின் அரசியல் வாழ்க்கை புலிகளின் தோல்வியோடு முடிவடைந்து விடும். அடுத்த பொதுத் தேர்தலின் பின் பாராளுமன்றத்திற்கு தமிழ் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பிரவேசிப்பது சந்தேகமே.

கிழக்கு மாகாணத்தில் 100% வீதமான ஜனநாயகம் இன்னும் ஏற்படவில்லை. இதற்கு பிரதான காரணம் கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையிலான முறுகலும் அவர்களது உறுப்பினர்கள் சிலர் இன்னும் புலி இயக்கத்தினருடன் தொடர்பு வைத்துள்ளமையே ஆகும்.

அரசாங்கம் கிழக்கு அமைதியின்மையை பேண இரு குழுக்களுக்கு இடையிலான பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைத்து முழு ஆயுதக் கலைப்பை மேற்கொண்டால் மாத்திரமே கிழக்கில் நிரந்தர ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கும், அமைச்சர் கருணாவிற்கும் இடையிலான பிணக்கை தீர்க்க விரைந்து செயற்பட வேண்டும் என ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான முறுகல் நிலை மாகாணத்தின் இயல்பு நிலைக்கு குந்தகம் ஏற்படுத்தலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் கந்தளாய் மற்றும் வெலிகந்த பகுதியில் சிவிலியன்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான சம்பவங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்கின்றனரா அல்லது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் புலிகள் உடுறுவியுள்ளனரா என்பது தெளிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளையானுக்கும், கருணாவிற்கும் இடையிலான முறுகல் நிலையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது கிழக்கில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாதென விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.