Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவும் இந்தியாவும் இலங்கைக்கு 5000 கோடி கடன்

Featured Replies

உலகத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்துலக நாணய நிதியத்தின் கடன் வழங்கல் தாமதப்படலாம் என்ற காரணத்தினால் சீனா மற்றும் இந்தியாவிடம் இருந்து நிதியை பெறுவதற்கு அரசு முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து 1.9 பில்லியன் டொலர்களை கடனாக பெறுவதற்கு அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால், உலகின் பொருளாதார சிக்கல் காரணமாக இந்த நிதி உதவிகளை கிடைப்பதற்கு காலதாமதமாகலாம் என அரசு கருதுகின்றது.

எனினும் சிறிலங்கா அரசின் பொருளாதாரம் வேகமாக சரிந்து வருவதால் தற்காலிகமாக சீனா, இந்தியா போன்ற நாடுகளிடம் இருந்து 500 மில்லியன் டொலர்களை கடனாக பெறுவதற்கு சிறிலங்கா அரசு திட்டமிட்டு வருகின்றது.

இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு சிறிலங்காவில் இருந்து ஒரு குழு ஏற்கனவே இந்தியா பயணமாகிய நிலையில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான மற்றுமொரு குழு எதிர்வரும் புதன்கிழமை (08.04.09) சீனாவுக்கு பயணமாக உள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் நாணயம் அமெரிக்க டொலருக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியை கடந்த வாரம் கண்டுள்ளது முதலீட்டாளர்களை அச்சமடைய வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

சீனா, இந்தியாவிடம் கடன்கோரியது இலங்கை

பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிய 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதால், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் கடன் கேட்பதற்கு இலங்கை தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடமிருந்து மொத்தமாக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி இலங்கைக்கு வழங்கப்படவிருப்பதாகத் தெரியவருகிறது. இந்தியத் தரப்பினருடனான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக இலங்கை அதிகாரிகள் குழுவொன்று புதுடில்லியில் தங்கியிருப்பதுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவொன்று இன்று சீனா புறப்பட்டுச் செல்லவுள்ளது.

கடன் வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட கடிதமொன்றையும் சீனா செல்லும் குழுவினர் கொண்டுசெல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால் இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பிலிருந்து மீள்வதற்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் கோரியிருந்தது. எனினும், இந்தக் கடன் தொகையை வழங்குவதற்கு முன்னர் தமது நிபந்தனைகள் சிலவற்றை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என நாணயநிதியம் அறிவித்துள்ளது.

இதனால் கடன் கிடைப்பதில் தாமதல் ஏற்பட்டிருப்பதால் அயல் நாடான இந்தியாவிடமும், பிராந்திய நாடான சீனாவிடமும் கடனுதவி கோருவதற்கு இலங்கை முன்வந்துள்ளது.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் யுத்தத்துக்கு சீனா அரசாங்கம் இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகளை ஏற்கனவே வழங்கிவரும் நிலையில், சீனாவிடமிருந்து கடனுதவியைப் பெறுவதற்கும் இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

-இலங்கா தகவல் நிறுவனம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

IMF கடன் வழங்குவதில் தாமதமாவதால் அதற்க்கு முன்னர் இந்தியாவும் சீனாவும் இலங்கைக்கு 5000௦ கோடி கடன் வழங்க உள்ளது. இதில் இந்தியாவுன் பங்குதான் அதிகம். சோனியாவின் கொலைவெறி தேர்தலுகாககூட அடங்கவில்லை

http://www.nation.lk/2009/04/05/news1.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.