Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இத்தனை ஆண்டுகாலமாக இருந்த ரணத்தை ஆற்றுவதற்கு வழிப்பார்க்க வேண்டும்;ஜோன் ஹோம்ஸ்

Featured Replies

"ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தை வென்று விட்டது என்ற வெற்றிக்களிப்பு கொள்ளாது, இந்த நேரத்தில் இத்தனை ஆண்டுகாலமாக இருந்த ரணத்தை ஆற்றுவதற்கு வழிப்பார்க்க வேண்டும். அத்துடன் அனைத்து சமுதாயத்தினரும் சம உரிமையுடன் வாழ வேண்டும்" என ஐ.நாவின் மனிதாபிமான பணிகளுக்கான துணை பொதுச்செயலர் ஜோன் ஹோம்ஸ் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக ஐ.நாவின் மனிதாபிமான பணிகளுக்கான துணை பொதுச்செயலர் ஜோன் ஹோம்ஸ் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.

தமிழோசை: கொல்லப்பட்டவர்களின் உடல்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படலாம் என்பது போன்ற அச்சங்கள் நிலவுகின்றனவே

ஜோன் ஹோம்ஸ்: "அப்படி செய்வது சரியான ஒன்றாக இருக்காது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இப்போது என்ன செய்ய வேண்டும் என்றால், இது தான் இலங்கை அரசாங்கத்திற்கும் நான் சொல்வது, ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தை வென்று விட்டது என்ற வெற்றிக்களிப்பு வேண்டாம். இந்த நேரத்தில் இத்தனை ஆண்டுகாலமாக இருந்த ரணத்தை ஆற்றுவதற்கு வழிப்பார்க்க வேண்டும். அனைத்து சமுதாயத்தினரும் சம உரிமையுடன் வாழ வேண்டும்."

தமிழோசை: அதே நேரம் விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் சரணடைந்துள்ளனர், சிலர் காயமடைந்த நிலையில் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள். எத்தனை பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு சட்டபூர்வ வசதிகள் கிடைக்கின்றனவா என்பது குறித்து ஐநாவுக்கு எதாவது தெரியுமா

ஜோன் ஹோம்ஸ்: எத்தனை பேர் இருக்ககிறார்கள் என்பது எனக்கு தெரியாது. முதலில் விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்கள் தவிர மற்றவர்கள் மீது நடவடிக்கை இருக்காது என இலங்கை அரசு கூறியது. முன்பு மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களுக்கு சென்ற போது ஏராளமான மக்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டவர்களும் இருந்தனர். இவையெல்லம் முன்னர் நடந்தது. ஆகவே அனைவரும் முறையாக சட்டத்திற்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்."

தமிழோசை: அங்கே போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தபோது மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வந்த மூன்று மருத்துவர்கள் தற்போது அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள்த

ஐ நா இனியாவது தமிழ்மக்களை அவர்களின் உரிய இடத்தில் குடியேற்ற உடன் இலங்கையில் செயல்படுமா?

அல்லது 5 வருடத்திற்கு முகாம்களில் வைத்து பராமரிக்க உதவி பலஸ்தீன அகதிகள் போன்ற நிலையை இலங்கையிலும் ஏற்படுத்தி தமிழ்மக்கள் நிரந்தர அகதிகளாக்குமா?

இதன் மூலம் தமிழ்மக்களின் இடங்கள் எல்லாம் சிங்களக்குடியேற்றமாக்குமா?

தமிழனுக்கு அவலம் என்றால் தட்டிக்கேற்க யாரும் இல்லாத நிலையை வருங்கால சந்ததிகள் வழிகாட்டப்படவேண்டும்...

வெளி நாடுகளில் ஊடகத்துறைகள், அரசியல் சட்டத்துறைகளில் கல்விகளின் மூலம் ஒவ்வொரு நாடுகளிலும் செல்வாக்கு செலுத்தும் அளவிற்கு புக வேண்டும்...

எம் இனத்திற்கு நல்வழிகாட்டும் வெளி உலக சுய நலமில்லாத தலைமைகள் உருவாகவேண்டும்..

சரியான வழி நடத்தல் அணுகுமுறை தோல்விகளை நாளடைவில் வெற்றியாக்கும்...

தோல்வி இதுவென நினைத்தால்....தமிழன் வாழ்வை நினைக்கலாமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.