Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவின் திடீர் பாசம் ஒன்றும் ஈழத்தமிழரின் கண்ணீரிலல்ல.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Superpowers_in_World.png

அமெரிக்க வல்லாதிக்க அரச கடற்படை இன்று (15-05-2009) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஈழத்தில் வன்னியில் யுத்த வலயத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்க அல்லது அவர்களுக்கான மனிதாபிமான உதவியை வழங்க தான் தயாராக இருப்பதாகவும் இந்தியக் கடற்படையின் ஒத்துழைப்போடு தான் இதனை முன்னெடுக்க முடியும் என்றும் கூறி இருக்கிறது.

ஐநாவே கடந்த 5 மாதங்களாக போரில் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று அறிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க முன்வராத அமெரிக்கா, சிறீலங்கா சிங்கள அரசு முன்னெடுக்கும் தமிழின அழிப்புப் போர் முடிவடையும் தறுவாயில்.. இப்போ திடீர் என்று தமிழ் மக்கள் மீது பாசம் காட்டுவது ஒன்றும் அவர்கள் மீதான அக்கறையில் அல்ல.

ஐநா பாதுகாப்புச் சபைக்கு சிறீலங்கா விவகாரத்தை பிரிட்டனும் பிரான்சும் அமெரிக்காவும் கொண்டு வந்ததே தமது பார்வையிலிருந்தும் கவனிப்பில் இருந்தும் விலகிச் செல்லும் சிறீலங்காவை தமது வழிக்குக் கொண்டு வரவே அன்றி ஈழத்தமிழர் மீதான அக்கறையில் அல்ல.

பாதுகாப்புச் சபையில் சிறீலங்கா தொடர்பான விவாதம் நிகழ்வதை சீனாவும் ரஷ்சியாவும் வலுவாக எதிர்த்து வந்ததுடன் இவ்விரண்டு நாடுகளும் விடுதலைப்புலிகளுடனான போர் என்ற தொனியில் தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு செய்யும் போருக்கு பகிரங்க ஆதரவு வழங்கியதுடன் ஆயுத மற்றும் இராணுவ உதவிகளையும் குறைவின்றி தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கின்றன.

சீனா இவ்வுதவிகளோடு மட்டும் நின்று விடாமல் இந்தியாவின் சிறீலங்கா சிங்கள அரசு நோக்கிய நட்புறவு ரீதியான வலிந்த நகர்வுகளை முறியடிக்கும் வகையில் இந்தியா சிறீலங்காவுக்கு வலிந்து வழங்கி வரும் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளுக்கு அதிகப்படியாக தனது உதவிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் இந்தியா சிறீலங்காவுக்கு வழங்கிய 100 கோடி இந்திய ரூபாய் கடனுக்கு போட்டியாக மில்லியன் டொலர்கள் கடனை தூக்கி வீசியது சீனா. அதுமட்டுமன்றி சிறீலங்காவின் தென்கோடித் துறைமுகமான அம்பாந்தோட்டை துறைமுகத்தை குறிவைத்து 1 பில்லியன் டொலர் அபிவிருத்தி என்ற போர்வையில் அதனை தனதாக்கிக் கொண்டதுடன் அந்த நிதியும் சிறீலங்காவை வந்தடைய இருக்கிறது.

விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகளாக்கி.. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக்கி அதில் சிறீலங்காவை மயங்க வைத்து அதனூடு தமது நலன் காக்கலாம் என்றிருந்த அமெரிக்கா மற்றும் இந்தியாவின் எதிர்பார்ப்புக்களை மிஞ்சி சீனாவினதும் ரஷ்சியாவினதும் ஈரானினதும் மற்றும் சில அமெரிக்க மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு அரபுலக நாடுகளினதும் சிறீலங்காவுடனான நெருக்கம் அதுவும் விடுதலைப்புலிகளின் கதை கிட்டத்தட்ட முடிந்ததாகக் கூறப்படும் நிலையில் அதிகரித்துள்ளமை அமெரிக்காவையும் இந்தியாவையும் தூக்கிவாரிப் போட்டுள்ளது.

இந்த நிலையில் சிறீலங்காவின் மீதான தமது பிடி மேலும் இழகி.. மோசமாகி தமது கட்டுக்குள் அடங்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் தான் சிறீலங்காவுக்கான சர்வதேச நாணய நிதிய கடனையும் அமெரிக்கா தள்ளி வைத்தது. தமிழ் மக்களின் மீதான அக்கறையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாக சிலர் இதனைச் சித்தரிக்க முயல்கின்றனர். அது உண்மையில் மிகத் தவறானது. தமிழர்களுடனான சிங்கள அரசின் போரில் சிங்கள அரசுக்கு ஆயுத உதவி மற்றும் உளவுத்தகவல்களை வழங்கி அமெரிக்கா உதவி வந்ததை அண்மையில் ரணில் விக்கிரமசிங்கே பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருந்தது ஒன்றே போதும் அமெரிக்காவின் இந்த நகர்வுகள் எவையும் தமிழ் மக்களின் நலன் கருதியதல்ல என்பதை நிரூபிக்க.

சுருங்கக் கூறின் விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களின் போராட்டத்தையும் மையமாக வைத்து தமது நலன்களை பாதுகாக்க இந்தியாவும் அமெரிக்காவும் பெரிய திட்டம் வகுத்திருந்த நிலையில் சீனாவும் ரஷ்சியாவும் விசயத்தில் முந்திக் கொண்டுள்ளன. குறிப்பாக சீனா தத்துரூபமாகக் காய் நகர்த்த அதனை தனக்கே உரித்தான சிறப்பு முறையில் கையாள்கிறது சிறீலங்கா என்பதே யதார்த்தம்.

//இன அழிப்புப் போரை எதிர்கொண்டு சொந்த மண்ணின் விடுதலைக்காய் போராடும் ஈழத்தமிழர்கள்..//

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை மையமாக வைத்து அதனைப் பயங்கரவாதமாக்கி தமிழர்களை இலங்கைத் தீவிலின்றும் அழிக்க வேண்டும் என்ற இனவெறியை சிறீலங்கா பன்னெடுங்காலமாகக் கொண்டிருப்பினும் இன்று சர்வதேச நாடுகள் மத்தியில் நிலவும் சிறீலங்காவை மையமாக வைத்த இந்து சமுத்திரத்தில் ஆதிக்கத்துக்கான போட்டா போட்டிச் சூழலை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அதில் தனது நீண்ட நாள் கனவை நனவாக்க நினைக்கிறது சிங்களச் சிறீலங்கா.

ஆனால் இந்தச் சூழ்நிலைகளை எல்லாம் தெளிவாக விளங்கிக் கொண்டிருந்தும் இந்திய உபகண்டத்தில் தமிழர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யாமல் விட்டமை என்பதற்கு தமிழர்களுக்கு தார்மீக ரீதியில் உதவ பிராந்தியத்தில் பலம் பொருந்திய அரசோ அல்லது தமிழர்கள் மத்தியில் தமது பலத்தை நிரூபிக்கக் கூடிய ஒற்றுமையோ இருக்கவில்லை என்பதே முக்கியமான காரணிகளாக இருக்கின்றன.

இன்று ஐரோப்பிய பிரதிநிதிகளும் ஐநாவும் ஒபாமாவும் மேனனும் சிதம்பரமும் கருணாநிதியும் மற்றும் ஜெயலலிதாவும் ஈழத்தமிழர்கள் மீது அக்கறை காட்டுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்கல்ல. தமது நாடுகளின், அரசுகளின் மற்றும் தமது சொந்த அரசியல் நலன்களை காக்கும் நோக்கில் சிறீலங்காவை பயன்படுத்தவும் அதனை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்குமே ஆகும். இதற்காகவே தான் சீனாவும் வியட்நாமும் ரஷ்சியாவும் சிறீலங்காவை அரவணைக்கின்றன.

இந்த அரவணைப்புக்களின் சுகத்தில் தான் சிறீலங்கா சிங்களப் பயங்கரவாத தேசம் தமிழின அழிப்பை, மிக வசதியாக இத்தனை மனித உரிமை மீறல்களையும் பகிரங்கமாகச் செய்து கொண்டு ஐநாவைக் கூட எதிர்த்து மிடுக்காகப் பேசிக் கொண்டு செய்ய முடிகிறது.

இதன் பின்னணியில் ஈழத் தமிழர்கள் இன்று அனுபவிக்கும் துன்பியல் என்பது உண்மையில் தமிழர்களுக்கு என்றான ஒன்றல்ல. ஒட்டுமொத்த உலகுக்குமானது.

இன்றைய புதிய உலகு ஒழுங்கில் இது மனித உரிமைகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவால் என்பதற்கும் மேலாக இனங்களின், மக்களின் விடுதலை என்பது அவர்கள் எந்த வல்லாதிக்க சக்தியை அரவணைக்கிறார்களோ அதன் பால்பட்டே அமையும் என்ற உண்மையையும் உலகுச் சொல்லி இருக்கிறது. அதாவது மக்களின் வாழ்வுரிமை என்பது வல்லாதிக்க சக்திகளை, ஆதிக்க சக்திகளை அரவணைப்பதால் பெறப்படுமே அன்றி வேறு வழியில் அது அமைய முடியாது என்பதே ஆகும். எனி என்று மாறுமோ இந்த நிலை என்பது கேள்விக் குறியாகவே இருக்க, அது மாறுவதற்கிடையில் ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டு அல்லது முழுமையாக அடிமைப்படுத்தப்பட்டு இலங்கைத் தீவு முழுமைக்கும் சிங்கள இராட்சியம் அமைக்கப்பட்டு விடும் என்பது மட்டும் திண்ணம்.

Labels: அரசியல், ஈழத்தமிழர், ஈழம், சர்வதேசம், மக்கள் அவலம், மக்கள் பார்வை

மூலம்: http://kundumani.blogspot.com/

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.