Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத்தமிழர் போராட்டங்களால் சர்வதேசத்தில் ஏற்படும் அதிர்வுகளை சமாளிக்கா சிறிலங்கா அரசு புதிய LOBBY குழுவை நிறுவியுள்ளது

Featured Replies

இலங்கையில் தொடரும் மோதல்கள் தொடர்பாக சர்வதேச ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாழ்வதற்கு இலங்கை அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்துள்ளது.

சர்வதேச ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகமவால் மாத்திரம் சமாளிக்கமுடியாது எனக் கூறியே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்துள்ளது.

அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, கெஹலிய ரம்புக்வெல, ரோகித்த போகல்லாகம, டியூ குணசேகர, டக்ளஸ் தேவானந்தா???, சரத் அனுமுகம, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் இந்த அமைச்சரவை உபகுழுவில் அங்கம் வகிக்கின்றனர். இம்மாதம் 16ஆம் திகதிக்குப் பின்னர் இந்தியாவின் அரசியல் சூழ்நிலையில் இலங்கைக்குச் சாதகமாக முடிவுகள் ஏற்படும் என அமைச்சரவை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அத்துடன், உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்தும் இந்த உபகுழு ஆராய்ந்து அரசாங்கத்துக்கு விளக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பித்தபோது வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம சமூகமளித்திராமை குறித்து ஜனாதிபதி தனது கோபத்தை வெளிக்காட்டியதாகவும் அமைச்சரவை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தாமதப்படுத்தாது உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்திற்கு சமூகமளித்து இலங்கைப் பிரச்சினை தொடர்பான சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடுகளை விளக்கிக் கூறுமாறு ஜனாதிபதி, ரோகித்த போகல்லாகமவைப் பணித்துள்ளார்.

அதன் பின்னர் ஆரம்பமான அமைச்சரவைக் கூட்டத்தில் பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிடமிருந்து கொடுக்கப்படும் அழுத்தங்கள் குறித்தும், சீனா, ரஷ்யா, வியட்னாம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடமிருந்து கிடைத்திருக்கும் ஒத்துழைப்புக்கள் குறித்தும் வெளிவிவகார அமைச்சர், அமைச்சரவையில் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், பொதுமக்கள் தங்கியிருக்கும் பகுதிகள் மீது அரசாங்கப் படைகள் தாக்குதல்களை நடத்தவில்லையெனவும், விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்குண்டிருக்கும் மக்களை மீட்கும் மனிதநேய ???நடவடிக்கைகளையே அவர்கள் முன்னெடுத்திருப்பதாகவும் அமைச்சர் ரோகித்த போகல்லாகம அமைச்சரவைக்குக் கூறினார்.

http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

மிகத்திட்டமிட்டு இன அழிப்பை நடத்திகொண்டு இதுவரை 10000மக்களுக்கு மேல் இனவெறிக்கு தீனியாக்கி 20 000 மேல் காயப்படுத்தி இதுவரைக்கும் தொடரும் அழிவை தொடர்ந்து இனி மீண்டும் உலகை ஏமாற்ற திட்டம் தீட்டியுள்ளான்...

புலம் பெயர்மக்கள் செய்யும் போரட்டங்களின் விளைவினால் மிரண்டு பொய்கள், பயங்கரவாத பூச்சாண்டிகளுடன் இரத்தக்கையுடன் வருகிறான்...

புலம் பெயர்மக்களே கூடுங்கள் எப்படி இதனை சமாளித்து முகத்தில் கரிபூசி எம்மினத்தை கொன்றழிக்கும் கசாப்புகடைக்காறனை உலகின் முன் குற்றவாளியாகவும் தண்டனையில் இருந்து தப்பாமல் செய்வது என்பது பற்றி திட்டமிட்டு செயலில் இறங்குங்கள்..

நாளை, மற்றவர்கள் பார்ப்பார்கள் என்பது உலகின் எல்லாத்தமிழரையும் பயங்கரவாதிகளாக்கி அழிப்பதற்கே... நாங்களும் சில காய் நகர்த்தல்களை செய்யவேண்டும்... ஒரே பாணியாக செய்வதை மாற்றவேண்டும்

உலகத்திற்கேற்ப மாறவேண்டும்... இது தந்திரம்...

Edited by குக்கூ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.