Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு புலம்பெயர்ந்தவனின் புலம்பல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு புலம்பெயர்ந்தவனின் புலம்பல்

தை பிறந்தால் வளி பிறக்கும்

பயிர்கள் எல்லாம் தழைத்தோங்கும்

மாசியில் மாம்பழம்

மறக்கேலா நினைவு அது

பங்குனியில் கதியால் வெட்டு

பரபரப்பாய் நாட்கள் நகரும்

சித்திரையில் வேம்பு பூத்து

சிறப்பாய் சிலிர்த்து நிற்கும்

வைகாசியில் விசாகம்

தமிழர் வரலாற்றுப் பாரம்பரியம்

ஆனியில் அனல் வெயில்

அப்பப்பா என்ன புழுக்கம்

ஊரெல்லாம் வெப்பத்தால்

உறங்கிவிடும் வீட்டுக்குள்

எங்களுக்கோ கொண்டாட்டம்

எவ்வளவு சந்தோசம்...........

பின்னேரம் கிளித்தட்டு

காலையில் பாட்டுக்குப்பாட்டு

கனவுகளில் கவலையின்றி

களிந்தது எம் இழமைக்காலம்

இடையில் வீடு வந்தால்

இருக்கும் சாப்பாடு

இடையிடையே அம்மாவின்

வசைப்பாட்டும் வழமையங்கே

உப்பிடியே புத்தகத்தை

திறக்காமல் வச்சிரு

உதுக்குள்ள கறையான்

கூடுகட்டி முட்டையிடட்டும்

அழகாய் உறைபோட்டு

அடுக்கி வைத்த புத்தகம்

அழைப்பார் யாருமின்றி

அடுத்த தவணை தொடங்கும் வரை - மூலையில்

அநாதையாய் கிடக்கும்

உனக்குப்படிப்பேறா

கொப்பரோட தோட்டத்துக்குப்போ

கோபத்தில் அம்மா

கொட்டிடும் வார்த்தைகள்

பலாலிச் ஷெல்போல

இடையிடையே வந்து விழும்

ஆவணியில் கிணறு இறைப்பு

அடங்காது எம் குதூகலிப்பு

ஆவணியின் அனல் சூட்டில் - கிணற்று நீர்

அடிவரை வற்றி நிற்கும்

குதித்து நீச்சலடிப்பதில் - எங்களுக்கு

அப்படி ஓர் குதூகலம்

ஆடியில் ஆடிக்கூழ்

ஆகா என்ன ருசி

நினைத்தாலெ நாவூறும்

நினைவுகள் அல்லவா

ஜப்பசியில் கந்தசஷ்டி

ஆர்ப்பரிக்கும் ஒலிபெருக்கி

சூரன் போர் முடியும் வரை - ஊர்க்

கோவிலில் சுழன்றடிப்போம்

ஊரே களை கட்டும்

உணர்வுகளில் சந்தோசம்

புதிதாய்ப் பிறப்பெடுக்கும்

புரட்டாசியில் சனிவிரதம்

குளித்துவிட்டு வந்தால்

அம்மா சமைத்திருப்பா

காணிக்குள்ளபோய்

காகத்தை கூப்பிட்டு

உணவுடன் உணர்வுகளையும் பரிமாறி

ஊர்கூடி வாழ்ந்திருப்போம்

கார்த்திகை!

எங்கள் தேசத்தின்

புனிதமான மாதம் அல்லவா அது

எங்கும் ஒரு அமைதியிருக்கும் - உணர்வுகளில்

புனிதம் நிரம்பியிருக்கும்

விழி மூடி மண்ணுக்குள்ளே

விதையாகத் தூங்கும்

புனிதர்களைப் பூசிக்கும்

பெருமை பெற்ற மாதம் இது

ஊரெல்லாம் சிரமதானம்

ஊர்கூடி அலங்கரிக்கும்

வீதிகள் உடை உடுக்கும்

சிவப்பு மஞ்சல் கொடிகள்

சிரம் தாழ்த்தி வணங்கி நிற்கும் - எம்

மாவீரர் பாதங்களை

தலைவரின் உரைக்காக

எம் இதயங்கள் தவமிருக்கும்

புலிகளின் குரலோடு

எங்கள் நாட்களும் சேர்ந்து நகரும்

உணர்வுகள் பொங்கி எழும்

நினைவுகள் அல்லவா அவை

மார்களியில் மழை தொடங்கும்

ஊரெல்லாம் வெள்ளக்காடு

ஊர்க்குளத்தில்குஞ்சுமீன் பிடிக்க

அம்மாவுக்குத் தெரியாமல் போய்

நீர்ச்சிரங்கை வங்கிவந்து - கடியால்

நித்திரையில்லாமால் தவித்த நாட்கள்

இப்போதெல்லாம் அநாதையாய் நானிங்கே..........

என் நினைவுகள் இன்னும் அங்கே..................

அருகிருந்து

அரவணைத்த ஆத்தாவே

உருகி உருகி எனக்கு

உணவூட்டிய அம்மம்மாவே

கருகி விழுந்தாலும்

காவோலையாய் பயன் கொடுக்கும்

பனஞ்சோலையே

ஆட்டுக்கு குழைவெட்ட

அழகாய் வளர்ந்திருக்கும்

முற்றத்துப் பலாமரமே

வாட்டும் வறட்சியிலும்

வாட்டமுறா மாமரமே

நீர் இறைத்தே கைவலிக்கும்

முற்றத்து நித்திய கல்யாணியே

சடைத்து நிழழ்தந்து

சாவகாசமாய் நான் தூங்க இடம் தந்த

ஜம்பு நாவலே

பெருகி வரும் விழி நீரில்

முகம் நனைக்கிறேன் உம் நினைவுகளிள்

நேற்றுப்போல இருக்கிறது

உம் நினைவுகள் - இப்போ

கூற்றுவர்கள் அங்கே - அயலில்

வன்னியில் குதூகலிக்கிறார்களாம் - எம்

மக்கள் உயிர் குடித்து.

தினமும் விழும் எம்

உறவுகளின் பிணங்களை கூட

புதைப்பதற்கு யாருமில்லையாம்

தோற்றுப்போகவா நாம் பிறந்தோம்?

இல்லை என்று.......

தொடர்ந்து போராடுகிறது வன்னி

திசைக்கொன்றாய்ப் பிரிந்து

தேசங்களை கடந்து வந்து

நாங்கள் தவித்திருக்க - அங்கே

ஊருக்குள்ளேயே

உறவுகளை வன்னியில்

பார்க்க முடியாமல்

துடிக்கிறது ஈழம்

பக்கத்தில்தான் இருக்கிறது யாழ்ப்பாணம்

வன்னி உறவுகளுக்காய்

கத்திக்கூட பேச முடியாமல்

ஊமையாய் அவர்கள்

உள்ளுக்குள் புழுங்குகிறார்கள்

உறவுகளுக்காய் அழுது அழுது

எம் உள்ளமும் வறண்டு விட்டது

இருண்டு போய் இருக்கிறதே - இறைவா

ஈழத்தமிழர் வாழ்வு.........

நெருஞ்சி முள்ளாய்

தைக்கிறதே இதயத்தை

வருந்தி அழும்

வன்னி உறவுகளின் நினைவுகள்

பிரிவுகளுக்கும் அவலங்களுக்குமாகவா

பிறந்தோம் நாம் ஈழத்தமிழராய்?

Edited by பரதேசி

இதயத்தில் இடைவிடாது தொடர் தொடராக

வரும் தாயக நினைவுகளை ஒன்றும் விடாமல்

வரைந்து விட வேண்டும் என்ற அவாவில்

எழுத்துக்களை கொஞ்சம் மாற்றி அமைத்து

விட்டீர்கள் பரவாயில்லை

கவிதை அற்புதம் அற்புதம் தொடர்ந்து

எழுதுங்கள்.....

ஊரை மறந்து ஊரின் மகிமை மறந்து

வாழுகிறவையழுக்கு இப்படியான கவிதைகள் பயன் உள்ளவையாக இருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.