Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச தலைவருடனான சந்திப்பை கூட்டமைப்பு புறக்கணித்தது ஏன்?: சம்பந்தன் விளக்கம்

Featured Replies

"வாக்குறுதிகளைக் காப்பாற்றாமல், தமிழ்க் கட்சிகளை அழைத்துப் பேசி அவர்களுடன் இணைந்து செயற்படுவது போல உலகத்துக்குக் காட்டிக்கொள்ள அரச தலைவர் முற்படுகின்றார்" எனக் குற்றம் சாட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், "அவ்வாறான ஒரு முயற்சிக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டிய ஒரு தேவை எமக்கு இல்லை என்பதால்தான் இன்றைய (நேற்று) சந்திப்பைப் புறக்கணித்தோம்" என மேலும் தெரிவித்தார்.

வன்னியில் இடம்பெறும் போரின் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலை தொடர்பாக ஆராய்வதற்காக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் நேற்று செவ்வாய்க்கிழமை அழைக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்துள்ளது.

நேற்று காலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும், இதற்கு முன்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தச் சந்திப்பைப் புறக்கணிக்கும் என்ற ஊகங்கள் வெளியாகியிருந்தன.

இந்தச் சந்திப்பை தமிழ்க் கூட்டமைப்பு புறக்கணித்தமைக்கான காரணம் என்ன என ஊடகங்கள் சம்பந்தனிடம் வினவியபோது அதற்கான பின்னணியை வளக்கிக் கூறியபோதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

"வவுனியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மக்களுடைய நிலை தொடர்பாக ஆராய்வதற்காக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் ஒன்று கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்றது. தமிழ்க் கட்சிகள், அரச சார்பற்ற அமைப்புக்கள் போன்றன இதில் கலந்துகொண்டன.

இந்தக் கூட்டத்தில் பிரதிநிதிகள் குழு ஒன்றை வவுனியாவுக்கு அனுப்பி நிலைமைகளைப் பார்வையிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அரசாங்கத்தின் அனுமதியில்லாமல் வவுனியா செல்ல முடியாது என்பதால் அதற்கான அனுமதியை அரச தலைவரைச் சந்தித்துப் பெற்றுக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியிலேயே அரசுத் தலைவரைச் சந்திப்பதற்கான நேர ஒதுக்கீட்டைக் கோரும் கடிதம் ஒன்று இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைப்புக்கள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகளால் அனுப்பிவைக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே இன்றைய (நேற்று) சந்திப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

வவுனியாவுக்குச் செல்வதற்கு இராணுவத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காகத்தான் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதால் இதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இருந்தபோதிலும் வவுனியா செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டால் அந்தக் குழுவுடன் இணைந்து செல்வதற்கு கூட்டமைப்பு தயாராகவுள்ளது.

வவுனியாவில் உள்ள மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்க் கூட்டமைப்பு அக்கறையாக இருக்கின்றது. அதனால்தான் அரச சார்பற்ற நிறுவனத்தினால் அழைக்கப்பட்ட கூட்டத்தில் அரசுடன் இணைந்து செயற்படும் தமிழ்க் குழுக்களும் கலந்துகொள்ளும் என்பதை அறிந்திருந்தும் அதில் நாம் கலந்துகொண்டோம்.

ஆனால், இன்றைய (நேற்று) கூட்டம் வெறுமனே போக்குவரத்து ஒழுங்குகள் மற்றும் அதற்கான அனுமதியைப் பெறுவதற்கான ஒரு கூட்டமாகவே இருந்தது. அங்குள்ள நிலமைகளை நாம் நேரடியாகப் பார்க்காமல் அங்குள்ள மக்களுடைய பிரச்சினைகளையிட்டு நாம் பேச முடியாது. ஏனெனில் அங்குள்ள நிலைமைகள் பற்றி சரியான தகவல்கள் எம்மிடம் இல்லை.

அத்துடன், இன்றைய நிலையில் அரசாங்கம் தன்னுடைய வாக்குறுதிகளின் அடிப்படையில் செயற்படாமல் இருக்கின்றது. அனைத்துலக சமூகத்துக்கு, ஐ.நா. சபைக்கு கொழும்பு வந்து அரசுடன் பேசிய வெளிநாட்டுப் பிரமுகர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை அரசாங்கம் காப்பாற்றவில்லை.

இந்நிலையில் இதற்கு எமது அதிருப்தியைத் தெரிவிக்க வேண்டிய ஒரு தேவையும், இதனை அனைத்துலக சமூகத்துக்கு எமது செயற்பாட்டின் மூலமாகக் காட்டிக்கொள்ள வேண்டிய ஒரு தேவையும் இன்றைய நிலையில் அவசியம் என நாம் கருதுகின்றோம்.

அரச தலைவர் தான் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் காப்பாற்றாமல், தமிழ்க் கட்சிகளை அழைத்துப் பேச்சுக்களை நடத்தி அவர்களுடன் இணைந்து செயற்படுவது போல உலகத்துக்குக் காட்டிக்கொள்ள முற்படுகின்றார். அவ்வாறான ஒரு முயற்சிக்கு நாம் எமது ஒத்துழைப்பை வழங்க வேண்டிய ஒரு தேவை எமக்கு இல்லை என நாம் கருதுவதாக" சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.