Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு குடியேற்றவாசியின் ஆங்கில மாயை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் இருந்து 17 வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்துக்குச் சென்று வாழும் தேவ குமாரசிறி என்ற 40 வயது நபர் தான் பணியாற்றிய உபதபாலகத்துக்குவரும் வாடிக்கையாளர்களில் ஆங்கிலம் பேசத்தெரியாதவர்களுக்கு தன்னால் சேவை செய்ய முடியாதெனக் கூறி அவர்களைத் திருப்பியனுப்பியதன் விளைவாக தற்போது வேலையை இழந்து தவிக்கும் விசித்திரமான நிலைமை தொடர்பான செய்தியை வாசகர்கள் அறிந்திருப்பார்கள் என்று நம்புகின்றோம்.

மத்திய இங்கிலாந்தின் நொட்டிங்ஹொம் பகுதியில் உள்ள தபாலகத்துக்கு வந்த மக்களிடம் ஆங்கிலம் பேச வேண்டிய கட்டாயம் குறித்து குமாரசிறி வலியுறுத்தியதையடுத்து ஆட்சேபனைகள் கிளம்பின.

தபாலகத்தில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட அவர் வேறு ஒரு நகரத்துக்குச் சென்றார்.

அந்த நகரில் புதிதாக வேலையொன்றில் சேர்ந்தபோதிலும் அவர் நேற்று முன்தினம் கடமைக்குச் சென்ற போது வேறுஒருவர் அந்த வேலையில் அமர்த்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இரு பிள்ளைகளின் தந்தையான குமாரசிறி இப்போது வேலையில்லாமல் திண்டாடுகிறார்.

பிரிட்டிஷ் சமூகத்துடன் குடியேற்றவாசிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதற்காகவே ஆங்கிலத்தின் அவசியத்தை வலியுறுத்தியதாகக் கூறும் அவர் தனது முயற்சியைக் கைவிடப் போவதில்லை என்றும் சூளுரைத்திருக்கிறார்.

ஆசிய நாடொன்றில் இருந்து சென்று இங்கிலாந்தில் குடியேறிய ஒருவர் தனி ஆங்கில “சட்டம்’ ஒன்றை குடியேற்றவாசிகள் மீது திணிக்க முயற்சித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

இங்கிலாந்து இப்போது உண்மையில் பலமொழி, பல கலாசாரங்களைக் கொண்ட ஒரு நாடாக மாறிவிட்டது.

அதன் பிரதான மொழி ஆங்கிலம் என்பதில் சந்தேகமில்லை. ஆங்கிலத்தில் நடைமுறை அறிவு குறைந்தபட்சமேனும் இல்லையென்றால் இங்கிலாந்தில் வாழ்வது பெருமளவுக்கு சிக்கலாகவே இருக்கும்.

இங்கிலாந்துக்கோ அல்லது ஆங்கிலம் பேசும் வேறு நாடுகளுக்கோ குடிபெயரும் வெளிநாட்டவர்கள் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்வதென்பது அவர்களுக்கு நன்மைபயக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், அத்தகைய நாடுகளில் வேறு மொழிகளைப் பேசுகிறவர்கள் எந்தக் காரணத்துக்கென்றாலும் அலட்சியப்படுத்தப்படுவதோ அல்லது தண்டிக்கப்படுவதோ ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்.

ஒருவர் உலகின் எந்தப்பகுதியில் என்றாலும் தனது தாய்மொழியில் பேசுவதென்பது அவரது அடிப்படை உரிமையாகும்.

இங்கிலாந்திலோ, அமெரிக்காவிலோ, கனடாவிலோ, நியூஸிலாந்திலோ அல்லது அவுஸ்திரேலியாவிலோ இருக்கும்போது எப்போதுமே ஒருவர் ஆங்கிலத்தைத்தான் பேசவேண்டுமென்று கண்டிப்பான விதி எதுவுமே கிடையாது.

அமெரிக்காவின் சில நகரங்களில் மக்களின் வசதிக்காக 30 க்கும் அதிகமான மொழிகளில் பரீட்சைகள் நடத்தப்படுவதுடன் மொழி அறிவுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, எந்த மொழியுமே தூய்மையானது என்று கூறிவிடமுடியாது.

குடியேற்றவாசிகளின் மொழிகள் உட்பட ஏனைய மொழிகளில் இருந்து பெறப்பட்ட இலட்சக்கணக்கான சொற்கள் ஆங்கிலத்தை இன்று வளப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

குமாரசிறி விவகாரத்தில் ஒரு முரண்நகையை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

பல இனங்களையும் பல கலாசாரங்களையும் கொண்டிருக்கின்றபோதிலும், அரைநூற்றாண்டுக்கு முன்னர் தனிச் சிங்களச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட நாடொன்றில் இருந்து இங்கிலாந்து சென்றவர் இவர்.

பிரிட்டிஷ் சமுதாயத்துடன் ஒன்றுகலக்க வேண்டுமென்பதற்காக சகல குடியேற்றவாசிகளும் ஆங்கிலத்தைப் படிக்க வேண்டும், பேசவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் குமாரசிறி இலங்கையில் ஒரு அதிகாரப் பதவியில் இருந்திருப்பாரேயானால் சிங்களமொழி பேசத் தெரியாத மக்களுடன் எந்தவிதமாக நடந்து கொண்டிருப்பார் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

குமாரசிறி பிரிட்டிஷ் காரர்களை விடவும் கூடுதலான அளவுக்கு தன்னையொரு பிரிட்டிஷ்காரராகக் காண்பிக்க முயற்சித்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

குடியேற்ற வாசிகள் பிரிட்டிஷ் மக்களுடன் நல்லிணக்கமான வாழ்க்கைக்கு தங்களை இசைவாக்கிக் கொள்ள வேண்டுமென்பதில் கருத்து பேதங்களுக்கு இடமில்லை.

ஆனால், அவர்கள் தங்களது சொந்த மொழியை, கலாசாரத்தை மறந்து நடைப்பிணங்கள் போன்ற வாழ்க்கையை முன்னெடுக்கக்கூடாது.

குடியேற்றவாசிகள் தங்களது இரண்டாவது தாயகம் என்று தேர்ந்தெடுத்துக் கொண்ட நாடுகளின் கலாசாரத்தைச் செழுமைப்படுத்த தங்களது மொழியைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த நாடுகளின் கலாசார மற்றும் மொழி ரீதியான பல்வகைத் தன்மையே அவற்றின் ஜனநாயகப் பண்புக்கான வளமான அடித்தளங்களாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் சொற்ப எண்ணிக்கையான பூர்வீகக் குடிகளைத் தவிர, மற்றும்படி முற்று முழுதாக குடியேற்றவாசிகளினாலேயே உருவாக்கப்பட்டவை என்பது கவனிக்கத்தக்கது.

இத்தகையதொரு பின்புலத்திலே “ஆங்கிலம் பேசத் தெரியாவிட்டால் பிரிட்டனில் இருக்கத் தகுதியில்லை’ என்ற குமாரசிறியின் அளவு கோல் உண்மையில் நகைப்புக் கிடமானது.

தன்னை ஒரு பொருந்தாத் தன்மைக்குள் எதற்காக அவர் தள்ளிவிட்டிருக்கிறாரோ தெரியவில்லை.

ஆங்கிலத்தைப் பற்றி சிலவேளை குமாரசிறிக்கு ஒருமாயை இருந்திருக்கக் கூடும். ஆனால், குடியேற்றவாசிகள் தாங்கள் சென்ற நாடுகளில் பயனுள்ள பிரஜைகளாக மாறுவதற்கு அவர்களது சொந்தமொழி ஒரு தடையேயல்ல என்பது புரிந்துகொள்ளப்படவேண்டும்.

http://www.nankooram.com/postmaster-deva-kumarasiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.