Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டாம் மற்றும் மூன்றாம் யுத்தம் சுனந்ததேசப்பிரிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் மற்றும் மூன்றாம் யுத்தம் சுனந்ததேசப்பிரிய:

விடுதலைப்புலிகளுக்கு எதிரான சம்ரதாயபூர்வமான யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் வெற்றிபெற்று, அது முற்றுப் பெறும் என சில மாதங்களுக்கு முன்னர் இருந்து தெரிகிறது.

சில நேரம் இந்த கட்டுரை பிரசுரமாகும் போது, வன்னியில் சகல இடங்களையும் படையினர் கைப்பற்ற இடமுள்ளது.( இந்த கட்டுரையை நேபாளத்தின் வடமேற்கு எல்லையில் உள்ள சுகேட் நகரில் இருந்தவாறு நான் எழுதுகிறேன்).

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர இரண்டு தினங்களே உள்ளதாக ஒரு மாதத்திற்கு முன்னர் அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. தேவையேற்படும் எனில் 30 நிமிடங்களில் விடுதலைப்புலிகள் துடைத்தெறியப்படுவார்கள் என பிரதமர் கூறியிருந்தார்.

யுத்த பிரசாரங்களின் அடிப்படையில் பிரபாகரன் பல சந்தர்ப்பங்களில் கொல்லப்பட்டுள்ளதுடன், விடுதலைப்புலிகளின் தலைவர்கள் பலர் அரசாங்கத்திடம் சரணடைந்துள்ளனர்.

அரசாங்கத்தின் யுத்த செய்திகளின் அடிப்படையில் படையினர் எவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படவில்லை. விடுதலைப்புலிகளின் போராளிகள் நாளாந்தம் டசின் கணக்கில் உயிரிழந்தனர். இதனடிப்படையில் எந்த சிவிலியனும் கொல்லப்படுவதில்லை.

சிவிலியன்கள் கொல்லப்பட்டால், அவர்கள் விடுதலைப்புலிகளின் தாக்குதல்களிலேயே கொல்லப்படுகின்றனர். இது பெருபான்மை சிங்கள மக்கள் அறிந்துள்ள உண்மை.

அதேவேளை விடுதலைப்புலிகளுக்கு சார்பான தமிழ், ஆங்கில ஊடகங்கள் தமிழ் மக்களுக்கும், உலகத்திற்கும் இதனுடன் மாறுப்பட்ட கதைகளை கூறுகின்றன.

இந்த செய்திகளின் அடிப்படையில் வன்னியில் படையினரின் தாக்குதல்கள் காரணமாக நாளாந்தம் டசின் கணக்கான மக்கள் கொல்லப்படுவதுடன் 100க் கணக்கில் காயமடைகின்றனர். அத்துடன் பிரபாகரனின் தலைமையில் தாம் தொடர்ந்தும் சண்டையிட்டு வருவதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

வன்னியில் கொல்லப்படும் சிவிலியன்களின் படங்கள் தினமும் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த பிரசாரங்களின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் தமிழ்மக்களை இனப்படுகொலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதுவே பெருபான்மையான தமிழர்கள் அறிந்துள்ள உண்மை.

இந்த இரண்டு தரப்பில் எந்த தரப்பினர் குறித்தும் நாடுநிலையாகவும் பக்கசார்பற்ற முறையிலும் நேரில் நேரடியாக பார்த்து அது குறித்த செய்தியளிக்க கூடிய சூழல் தற்போது காணப்படவில்லை.

யுத்தத்தில் முதலில் கொல்லப்படுவது உண்மை என்ற பிரசித்தமான கருத்து காணப்படுகிறது. ஊடகங்களை தமது கைகளுக்குள் எடுத்துக் கொள்ள இலங்கை அரசாங்கம் ஊடகங்கள் மீது மேற்கொண்ட விடயங்களை புதிதாக கூறவேண்டியதில்லை.

அதேபோல் விடுதலைப்புலிகளிடம் ஊடக சுதந்திரம் இருக்கவில்லை. யுத்தத்தின் இரண்டாம் நடவடிக்கையாக ஊடகங்களுக்கு எதிரான யுத்தம் காரணமாக, ஏற்பட போகும் மூன்றாம் யுத்தம் குறித்து, இலங்கை சிங்களவர்கள் இடையில் புரிதலற்ற நிலைமையே காணப்படுகிறது.

நீண்டகால நோக்கில் பார்க்கும் போது, அரசாங்கம் எதிர்நோக்க போகும் கடினமான யுத்தம் இதுவாகும். இந்த மூன்றாவது யுத்தம் ஆயுதம் தாங்கிய யுத்தமல்ல, இது கருத்து ரீதியானதும் அரசியல் ரீதியானதுமான யுத்தமாகும் இதன் ஆரம்ப பூமி தமிழ்நாடு என்பதுடன் இது தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக பாரியளவிலான யுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட சகல சந்தர்ப்பங்களிலும், அந்த அமைப்பு யுத்த ரீதியில் தளர்வடைந்ததுடன், கோட்பாட்டு அரசியல் ரீதியாக வலுவடைந்தது.

யுத்தத்தில் சாரதாரண மக்கள் மீது ஏற்படுத்தப்படும் அழுத்தங்களை அரசியல் லாபமாக மாற்றுவதில் கெரில்லா அமைப்பு வெற்றிபெறுவதே இதற்கான காரணமாகும்.

ஆரசியல் ரீதியான பாதகங்களை தவிர்ப்பதற்காகவே சமாதானத்திற்கான யுத்தம், மனித நேய யுத்த நடவடிக்கை போன்று யுத்தத்திற்கு பல்வேறு நாமங்களை சூட்டப்படுகின்றன.

இலங்கை தமிழர்கள் பிரச்சினை தொடர்பான தமிழகத்தின் ஆர்ப்பாட்டங்கள், சிவில் சமூக அமைப்புகளின் தலைமைத்துவத்திற்கு மாறியமை குறித்து, நான் இதற்கு முன்னர் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினை தமிழகத்திற்கு சமூகப் பிரச்சினையாக மாறியது. இதன் பின்னர், தமிழகத்தின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் போட்டிக்காக இலங்கை தமிழர்களுக்கான முனைப்புகளை மேற்கொள்ள ஆரம்பித்தன.

இதன் பலனாக இந்தியாவின் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும், இலங்கை தமிழர்களின் பிரச்சினையை தமது அரசியல் மேடைகளுக்கு எடுத்துச் சென்றன.

இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி, தாம் ஆட்சிக்கு வந்தால், இலங்கை தமிழர்களுக்கு சுயாட்சியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பகிரங்கமா அறிவித்தது.

இலங்கை தமிழர்களை காப்பற்ற காங்கிரஸ் அரசாங்கம், எடுத்த நடவடிக்கைகளை போதாது என அந்த கட்சி பகிரங்கமாக குற்றம்சுமத்தியது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சோனியா காந்தி, இலங்கை தமிழர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக நிவாரணங்களை சேகரியுங்கள் என தமிழகத்தில் உள்ள தமது கட்சியின் ஆதரவாளர்களுக்கு தெரிவித்தார்.

அத்துடன் இலங்கையில் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்குவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக சோனியா பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

இந்திய பொதுத் தேர்தலில் தமிழகத்தில் பெருபான்மை இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ள, ஜெயலலிதா ஜெயராம், தாம் விடுதலைப்புலிகளுக்கு ஒருபோதும் உதவ போவதில்லை என தெரிவித்திருந்த போதிலும் ஈழத்தை பெற்றுக் கொள்ள தான் உதவுவதாக குறிப்பிட்டிருந்தார்.

இதனை தவிர இந்தியாவுடன் இணைந்து, ஜனநாயக உலக நாடுகள், கூடிய விரைவில், ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை முன்வைக்குமாறு இலங்கையிடம் கேட்டுள்ளன.

இந்த அழுத்தங்கள் இலங்கை அரசாங்கத்தினால், கவனத்தில் கொள்ளாது விட்டு விட முடியாத அளவிலான பாரிய அழுத்தங்களாகும்.

இதற்கு மறுபுறம், உலகம் முழுவதிலும் வாழும் தமிழ் சமூகத்தின் இரண்டாம் தலைமுறையினர், மேன்மேலும் அரசியல்மயமாதை காணமுடிகிறது.

விடுதலைப்புலிகளுக்கு பகிரங்கமாக ஆதரவு வழங்கி வரும், இலங்கை வம்சாவளியான விருது பெற்ற இளம் ஆங்கில பாடகியான மாயா அருள்பிரகாஷம் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

வெளிநாடுகளில் வாழும் இரண்டாம் தலைமைமுறை தமிழர்கள் அரசியல் தொடர்பில் இதுவரை கூடிய அக்கறை கொண்டிருக்கவில்லை. எனினும் தற்போது, இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக உலகம் முழுவதும் நடைபெற்று வரும், தமிழ் ஒத்துழைப்பு மற்றும் ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள், வெளிநாடுகளில் உள்ள தமிழ் சமூகத்தின் இரண்டாம் தலைமுறையினரை லட்சக்கணக்கில், ஈழவர் அரசியலுக்கு அழைத்து வந்து வண்ணமுள்ளது.

இந்த நிலையில், நிராகரிப்பு என்ற நிகழ்ச்சி நிரல் மூலம் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் இந்த அரசியல் வளர்ச்சியை எதிர்கொள்ள முயற்சின்றது.

அல்லது அவ்வாறன நிலைமை காணப்படவில்லை (ஊடக ஒடுக்குமுறைக்காக) என காண்பிக்கவும் என காண்பிக்க முயற்சின்றது இல்லையெனில், (தனக்கு சாதகமான ஊடகங்கள் மூலம்) அவ்வாறான வளர்ச்சி மீது சேறுபூச முயற்சின்றது. நாம் இல்லை என கூறுவதால், இந்த சக்திகள் இல்லாமலோ, வலுவடைவதோ நின்றுவிடப் போவதில்லை.

ஞானமுள்ள அரசாங்கம் எனில் செய்ய வேண்டியது, அந்த சக்திகளுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்தும் முனைப்புகளை நோக்கி பயணிப்பதாகும், போர் வெற்றிகளால், களிப்படைந்துள்ள அரசியல்வாதிகளுக்கு, நீண்டகால தேவைகளை விட, நாளாந்த பிரபலத்தை பெற்றுக்கொள்வதே முக்கியமாக உள்ளது என்பதை காணமுடிகிறது.

இதன் காரணமாகவே அரசாங்கம் அரசியல் தீர்வொன்று தொடர்பான பகிரங்க கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் முனைப்புகளை மேற்கொள்ளாததுடன் இவ்வாறான முனைப்புகளை மேற்கொள்வோரை தேசத்துரோகிகள் என கண்டிக்கின்றது.

updated - 2009-04-16 மூலம் - சுனந்த தேசப்பிரிய.

http://www.globaltamilnews.net/tamil_news....=8449&cat=5

ஆம், யுத்தம் முடிவுற்றது என்ற செய்தியை சிறிலங்கா வெளியிட வேண்டிய தருணம் வந்துவிட்டது. அடுத்து அது முன்வைக்கப்போகும் தீர்வுத் திட்டம் என்ன? சிறிலங்காவிற்கு தமிழரை ஒடுக்குவதற்குத் துணைநின்ற நாடுகள் எவற்றை எதிர்பார்தனவோ அது சிறிலங்கா அரசினால் செய்யப்படப் போவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.