Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலையாகிறது ஈழத் தமிழினம்.... தற்கொலை செய்துகொள்கிறது இந்தியத் தமிழினம்....

Featured Replies

கொலையாகிறது ஈழத் தமிழினம்.... தற்கொலை செய்துகொள்கிறது இந்தியத் தமிழினம்....

பொன்னிலா

ஈழ மக்கள் மீதான இந்தக் கொடிய இனவெறிப் போர் ஈழத்தின் அரசியலை அடுத்த தலைமுறைக்கு கைமாற்றி விட்டிருக்கிறது. ஆமாம் வரலாற்றின் போக்கில் இளைஞர்கள் இன்று ஈழத்தின் விடுதலையைச் சுமந்திருக்கிறார்கள். கடந்த முப்பதாண்டுகளாக தமிழகம் செய்யாததை பத்து நாட்களில் புலம்பெயர் தமிழர்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் தமிழகம்? இந்த புலம்பெயர் எழுச்சி ஆயிரக்கணக்கான இளைஞர்களை தேசீய இனவிடுதலைப் போருக்கு துணையாக களத்தில் இறக்கியிருக்கிறது. ஒரு வேளை நாம் அழிந்து போனாலும் வரலாற்றில் வாழ்வதற்கான சாத்தியங்களை ஈழப் போராட்டம் இன்று உருவாக்கியிருக்கிறது.

இந்தியாவின் தென் பகுதியை அரசியல் மயப்படுத்துவதற்கான ஒரு கருவிதான் ஈழம் என்று நான் நினைத்திருந்தேன். ஈழப் போராட்டம், இனவெறிப் போரில் தமிழ் மக்கள் மடிதல், காங்கிரஸ் அரசின் திமிர் பேச்சு, இதை எல்லாம் தமிழக அரசியல் வாதிகள் எப்படிப் பார்க்கிறார்கள். என்பதைப் பார்க்கும் போது ஈழ மக்களை இவர்கள் உறுத்திக் கொண்டிருக்கும் தொல்லை என நினைக்கிறார்களோ என்றே தோன்றுகிறது. ஆமாம் அன்றாடம் கருணாநிதி விடும் அறிக்கைகளைப் பாருங்கள். எழுதுகிற கவிதைகள். நானே கேள்வி நானே பதில் அறிக்கைகள்.இதெல்லாம் எதற்காக எந்த விதத்தில் ஈழ மக்களைக் காப்பாற்றும். முத்துக்குமார் தான் இறந்தாவது இந்த பிணங்கள் உயிர்த்தெழட்டும் என்று தனக்குத் தானே தீவைத்துக் கொண்டான். அதில் இரண்டு சிந்தனைகள் இருந்தது. ஒன்று தமிழகத்துக்கு தேவை புதிய தலைமை. இன்னொன்று ஈழத்துக்கான மக்கள் எழுச்சி. அவனது உடல் கிடத்தப்பட்டிருந்த கொளத்தூர் மூலக்கொத்தளத்தில் சத்தமில்லாமல் இரவோடு இரவாக அவனைக் கொண்டு போய் புதைக்க திட்டமிட்டவர்கள், முத்துக்குமாரை அரசியல் நீக்கம் செய்யப் போராடியவர்கள் என அனைவருமே அன்று மாணவர்களிடமும், வழக்கறிஞர்களிடமும் தோற்றுப் போனார்கள். அதனால்தான் அந்த மூன்று நாளும் தமிழகத்தில் ஈழத்துக்கான மாபெரும் எழுச்சியாக இருந்தது. அதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான தமிழக மக்கள் ஈழத்துக்காக கிளர்ந்தார்கள். அந்த எழுச்சி என்னவானது. ஒரு கருணாநிதியாலோ, போலீசாலோ உங்கள் போராட்டங்களை ஒடுக்கி விட முடிகிறதென்றால் உங்கள் வலிமைதான் என்ன?

ஈழத்தில் ஆயுதப் போராட்டம் நடக்கிறது. புலத்தில் மக்கள் போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் அறிக்கை போராட்டம் நடக்கிறது. கருணாநிதிக்கோ ஈழத்தமிழர் விவாகரத்தில் தனக்கு கிடைத்துள்ள துரோகி என்கிற பட்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற தேவை. ஜெயலலிதாவுக்கோ கருணாநிதிக்கு கிடைத்துள்ள பட்டத்தோடு எழுந்துள்ள ஈழ ஆதரவு அலையை எப்படியாவது தேர்தலில் அறுவடை செய்ய வேண்டும் என்கிற தேவை. ஆக கடைசியில் இவர்கள் வழக்கமான பிணங்களை வைத்து அரசியல் செய்யும் இழிவான நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். கடந்த பால மாதங்களுக்கு முன்னரே சொன்னோம். அப்போது மத்திய அரசு குறித்து வாயே திறக்காத ராமதாஸ் இன்று மத்திய அரசு குறித்துப் பேசுகிறார். ஈழ மக்களைக் கொன்று குவித்த காங்கிரஸ் அரசு மீண்டும் அமைய நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம் என்று பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை வாயே திறக்கவில்லை, இதுவரை ஈழ மக்களின் கொலையை நியாயப்படுத்தி வந்த ஜெயலலிதா திடீரென ஈழப் போரில் மக்கள் சாவது குறித்துப் பேசுகிறார். வருகிற தேர்தலில் ஓட்டு வேட்டையாடவாவது ஈழத்தில் கொலைகள் விழட்டும் என ஜெயலலிதாவும். சீக்கிரம் கொன்று தொலைங்க நான் நாலு கவிதை எழுதினால் எல்லாம் சரியாகிவிடும் என்பது போல கருணாநிதியும் நடந்து கொள்கிறார்கள். பொதுவாக இவர்கள் ஈழத் தமிழர்களை இன்று தொல்லைகளாக நினைக்கிறார்கள்.

காப்பிப் கோப்பைகளை கழுவியும், கார்பெட் துடைத்தும் சம்பாதித்த பணத்தில் அகதி அந்தஸ்தோடு அய்ரோப்பாவில் வாழும் ஈழத் தமிழர்கள் யார் யாரை எல்லாம் அழைத்து விருந்து வைத்தார்களோ இன்று அவர்களில் பெரும்பாலானவர்களைக் காணவில்லை. அந்த நன்றிக்குக் கூட அந்த மக்களுக்காக பேச மறுக்கிறார்கள். வீதிக்கு வந்து போராடுங்கள் என்றால் சாக்குப் போக்கு சொல்கிறார்கள். இவர்களின் சாக்குப் போக்குக்கு ஒரு தோதாகத்தான் இங்கு இரண்டு திராவிடக் குஞ்சுகள் இருக்கின்றன. ‘‘நான் பிரபாகரனை சமமாகத்தானே நடத்தச் சொன்னேன். ஜெயலலிதா கைது செய்து கொண்டு வரவேண்டும் என்று சொன்னாரே’’ என்று கருணாநிதி சொன்னதும் ஆமால் என்னதான் இருந்தாலும் ஜெயலலிதசவை விட கருணாநிதி பெட்டர். என்று ஈழத் தமிழர் மீதான படுகொலையை ஜெயலலிதா, கருணாநிதி என்கிற இரண்டு சந்தர்ப்பவாதிகளை வைத்தே அணுகிறார்கள். போராஸ் மன்னனுக்கும் அலெக்ஸ்சாந்தருக்கும் புதிய விளக்கங்கள் கொடுக்கிறார்கள். என்ன விளக்கம் கொடுத்து என்ன? துரோகம் என்பததை எத்தனை விளக்கம் கொடுத்து அடை மொழியிட்டு அழைத்தாலும் துரோகம் துரோகம்தான்.

கருணாநிதியா? ஜெயலலிதாவா? என்கிற இரண்டு கட்சித் தலைமைகளின் பால் கொண்ட பிரிவினை காரணமாக இன்று காலுக்குக் கீழே துருத்திக் கொண்டிருக்கும் மக்களை இவர்கள் தொல்லைகளாக நினைக்கிறார்கள். அதனால்தான் எது எது எல்லாம் இனவெறிப் படுகொலையை மறைக்க உதவுமோ அதை எல்லாம் தூக்கிப் பிடிக்கிறார்கள். கருணாநிதியும் காங்கிரஸ்காரனும் கேட்டுக் கொண்டதற்கிணங்க இரண்டு நாள் போர் நிறுத்தம் வந்து விட்டதாகச் சொல்கிறார்கள். இறுதியானதும் பேரழிவு மிக்கதுமான ஒரு போரை நடத்தி முடிக்க ராஜபக்சே எடுத்துக் கொண்ட எடுத்துக் கொண்ட திட்டமிடலுக்கான நேரம் என்பதை மறந்தும் மறைத்தும் இவர்கள் பேசுகிறார்கள். அரசியல் அற்ற தனிநபர் வழிபாட்டின் அடிப்படையில் அமைந்த இவர்களின் கருணாநிதி, ஜெயலலிதா ஆதரவு என்பது கொலைகார காங்கிரஸ்காரனுக்கு வசதியாகப் போய் விட்டது. என்ன செய்தால் என்ன எத்தனை பேரைக் கொன்றால் என்ன நாம் தமிழகத்தில் அரசியல் நடத்தலாம் என்கிற நம்பிக்கையை காங்கிரஸ்காரனுக்குக் கொடுக்கிறது. சட்டத்தின் துணையோடு அடக்குமுறைகளை ஏவத் தூண்டுகிறது.

ஈழத் தமிழர்களுக்காக இவர்களால் எதுவுமே செய்ய முடியாது என்பது வேறு. எதாவது செய்ய முடியும் என்றா புலம்பெயர் மக்கள் வீதிக்கு வந்து தெருவில் கிடந்து போராடுகிறார்கள். அந்த போராட்டங்களுக்கு முக்கியத்துவமே இல்லையா? என்ன? இன்று சர்வதேச சமூகங்கள் ஈழப் பிரச்சனையை புறந்தள்ளிவிட முடியாத அளவுக்கு புலம்பெயர் மக்களின் போராட்டம் வீச்சுப் பெற்றிருக்கிறது. அந்தப் போராட்டங்களின் விளைவாகத்தான் மேற்குலகம் அரை மனதோடு போர் நிறுத்தம் பற்றிப் பேசுகிறது.மிகத் தாமதமாக விழித்துக் கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள், அரிவு ஜீவிகளின் ஈழம் குறித்த பதிவுகள் குறிப்பிடத் தக்க செல்வாக்கைச் செலுத்தினாலும். அதுவும் கூட ஒரு சடங்காக செய்யப்படுவதைக் காண முடிகிறது. ஆனால் இது எதற்கும் சம்பந்தம் இல்லாத தமிழக அரசியல் தலைமைகளோ, தங்களால் ஈழ மக்களுக்கு ஒரு விடிவைக் கொண்டு வர முடியும் என நம்புவது எவளவு வேடிக்கையானது. நாளை இவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தங்களுக்கும் தங்களின் வாரிசுகளுக்கும் சேர்த்து பதவிகளைப் பெற்று திருப்தி அடைந்த பிறகு மீண்டும் அடுத்த ஆட்டத்தில் ராஜிநாமா நாடகங்கள், மனிதச் சங்கிலி, தீப்பந்தப் போராட்டம் என தொடருவார்கள்.

அன்பார்ந்த ஈழத் தமிழ் மக்களே! போர்ச் சூழல் உங்களை எல்லாம் அகதிகளாக உலகம் முழுக்கத் துரத்தியிருக்கிறது. போகிற நாடுகளில் கூலி வேலைகள் செய்து நீங்கள் வாழ்ந்து வருகிறீர்கள். தாய் மண்ணையும் உறவுகளையும் இழந்து வாழும் உங்களுக்கு தமிழகம்தான் அடுத்த தாய் வீடாக இருந்தது. இப்போதும் இருக்கிறது. ஆனால் இங்குள்ள ஈழ ஆதவாளர்கள் என இருக்கும் பெரும்பாலானோரை கண்டு கொள்ளுங்கள். அங்கு வந்து உங்கள் பணத்தில் உண்டு உறங்கி, விரவசனம் பேசிய இவர்கள்தான் இன்று கருணாநிதிக்கு காவடி தூக்குகிறார்கள். துரோகத்தை துரோகம் என்று சொல்லாமல் பசப்புகிறார்கள். உங்களை தொல்லையாக நினைக்கிறார்கள். மனித உயிர்கள் என்கிற அளவிலேனும் உங்கள் மீது கரிசனையற்ற இவர்களை புறக்கணியுங்கள். மாறாக தமிழக மக்கள் எப்போதும் உங்களை ஆதரித்தே வந்திருக்கிறார்கள். மகாத்தான மாற்றங்களை மக்கள் எழுச்சி மூலம் மட்டுமே சாதிக்க முடியும். அப்படியான எழுச்சியை அடக்கி விட்டு எல்லாம் அடங்கிப் போன பின்பு தங்களின் சுயலாப அரசியலுக்காக அதைப் பயன்படுத்த நினைக்கிறார்கள். யாரெல்லாம் இதில் உண்மையானவர்களாக இருந்தார்களோ அவர்கள் இப்போது புதுவைச் சிறையிலும் மதுரைச் சிறையிலும் அடைபட்டிருக்கிறார்கள். இப்போதாவது இவர்களைப் புரிந்து கொள்ளுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.