Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை: 12வது நாளாக பெண்கள் உண்ணாவிரதம்

Featured Replies

ஈழத்தமிழர்களுக்காக கடந்த 13ஆம் தேதி முதல் சென்னையில் ஈழத் தமிழினப் படுகொலையை எதிர்க்கும் பெண்கள் எனற அமைப்பினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அமைப்பை சேர்ந்த 20 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடரும் நிலையில்இ தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் கலந்துக்கொண்டு ஆதரவு அளித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள்இ தமிழ் திரையுலகினர் மற்றும் தமிழ் ஆர்வலர்களும் பெண்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில்இ 11வது நாளான அதிகாலை உண்ணாவிரதப் பந்தலுக்குள் புகுந்த காவல்துறையினர் அங்கு தூங்கிக்கொண்டிருந்த பெண்களில்இ உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த 5 பேரை கைதுசெய்து கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும்இ அந்த 5 பெண்களும் மருத்துவமனையிலேயே தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் தங்களது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அம்மா ஜெயலலிதா உண்ணால் முடியுமா?

Edited by Sniper

  • தொடங்கியவர்

ஜெயலலிதாம்மாவுக்கு இதுவும் கேட்டுவிட்டதால் அவர்கள் நற்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் அதற்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் போர்நிறுத்தம் கோரி தமிழ்நாட்டில் 13 நாட்களாக இடம்பெற்ற பெண்கள் அமைப்பின் உண்ணாநிலைப் போராட்டம் முடிவுக்கு வந்தது

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் இன அழிப்புப் போரை ‘சோனியா அம்மையாரே போரை நிறுத்துங்கள்’ என்ற ஒற்றை முழக்கத்தோடு இன்றுடன் 13 நாட்களாக ஈழத் தமிழின அழிப்பிற்கு எதிரான பெண்கள் அமைப்பு ந‌ட‌த்‌திய உண்ணாநிலை போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

சுதந்திரப் போராட்ட வீராங்கனை மீனா அம்மையார் பழச்சாறு கொடுக்க, அதனை ஏற்று அருந்தி உண்ணாநிலை இருந்த 15 பேரும் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

தங்களது உண்ணாநிலைப் போராட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் காரணமாக காங்கிரஸ் கட்சி போரை நிறுத்த வேண்டும் என்று பேசத் தொடங்கியிருப்பது வெற்று முழக்கமாகிவிடாமல் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக ஈழத் தமிழின அழிப்பிற்கு எதிரான பெண்கள் அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்த பேராசியரியர் சரசுவதி அவர்கள், தாங்கள் நடத்திய உண்ணாநிலை போராட்டத்தின் மூலம் எழுப்பப்பட்ட போர் நிறுத்தக் கோரிக்கைக்கு தாயுள்ளத்தோடு சோனியா காந்தி செவி சாய்ப்பார் என்று தாங்கள் நம்பியதாகவும், ஆனால் அவரிடமிருந்து எந்த அசைவோ, சலனமோ இல்லை என்பது தங்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது என்று கூறினார்.

சோனியாவிடம் பேசி இரண்டு நாட்களில் உரிய பதிலை பெற்றுத் தருவதாக சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், ஐந்து நாட்கள் வரை காத்திருந்தும் பதில் ஏதும் வராதது தமிழ் இனத்தின் மீதான படுகொலையை தடுப்பதில் அவருக்கு எந்தக் கவலையும் இல்லை என்ற உறுதியான முடிவிற்கு தாங்கள் வந்துவிட்டதாக சரசுவதி கூறினார்.

“தமிழினப் படுகொலை தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பது எங்களை துடிக்கச் செய்கிறது. தமிழகத்தின் வரலாற்றில் முதல் முறையாக எந்த அரசியல் கட்சியையும் சாராத பெண்களாகிய நாங்கள் 13 நாட்கள் பட்டினிப் போராட்டம் நடத்தி தமிழகத்தில் ஈழத் தமிழர்களின் பிரச்சனையை நோக்கி கவனத்தை திருப்பி இருப்பதாகவே கருதுகிறோம்.

தேர்தல் அரசியல் பரபரப்புக்களுக்கிடையே தமிழினப் படுகொலை மூழ்கிப் போய்விடாமல் மக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதும் எங்களின் கவலையாக இருந்தது.

கலை உலகமும், பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் இப்பிரச்சனையில் களம் இறங்கியுள்ள நிலையில் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்கி நாங்கள் எங்களது போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வருகிறோம்.

ஈழத் தமிழின அழிப்புக்கு எதிரான அனைத்து இயக்கங்களோடு இணைந்து பல்வேறு போராட்ட வடிவங்களில் பெண்களின் போராட்டத்தை தமிழகம், இந்தியா, உலகு தழுவிய அளவில் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம்” என்று அவ்வமைப்பு கூறியுள்ளது.

ஒட்டு மொத்த தமிழினமும் களமிறங்கி தமிழினப் பேரழிவைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்ற வேண்டுகோளோடு இந்தப் போராட்டத்தை நிறைவு செய்கிறோம் என்று ஈழத் தமிழின அழிப்புக்கு எதிரான பெண்கள் அமைப்பு கூறியுள்ளது.

http://www.tamilwin.com/view.php?2a0qE99F2...G7Red0e43h2g82e

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.