Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சன் தொலைக்காட்சியின் “அயன்” திரைப்படத்தை புறக்கணியுங்கள், புறக்கணிப்போம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

29/03/2009, 13:00: தமிழர் விழிப்பு இயக்கம்

சன் தொலைக்காட்சியின் “அயன்” திரைப்படத்தை புறக்கணியுங்கள், புறக்கணிப்போம்!!

அன்பான தமிழ் மக்களே!!

தமிழீழ மக்கள் மீது சிறிலங்கா அரசு கொடிய போரை ஏவி விட்டுள்ளது. தினமும் பல நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கொடிய இன அழிப்பு யுத்தத்தை இந்தியாவின் காங்கிரஸ் அரசு வழி நடத்தி வருகின்றது. இந்த நிலையில் சிறிலங்காவின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை எமது மக்கள் தன்னெழுச்சியோடு முன்னெடுத்து வருகின்றார்கள்;

அதே வேளை சிறிலங்கா அரசுக்கு முண்டு கொடுத்து யுத்தத்தை வழிநடத்தும் காங்கிரஸ் அரசின் செயற்பாடுகளை ஆதரிக்கும் தமிழ் நாட்டு ஊடகங்களுக்கும் எமது எதிர்ப்புகளை நாம் தெரிவிக்க வேண்டும்;

தமிழ் நாட்டின் முக்கிய தொலைக்காட்சிகளான சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள் புலம்பெயர் நாடுகளிலும் தமது ஒளிபரப்பை நடத்தி வருகின்றன. இந்தத் தொலைக்காட்சிகள் தமிழர்களுக்கு எதிரான செய்திகளை காவி வருவதோடு, தமிழின எதிரிகளை நியாயப்படுத்தும் செய்திகளையும் வெளியிட்டு வருகின்றன;

எமது மக்களின் அவலங்களை வெளிப்படுத்த வேண்டிய கடமையுள்ள தமிழ் ஊடகங்கள் எமது மக்களை அழிப்பவர்களுக்கு வக்காலத்து வாங்குவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தத் தொலைக்காட்சிகளுக்கு நாம் எமது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்;

சன் தொலைக்காட்சி "சன் பிக்ஸர்" என்ற பெயரில் திரைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றது. இந்தத் திரைப்படங்கள் வெளிநாடுகளில் திரையிடப்படுவதன் மூலம் பல கோடி ரூபாய் லாபத்தை சன் தொலைக்காட்சி பெறுகின்றது. எமக்கு எதிரான செய்திகளை வெளியிட்டுக் கொண்டு, எம்மிடம் இருந்தே பெருந்தொகை வருவாயையும் பெறுகின்றது;

சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி போன்றவற்றையும் இவைகளின் சார்பில் வெளிவரும் திரைப்படங்களையும் புறக்கணித்து நாம் எமது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்;

சன் தொலைக்காட்சியின் வெளியீடாக அடுத்து வரவுள்ள "அயன்" திரைப்படத்தை புறக்கணித்து நாம் எமது எதிர்ப்பை தெரிவிப்போம்.

இந்தத் திரைப்படத்தை புலம்பெயர் நாடுகளில் திரையிட வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களை நாம் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்;

இந்த நடவடிக்கை அயன் திரைப்படத்தில் நடிப்பவர்களுக்கோ, தமிழ் திரையுலகத்திற்கோ எதிரானது அன்று என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்றைக்கு எமக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் தமிழ் திரையுலகத்திற்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ரஜனிகாந்தின் ரசிகர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கட்சிகளுக்கே வாக்களிப்பதாக தீர்மானித்துள்ளதையும் நாம் மிகவும் பாராட்டி அவர்களுக்கும் எமது அன்பான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்;

"அயன்" திரைப்படப் புறக்கணிப்பு என்பது சன் குழுமம் மற்றும் கலைஞர் குடும்பத்திற்கு எமது அதிருப்தியையும், வேதனையையும், கோபத்தையும் தெரிவிக்கும் ஒரு நடவடிக்கையே தவிர வேறு யாருக்கும் எதிரானது அன்று.

சன் மற்றும் கலைஞர் குழுமத்தின் இன்றைய நிலைப்பாட்டிற்கு எமது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் வண்ணம் சன் தொலைக்காட்சியின் "அயன்" திரைப்படத்தை புலம்பெயர் நாடுகளில் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும்படி அனைத்து தமிழ் மக்களையும் உரிமையோடும் அன்போடும் வேண்டிக்கொள்கிறோம்.

ஒற்றுமையே வலிமை

வலிமையே வாழ்வு

தமிழர் விழிப்பு இயக்கம்

00000000000000000000000000000000000000000

சண் தொலைக்காட்சி தயாரிப்பான அயன் திரைப்படத்தை புறக்கணிப்பதற்கு முதல் செய்யவேண்டியது இன்னொன்றும் இருக்கிறது. முதல்ல சண்- கலைஞர் தொலைக்காட்சிகளை புறக்கணிப்போம்!!!!!!!!!

ஈழத்தமிழர் விரோதப்போக்கை கடைப்பிடிக்கும்,எம் உறவுகளின் அவலங்களை மூடி மறைக்கும் “கேவலமான" செயலை செய்யும் தமிழ் ஊடகங்களை புறக்கணியுங்கள் என்று “தமிழர் விழிப்பு குழு" சர்வதேச மட்டத்தில் தமிழர்களை அழைப்பு விடுத்துள்ளது. நம் தேசத்தின் விடிவிற்காகவும், தமிழினத்துக்காகவும், தமிழ் தேசியத்துக்காகவும் குரல்கொடுக்கும் நமது ஊடகங்களை நாம் ஆதரிக்காமல், வெறுமனே பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தென்னிந்திய தொலைக்காட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள், அவை சம்பந்தமான விளம்பரங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் என கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் சர்வதேச ரீதியாக தமிழர் அமைப்புகள் ஒண்றிணைந்து அழைப்பு விடுத்திருந்தன. ஐரோப்பிய நாடுகளில் அது இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் சில நாடுகளில் "செவிடர் காதில் ஊதிய சங்கு" போலத்தான் இன்னமும் இருக்கிறது. “உணர்வு" என்பது அடிமனத்தில் இருந்து எழவேண்டும்.யாரும் கட்டாயப்படுத்தியோ இல்லை,வற்புறுத்தியோ வருவதில்லை.

தென்னிந்திய தொலைக்காட்சியை வீட்டில் எற்கனவே வைத்திருப்போரை அதை பார்க்காதே என தடுக்கவோ வற்புறுத்தவோ முடியாது.அது சட்டத்துக்கு புறம்பானது.ஆனால் அவை தொடர்பான விளம்பரப்படுத்தலையோ இல்லை விற்பனைப்படுத்தலையோ எங்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து செய்யப்படுவதை கட்டுப்படுத்த முடியும். ஈழத்தமிழர்களுக்கு ஆத்மார்த்தமான ஆதரவை தராத நடிகர்களின் திரைப்படங்களை புறக்கணிப்போம். பல இன்னல்களுக்கும் தடைகளுக்கும் மத்தியில் தாயகத்து உறவுகளின் துயரங்களையும்,செய்திகளையும் தருகின்ற "ஈழத்தமிழ் ஆதரவு ஊடகங்களுக்கு" கைகொடுப்போம்.

-------------------------------------------

எம் மக்களின் அவலத்தை அறிய எங்களுக்கு உள்ள ஜனநாயக உரிமையை மறுக்கும் இவர்களை எமக்குள்ள ஜனநாயக உரிமையை பயன்படுத்தியே தோற்கடிப்போம்...

நண்பர்களே தோழர்களே இதுவே தருணம் இவர்களின் தோள் உறிக்க, விரட்டியடிக்க செயலில் இறங்குவோம். சிலவேளை இவவேலை எமது வீட்டில் தொடங்கவேண்டி இருக்கலாம். எமது நண்பர்களிடம் எமது உறவினர்களிடம் இது பற்றி பேசி உடன் அவர்களையும் செயலில் இறக்குவோம் .தினமும் நூற்றுக்கணக்கான எமதுறவுகள் உடல் சிதறி மண்ணில் சாயும் நேரமிது, அவர்களுக்கு அவர்களது அவலத்தை அங்கிருந்து யாருக்கும் வெளிப்படுத்த முடியாத, கையறு நிலை அவர்களுக்கு, எமது சொந்தங்களின் அவலத்தை நாம் தான் வெளிப்படுத்த வேண்டும், எங்கள் பணத்தை பிடுங்கி அமது வாயிலேயே நல்ல வசதியாக அல்வா திணிக்கிறார்கள்.

மன்னியோம் இவர்களின் துரோகத்தை!!!

உங்கள் சந்தா அட்டையை கலட்டி எடுத்து அவர்களுக்கு தபாலில் அனுப்பி வையுங்கள். அத்துடன் உங்கள் ஆட்சேபனையை நாலு வரியில் எழுதுங்கள், நாங்கள் மானமிக்க இனம் எங்களை எனியும் ஏமாற்ற முடியாதேன்று அவர்களுக்கு புரியவைப்போம், அவர்கள் மாற அவர்களுக்கு ஒரு சந்தர்பம் கொடுப்போம், இல்லையேல் அவர்களுக்கு எங்கள் மத்தியில் எந்த வேலையும் கிடையாது. அவர்கள் வழியில் அவர்கள் போகட்டும், தகுந்த நேரத்தில் துரோகத்துக்கான பரிசை உலகத்தமிழர் கொடுப்பர்!!!

சொந்தங்களே எமது மக்களை நெஞ்சில் நிறுத்தி சிந்திப்போம், செயல் படுவோம் இன்று செய்யாவிடின் என்றுமே செய்ய முடியாது, தோள் சேர்வோம், எமது மக்களின் வாழ்வுக்கு ஒரு துளி சேர்ப்போம், செயலால் சேதி சொல்வோம்.

எம் உறவுகள் உதிரத்தில் மிதக்கின்ற இந்தத் துன்பமான வேளையிலே எமது துயரங்களை வெளியிடாது இருட்டடிப்புச் செய்யும் ஊடகங்களை புறக்கணிக்க வேண்டியது தன்மான, தமிழ்மான உணர்வுகொண்ட தமிழினத்தின் கடைமையாகும். உலகத் தமிழினம் தமிழின உணர்வால் ஒன்றிணைந்து நிற்க, தமிழினத்தைக் காக்க முனையாது எமது அழிவுக்குக் காரணியாக இருக்கும் காங்கிரசுக்கு முண்டு கொடுப்பவர்களின் நிறுவனங்களின் எந்த ஒரு தயாரிப்பு ஆயினும் நாம் புறக்கணிக்க வேண்டும்.

எம்மைப் போன்றவர்கள் நாம் பிறந்து வளர்ந்த நாட்டின் அழுகையை துடைக்காவிடினும் பார்க்காவிடினும் கூடப் பரவாயில்லை. எம்மை, அதாவது தமிழ்த் தேசியத்தை நிராகரிப்போரையாவது நிராகரிப்பது ஊடாகவேணும் தனது உடம்பில் ஓடுவது தமிழ் இரத்தம் தானெனச் சொல்லலாமல்லவா நாங்கள்???

என்றும் தாயக நினைவுகளுடன்

இராஜேஸ்வரன்

தமிழ் உணர்வாளன்

அவுஸ்திரேலியா

--

என்றும் தாயக நினைவுகளுடன்

-இராஜேஸ்வரன்

"வெல்க தமிழ் ஈழம், வாழ்க தமிழ்"

நிச்சயமாக இலங்கைத்தமிழர் பிரச்சினையை அரசியலாக்கும் தமிழக சக்திகளை புறக்கணிப்போம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.