Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

172 தமிழர்கள் படுகொலை; 289 பேர் படுகாயம்

Featured Replies

தரையிறங்கும் படையினரின் வலிந்த தாக்குதல் முயற்சி தோல்வி: கனரக ஆயுத தாக்குதல்களில் 172 தமிழர்கள் படுகொலை; 289 பேர் படுகாயம்

[வெள்ளிக்கிழமை, 01 மே 2009, 03:56 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் கடல்வழியாகத் தரையிறங்கும் நோக்கில் சிறிலங்கா படையினர் நடத்திய வலிந்த தாக்குதலிலும் ஆட்லெறி மற்றும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களிலும் 172 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 289 பேர் காயமடைந்துள்ளனர்.

படையினரின் கடல்வழி தரையிறக்க முயற்சிக்கு எதிராக கடற்புலிகளும் விடுதலைப் புலிகளும் இணைந்து கடும் எதிர்த்தாக்குதல்களை நடத்தினர்.

இதில் டோரா பீரங்கிப் படகும் நீருந்து விசைப்படகும் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டு கடல்வழி தரையிறக்க முயற்சியும் முறியடிக்கப்பட்டதுடன் -

தரைவழியாக முன்னேற முற்பட்ட படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 352 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 722 பேர் காயமடைந்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் சமர் - கட்டளைப்பீடத்தை மேற்கோள்காட்டி புதினத்தின் வன்னிச் செய்தியாளர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:

முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இந்த தரையிறக்க முயற்சியை படையினர் மேற்கொண்டனர்.

106 மில்லி மீற்றர் ரக பீரங்கிகளால் மக்கள் மீது செறிவான தாக்குதலை நடத்தியவாறு மேற்கொள்ளப்பட்ட இந்த தரையிறக்க முயற்சிக்கு எதிராக கடற்புலிகளும் விடுதலைப் புலிகளும் இணைந்து கடும் எதிர்த்தாக்குதல்களை நடத்தினர்.

இதில் டோரா பீரங்கிப் படகும் நீருந்து விசைப்படகும் விடுதலைப் புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் படையினரின் தரையிறக்க முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் கடந்த புதன்கிழமை அதிகாலையும் 15 'டோறா' பீரங்கிப் படகுகள், 25 வரையான 'அரோ' படகுகள் மற்றும் 'கூகர்' படகுகளில் பெரும் எண்ணிக்கையிலான படையினரை தரையிறக்கும் முயற்சியாக பெரும் கடற் தாக்குதல் ஒன்றில் ஈடுபட்டபோது அதனையும் புலிகள் முறியடித்திருந்தனர்.

இந்த கடும் கடற் சண்டையின் போது - சிறிலங்கா கடற்படையினரின் 'டோறா' பீரங்கிப் படகு ஒன்று முற்றாக அழித்து மூழ்கடிக்கப்பட்டதுடன், மூன்று 'அரோ' படகுகளும் கடும் சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

படையினரின் கடல்வழி தரையிறக்க முயற்சிக்கு ஆதரவாக நேற்று முன்நாள் தொடக்கம் இரட்டைவாய்க்கால் வடக்கு பகுதியில் இருந்து 58 ஆவது படையணியும் தரைவழி மூலமான வலிந்த தாக்குதல்களை கனரக ஆயுதங்களின் பயன்பாட்டுடன் மேற்கொண்டிருந்தது.

ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, டாங்கி மற்றும் கனரக போர்க்கலங்களுடன் இந்த வலிந்த தாக்குதலை 58 ஆவது படையணியினர் மேற்கொண்டனர்.

முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால் மற்றும் சாளம்பன் பகுதியில் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளே இந்த தாக்குதலுக்கு இலக்காகின.

இதில் 172 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 289 பேர் காயமடைந்துள்ளனர்.

படையினரின் இந்த தரைவழி முன்நகர்வு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 352 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 722 பேர் காயமடைந்துள்ளனர்.

எனினும் சிறிலங்கா படையினர் இன்று இந்த செய்தி பதிவேற்றப்படும் வரை தொடர்ச்சியாக தரைவழியாக கடுமையான வலிந்த தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையாக பதில் தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.

படையினரின் தாக்குதல்களின்போது மக்கள் வாழ்வ்விடங்களை நோக்கி படையினரின் எம்.ஐ.-24 ரக உலங்குவானூர்திகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

http://puthinam.com/full.php?2b34OOU4b33g6...2f1eW0cc2mcYAde

  • கருத்துக்கள உறவுகள்

01/05/2009, 16:39 மணி தமிழீழம் [வன்னிச் செய்தியாளர் செந்தமிழ்]

இருவழி படை நகர்வு முறியடிப்பு: 352 படையினர் பலி! படையினரின் தாக்குதல்களில் 178 தமிழர்கள் படுகொலை!

சிறீலங்காப் படையினர் வலிந்த கடல் மற்றும் தரை ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 352 சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 722 படையினர் காயமடைந்துள்ளனர். கடற்புலிகளின் முறியடிப்புத் தாக்குதல்களில் டோறா அதிவேகப் பீரங்கிப் படகும், அதிவேக நீருந்து விசைப்படகும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை பிற்பகலம் முதல் இன்று அதிகாலை வரை சிறீலங்காப் படையினர் கடல்வழி தரையிறக்க முயற்சியையும், தரைவழி ஊடுருவல் முயற்சியையும் மேற்கொண்டிருந்தனர்.

சிறீலங்காப் படையினரின் இரு வழி முன்னகர்வுகளுக்கும் ஆதரவாக சிறீலங்காப் படையினரின் பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி எறிகணைகள், மோட்டார் எறிகணைகள், டாங்கி எறிகணைகள், நெடுந்தூர கனோன் பீரங்கிகள், நெடுந்தூரத் துப்பாக்கிச் சூடு, கடல்வழி பீரங்கித் தாக்குதல்கள், எம்.ஜ-24 உலங்கு வானூர்தி வெடிகணைத் தாக்குதல்கள் நடத்தினர்.

கடல்வழி தரையிறக்க முயற்சிகளை கடற்புலிகள் முறியடித்துள்ளனர். இதபோன்று தரைவழி முன்னகர்வுகளை விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் முறியடித்துள்ளன. கடற்புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதல்களில் சிறீலங்காக் கடற்படையினரின் டோறா அதிவேகப் பீரங்கிப் படகும், அதிவேக நீருந்து விசைப்படகும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 352 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 722 படையினர் காயமடைந்துள்ளனர்.

படையினரின் இருவழி முன்னகர்வுகளுக்கும் ஆதரவாக சிறீலங்காப் படையினர் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது நடத்திய தாக்குதல்களில் 178 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 289 தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

pathivu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.