Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பற்றிய ஒரு கடுமையான தீர்மானமொன்றை முன்மொழியும் வாய்ப்பை வேதனைக்குரிய விதத்தில் பான் கீ மூன் கழுத்தறுத்து விட்டார்:

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் இடம்பெயர்ந்திருக்கும் பொதுமக்களின் நிலைமை ஐ.நா.வில் மிகவும் தாழ்ந்த மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளர் மத்தியூ ருசல்லீ விமர்சித்திருக்கிறார்.

அதுமட்டுமன்றி மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஐநா செயலாளர் நாயகத்தின் கூற்றைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட 24 மணித்தியாலத்தின் பின்னரும் தாம் அதனைப் பார்வையிடவி;ல்லை என்றும் ஐநா பிரதிநிதி தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு அண்மையில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மேற்கொண்ட விஜயம் தொடர்பாக பாதுகாப்பு சபையில் அவர் உரையாற்றுவதற்கு அழைக்கப்பட இருந்த போதும் கூட சீனா, ரஷ்யா, வியட்நாம் மற்றும் ஏனையோரின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது.

இலங்கையில் இப்போது மோதல்கள் இல்லாததால் இலங்கை விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு சபைக்கு தெரியப்படுத்த தேவையில்லை என்றும் பொதுச் சபையிலும் ஆராயப்பட வேண்டியதில்லை என்றும் வியாழக்கிழமையன்று மூடிய கதவுக்குள் இடம்பெற்ற பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் சீனா, ரஷ்யா, வியட்நாம் உட்பட சில நாடுகள் சிபாரிசுகளை முன்வைத்திருந்ததாக ஐ.நா.விலுள்ள இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளர் மத்தியூ ருசல்லீ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெயர்ந்திருக்கும் பொதுமக்களின் நிலைமை ஐ.நா.வில் மிகவும் தாழ்ந்த மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மத்தியூ ருசல்லீ விமர்சித்திருக்கிறார்.

கடந்த வியாழக்கிழமையன்று இடம்பெற்ற பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் முறையே மே, ஜூன் மாதங்களில் பாதுகாப்பு சபைக்கு தலைமை தாங்கும் நாடுகளான ரஷ்யா, துருக்கி ஆகியவற்றின் ஐ.நா.விலுள்ள தூதுவர்களை தனிப்பட்ட முறையில் பான் கீ மூன் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐ.நா.வின் அடித்தளத்தில் உள்ள நிலவறையில் பான் கீ மூன் இலங்கை விஜயம் தொடர்பாக பாதுகாப்பு சபைக்கு தெரியப்படுத்துவார் எனக் கூறப்பட்டது. ஆயினும், அது இடம்பெறவில்லை.

அதேசமயம், மனித உரிமைகள் கண்காணிப்பகம் பான் கீ மூனை கடுமையாக சாடியுள்ளது. இலங்கையிலுள்ள முகாம்களை பாராட்டியதாகவும் இதன்மூலம் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் புதன்கிழமை இடம்பெற்ற விசேட அமர்வின் போது சர்வதேச விசாரணைக்காக விடுக்கப்பட்ட அழைப்பு தோற்கடிக்கப்பட்டதற்கு இதுவே காரணமாக அமைந்திருப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுமையாக சாடியுள்ளது.

பான் கீ மூன் தனது இலங்கை பற்றிய உரையினால் இலங்கை பற்றிய ஒரு கடுமையான தீர்மானமொன்றை முன்மொழியும் வாய்ப்பை வேதனைக்குரிய விதத்தில் கழுத்தறுத்து விட்டார் என்றும் அது குற்றம்சாட்டியிருந்தது.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் புதன்கிழமை வெளியிட்டிருந்த இந்த அறிக்கை தொடர்பாக பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் மேரி ஒகாபேயிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வியெழுப்பியது.

இலங்கையில் பான் கீ மூன் அண்மையில் விடுத்திருந்த கருத்துகளால் வலுவான தீர்மானமொன்றை மேற்கொள்ளும் முயற்சிகள் புறந்தள்ளப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது.

தனது இலங்கை விஜயத்தின் போது பான் கீ மூன் இலங்கை அரசாங்கத்தை மிகவுயர்ந்த சாதனை, பிரமிக்கத்தக்க அளவு முயற்சி என்றெல்லாம் பகிரங்கமாகப் பாராட்டியிருந்தார்.

உதவி தேவைப்படும் பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை உறுதிப்படுத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்திருந்தது.

அரசாங்கத்தின் உறுதிமொழிகளை அவர் ஏற்றுக்கொண்டிருக்கும் அதேசமயம், அவை கடந்தகாலத்தில் திரும்பத்திரும்ப மீறப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டிருந்தது.

கடந்த ஏப்ரலில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா. செயலாளர் நாயகத்தின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான உயரதிகாரி ஜோன் ஹோம்ஸ் இலங்கையில் இடம்பெற்ற மோதல் இரத்தக் களரியை ஏற்படுத்தும் என கடுமையான வார்த்தைப் பிரயோகத்தை விடுத்து எச்சரித்திருந்தார். ஆனால், இந்த கருத்தைப் புறக்கணித்து இதில் இருந்தும் பான் கீ மூன் தன்னை தூர விலக்கி வைத்திருந்தார்.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்தது போன்றல்லாமல், சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுப்பதில் பான் கீ மூன் தவறை விட்டிருந்தார் என்று மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டிருந்தது.

இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் பேரவையால் அதிகளவு நடவடிக்கைகள் வெளிப்படுத்தப்படாததற்கான குற்றத்தில் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் பங்கு வகிக்கிறார் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இந்த செய்தி அறிக்கை வெளியிடப்பட்டு சுமார் 24 மணித்தியாலத்தின் பின்னர் இன்னர் சிற்றி பிரஸ் அவ்வறிக்கை தொடர்பாகக் கேட்ட போது அதனை ஐ.நா. பார்த்திருக்கவில்லை என்று ஒகாபே கூறியுள்ளார்.

இந்த விடயங்களில் பகிரங்கமாக ஐ.நா. செயலாளர் நாயகம் மிகத் தெளிவாக இருப்பதாகவும் சில சமயம் தனிப்பட்ட முறையில் இன்னும் அதிக தெளிவுடன் இருப்பதாகவும் ஒகாபே கூறியிருக்கிறார்.

சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் தொடர்ச்சியான குறிப்பிடத்தக்களவிலான மீறல்கள் பற்றிய நம்பத் தகுந்த குற்றச்சாட்டுக்கள் எங்கு எழுப்பப்பட்டாலும் அவையனைத்தும் மிகச் சரியான முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகம் மீளவும் விலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்நிலையில் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு மனித உரிமை பேரவை அனுமதிக்க மாட்டாது. எனினும் என்னென்ன நடைபெற்றுள்ளன. என்னென்ன நடைபெறவில்லை என்ற மேலும் பல தகவல்கள் வெளிவரவுள்ளன என்றும் அவற்றிற்கான சான்றுகள் கூட கிடைக்கப்பெறும் என்றும் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஆகவே சர்வதேச விசாரணைகள் மேலும் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. அத்துடன் சர்வதேச மனித உரிமைகள் சட்டமானது மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் பொறுப்புக் கூறுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் உண்மைகளை அறிந்து கொள்வதற்கும் பல வழிகள் உள்ளன என்றும் அது தெரிவித்துள்ளதுடன் இதற்குச் சில வேளைகளில் பல வருடங்களும் எடுக்கலாம். ஆனாலும் இந்தப் பிரேரணையும் இந்தக் கூட்டத் தொடரும் அவற்றிற்கான வாய்ப்புக்களைத் தடுத்து நிறுத்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/tamil_news....10113&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.