Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐரோப்பி ஒன்றியத்தினால் இலங்கைக்கு எதிராக என்ன செய்து விட முடியும்? கேள்வியெழுப்பும் சிங்கள தேசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பி ஒன்றியத்தினால் இலங்கைக்கு எதிராக என்ன செய்து விட முடியும்? கேள்வியெழுப்பும் சிங்கள தேசம்

EU_flag_1.jpg

புலிகளை தோற்கடித்த இலங்கை இன்னும் பல யுத்தங்களை எதிர்நோக்க வேண்டிய நிலையில் உள்ளதாக சிங்கள பத்திரிகையான லங்காதீபவில் (2009.6.1) வெளியான ஒரு கட்டுரையில் தெரிவிக்கப்படுகின்றது.

ஜெனீவாவில் ஒரு யுத்தத்தினை இலங்கை அமோகமாக வென்று விட்டபோதிலும் இன்னும் பல வெளிநாட்டு சதிகாரர்களின் யுத்தங்களை இலங்கை எதிர்நோக்க வேண்டியிருப்பதாகவும், ஐரோப்பா சங்கத்தின் இலங்கைக்கு எதிராக எடுக்கப்போகும் நடவடிக்கைகள் குறித்தும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்படுகின்றது. அக்கட்டுரையின் தமிழாக்க சுருக்கம் தரப்படுகின்றது.

இலங்கையர்களாக அனைவரும் ஒன்றிணைந்து வெளிநாட்டுச் சதித்திட்டங்களை தோற்கடிப்போம் என்று மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டாலும், அவரின் செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்தி இடையூறுகளை விளைவிக்க சர்வதேச சதித்திட்டங்கள் உள்ளன. ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் இலங்கை தொடர்பான விசேட அமர்வு மற்றுமொரு யுத்தத்தினைப் போன்றது. இந்த யுத்தத்தில் ஆயுதங்கள் பயன்படுத்தப்படாமையே உள்ள ஒரே வேறுபாடாகும். இந்த யுத்தத்தில் இலங்கை தோற்கடிப்பட்டிருப்பின் ஆயுதங்களை கொண்டு மேற்கொள்ளப்படும் யுத்தத்தின் போது ஏற்படும் பாதிப்புகளை விட அதிக பாதிப்புகளை எதிர்நோக்க நேர்ந்திருக்கும். மே மாதம் நிறைவடைவதற்கு முன்பே இலங்கைக்கு எதிராக வெளிநாட்டில் நடைப்பெற்ற யுத்தத்தில் இலங்கை வெற்றிப் பெற்றிருப்பது பேரதிருஷ்டமாகும்.

இவ்வாறு ஜெனீவா யுத்தத்தில் நாம் வெற்றிப் பெற்றிருக்கும் நிலையில் அடுத்ததாக ஐரோப்பிய சங்கம் யுத்தப் பிரகடனத்தினை விடுத்துள்ளது. ஜெனீவா கூட்டத்தில் பங்கேற்றால் பல விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதனாலும், தமது முயற்சிகள் தோல்வியடையும் என்பதனை அறிந்திருந்ததினாலும் நவநீதம்பிள்ளை அக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இலங்கைக்கு எதிராக ஆயுதங்களை ஏந்திக் கொண்டிருக்கும் வெளிநாட்டு புலித் தரகர்களின் இயலாமையை இச்செயல் வெளிப்படுத்தியது.

சுவீடனின் வெளிநாட்டு அமைச்சர் கார்ள் பிளிட் இலாபத்திற்கு தவளைகளை சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை எரிக் சொல்ஹெய்ம் ஜெனீவா கூட்டத் திரைமறைவில் ஆவியாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். பிரித்தானியாவின் மிலிபாண்ட் பிரான்சின் குஷ்னர் ஆகியோர் இலங்கைக்கு எதிரான யுத்த முன்னணியில் அணிவகுத்து நின்றனர்.

அமெரிக்கா இக் கூட்டத்தில் பார்வையாளராக மட்டும் செயற்பட்டது. இதற்கு காரணம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தினை இலங்கை வெற்றி கொண்ட விதத்தினை அறிந்த கொள்வதற்கா அவசியம் அமெரிக்காவுக்கு இருந்திருக்குமோ? பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்ததன் ஊடாக பலம் வாய்ந்த நாடுகளான மேற்கத்தேய நாடுகளின் முகத்தில் சேறுபூசப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் இலங்கை தோல்வியுற்றிருப்பின் சர்வதேச பிரஜைகள் இலங்கையின் முதுகுத்தண்டினை உடைக்கும் சூழல் உருவாகியிருக்கும். மனித உரிமைகள் மீறல் பற்றிய விசாரணைகளுக்காக சர்வதேச சமூகமே இலங்கைக்குள் நுழைந்திருக்கும். அதன்பின் இலங்கை மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டிருக்கும். பொருளாதார உதவிகள் நிறுத்தப்பட்டிருக்கும். அரசாங்கத்திற்கு பல்வேறு தடைகள் விதிக்கப்படும். ஹேக் நீதிமன்றில் போர்க் குற்றங்களுக்காக இலங்கை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கும். யுகோஸ்லோவியாவின் மெலோசொவிக்கிற்கு எதிராக நடத்தப்பட்டது போன்று இந்த வழக்கு உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தப்படும். அதன் ஊடாக இலங்கை இழிவுப்படுத்தப்பட்டிருக்கு

அடியேய் ஆப்பு இப்ப தெரியாதடி போகப்போகத்தான்டி தெரியும்

ஆசிய வல்லரசுகளின் அரவணைப்பு இருக்கும்வரை இப்படித்தான் பேசுவினம்.

நிச்சயம், காலங்கள் மாற்றும் களநிலைமைகளை.... அப்போது பேச திராணியிருக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.