Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசமே!

Featured Replies

சர்வதேசமே

தமிழினம் செய்த தவறு என்ன?

உங்கள் தண்டனைக்

கோவைகளையெல்லாம்

தட்டிப்பார்த்து தமிழினத்தை

தனிமைப்படுத்துவதற்கு

தடயம் தேடிக்கொண்டிருப்பதற்கு.

தமிழினம் அழியுதென்று

தக்க இடம் கொடுத்து

தமிழ் மண்ணின் கொடுமைகளை

தாராளமாய் அறிந்துகொண்டும்

தயங்குவதேனோ

தடைகளை உடைப்பதற்கு.

வெழிநாட்டார் எவரையும்

வெறுப்பாகப் பார்க்கவில்லை

உலக மக்களுக்கு

ஊறேதும் செய்ததில்லை

அயல் நாட்டவரை

அச்சுறுத்தி நடக்கவில்லை

அல் கைதாபோல்

அடுக்குமாடி தகர்க்கல்லை

விடுதலை என்று சொல்லி

வெளி நாட்டார் விமானத்தை

கடத்தவில்லை.

வீணே எதற்கு இந்த

விழியறியா விமர்சனங்கள்.

உண்மை நிலை அறிந்தும்

ஊமையாய் இருப்பதேனோ

மனித நேயத்தின்

மாண்பர்கள் நீங்கள்

மயங்கலாமோ – அந்த

மனிதப் பிறவியில்லா

மகிந்தவின் பேச்சுக்கு.

அறிவின் சிகரங்களாய்

அகிம்சயின் உருவங்களாய்

பல் இன மக்களின்

பாதுகாப்பு அரணாய்

பாரினில் துயர் போக்க

பகல் இரவாய் பாடுபடும்- நீங்கள்

பலியாகலாமோ பாதகன்

மகிந்தவின் பயங்கரவாத அரசியலில்

உங்கள் அகராதியில்

பயங்கரவாதத்தின் பதம் என்ன?

பச்சிளம் பாலகரை

பள்ளிச் சிறார்களை

கர்ப்பிணி முதல்

பொல்லூன்றும் பாட்டிவரை

குண்டுமழை பொழிந்து

கோன்றொழிப்பதென்று

குறிப்பிலில்லையா?

வணக்கஸ்த்தலங்களையும்

வளர் கல்வி கூடத்தையும்

ஆதரவு தேடி ஓடும்

ஆகதி முகாம்களையும்

ஆதாரம் கொடுக்கும்

வைத்திய சாலையையும்

இனவெறி கொண்டு

பிணவறையாக்கும்

இன அழிப்பின் ஆழம்

அர்த்தப்படவில்லையா.

அரச பாதுகாப்பில்

அழித்தொழிப்பு

தமிழரின் சொத்து

வீதியோரங்களிலெல்லாம்

விதைக்கப்படும்

அப்பாவிகளின் வித்துடல்கள்.

சிங்களக் கங்கைகளில்

மீனுக்கு இரையாகும் தமிழரின்

தலையற்ற உடல்கள்.

உறைவிடங்களிலேயே

காணாமல் போகும் மக்கள்-பின்

ஊர் கரையில் பிணமாகும் காட்சி.

தெருவோரம் போனமகன்-பின்

தேடிப்பிடிப்பார்கள்

தெற்கிலே நடைப்பிணமாய்.

கல்லூரி சென்ற பெண்ணைக்

காணவில்லை-பின்

கற்பிழந்து கறைபடிந்து

எலும்புக் கூடுகளாய்

எரியுண்டு கிடப்பாள்

இராணுவ வேலிக்குள்ளே.

இவையெல்லாம் பெரிதல்ல

இதற்கெல்லாம் பொருளில்லை

ஏனென்றால்,

நிரந்தரமாகவே மாற்றப்பட்டுவிட்டது

பயங்கரவாதத்தின் அர்த்தம்

உங்கள் அகராதிகளில்.

தன்மானத் தமிழன்

தயங்கான் உம் தலையீட்டால்

தலை நிமிர்ந்து காப்பான்

தரணியிலே தமிழனுக்கு

தமிழீழம் மீட்ப்பான்.

தமிழீழக் கொடியசையும்

உன் தலைநகரிலும் கூட

தலை நிமிர்ந்து நீயும்

தலை வணங்கும் காலம் வரும்.

விலங்கிட்ட கைகளுக்கு

மலர்ச் செண்டு நீகொடுத்து

செங்குருதிக் கால்களுக்கு

செங் கம்பளம் நீ விரித்து

வரவேற்கும் காலம் வரும்.

கவிதைகள் எழுதிப் பளக்கமில்லை ஒரு ஆர்வத்தில் எழுதிவிட்டேன், அதை வெளியிடுவதற்கு யாழ் களம் தளமாக அமைந்துள்ளது.

Edited by naaddan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.