Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெல்பேர்னில் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் திரண்ட மெழுகுவர்த்தி ஊர்வலம்

Featured Replies

தாயகத்தில் தமிழ்உறவுகளுக்கு எதிராக உச்சத்தை அடைந்துள்ள உக்கிரமான மனிதப்பேரவலத்தை நிறுத்த உலக நாடுகள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி ஆஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் இன்று வியாழக்கிழமை மெழுகுவர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.

இரண்டு நாட்களில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஊர்வலத்தில் சுமார் 1500 மக்கள் கலந்துகொண்டு

நிகழ்வுக்கு எழுச்சி சேர்ப்பித்தனர். இன்றைய தினம் மாலை 3 மணியளவில் மெல்பேர்னின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் கறுப்பு உடையணிந்து திரண்ட தமிழ்உறவுகள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்திய வண்ணம் தமது துக்கத்தை வெளிப்படுத்தினர்.

மூன்று மாதங்களில் ஐயாயிரம் ஈழத்தமிழர்கள் படுகொலை, ஆஸ்திரேலியாவே தமிழ் மக்களை காப்பாற்று என பதாகைகளை ஏந்திய வண்ணம் மௌனமாக இந்த ஊர்வலம் அங்கிருந்து நகர ஆரம்பித்தது. வேலைமுடிந்து மக்கள் வீடு திரும்பும் சனநெருக்கடி மிக்க நேரத்தில் இந்த ஊர்வலம் நகரின் மையப்பகுதியால் நகர்ந்ததால் ஊர்வலம் பெருந்தொகையான பல்லின மக்களின் கவனத்தை ஈர்த்தது. கறுப்புடை அணிந்த பெருந்தொகையான மக்கள் மௌனமாக - நீண்ட வரிசையில் - சென்றதை கண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள், நின்று அவர்களது பதாதைகளை உற்று வாசித்தனர்.

ஊர்வலம் நகர்ந்த இருமருங்கிலும் நின்றுகொண்டிருந்த மக்களுக்கு சுமார் 2000க்கும் மேற்பட்ட தாயக நிலவரத்தை எடுத்துக்கூறும் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அவற்றை ஆர்வமாக வாங்கி வாசித்த மக்கள், தமக்கு இப்படியொரு மனிதப்பேரவலம் தாம் வாழும் இந்த காலப்பகுதியில் நடைபெறுவதாக தெரியாது என்றும் இதனை தெரியப்படுத்தியதற்கு நன்றி என்றும் ஆஸ்திரேலிய அரசின் ஊடாக இந்த கொடுமையை நிறுத்துவதற்கு என்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் தாம் செய்வதாக கூறினர். ஊர்வலத்தை பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

மெல்பேர்ன் நகரின் ஊடாக தமிழ்மக்கள் மௌனமாக மேற்கொண்ட முதல் ஊர்வலம் இது என்று கூறலாம். ஆயினும் அதற்கு பலத்த ஆதரவு அங்கு காணப்பட்டமை தமிழ் உறவுகளுக்கு துக்கத்தை மீறி ஒரு மனநிறைவை ஏற்படுத்தியது.

பேரணி சுவான்ஸ்டன் வீதி வழியாக நகர்ந்து பேர்க் வீதியில் திரும்பி விக்டோரிய மாநில நாடாளுமன்ற கட்டட முன்றலை சென்றடைந்தது. ஊர்வலம் நகர்ந்த வீதிகளெங்கும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் விக்டோரிய காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் வீதி ஒழுங்கு உதவிகளை செம்மையாக செய்து உதவினர். பேரணி நாடாளுமன்ற கட்டட முன்றலை அடைந்த பின்னர் அங்கு எழுச்சி உரைகள் நடைபெற்றன.

அங்கு, ஆஸ்திரேலிய இடதுசாரி கிறீன் கட்சியை சேர்ந்தவரும் நிருபருமான மாகரிட்டா, வணக்கத்துக்குரிய றோலன் சத்தியசீலன், ஓவியர் பீற்றர் ஹொக், வைத்தியர் பொபி சுந்தரலிங்கம், சண்குமார் மற்றும் சிவகுமார் ஆகியோர் உரையாற்றினர்.

வார்த்தைகளில் கூறமுடியாத இரத்தவெறியாட்டத்தை நடத்திவருகின்ற சிறிலங்கா அரச படைகளிடமிருந்து தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு பன்னாட்டு சமூகம் இனியும் பின்னடிக்கக் கூடாது. உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்றி அவர்களது நிலத்தில் தம்மை தாமே ஆளக்கூடிய வழிவகையுடன் கூடிய வாழ்வுமுறையை விரைவில் ஏற்படுத்த சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

எழுச்சியுடன் நிறைவாகவும் நடைபெற்ற இந்த நிகழ்வுடன் தமிழ்மக்களின் குரல் ஓயாது. தாயகத்தில் தமிழ் உறவுகளுக்கு நிம்மதி கிடைக்கும்வரை - ஒரு விடிவு கிட்டும்வரை - இந்தக் குரல்கள் தொடர்ந்து ஒலிக்கும் என்ற உறுதியுடன் ஊர்வலம் மாலை 5 மணியளவில் நிறைவுபெற்றது.

படங்கள் இணைப்பு..............

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.