Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போசாக்கின்றி பாதிப்புற்ற நிலையில் 10,000 குழந்தைகள் வவுனியா அகதிமுகாம்களில் - யுனிசெவ் நிறுவனம்.

Featured Replies

[09/06/2009, 01:59 மணி தமிழீழம் ]

போசாக்கின்றி பாதிப்புற்ற நிலையில் 10,000 குழந்தைகள் வவுனியா அகதிமுகாம்களில் - யுனிசெவ் நிறுவனம்.

வவுனியாவில் உள்ள அகதிமுகாம்களில் தங்கியுள்ள குழந்தைகளில்சுமார் 10000 குழந்தைகள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. அமைப்புகள் முகாம்களுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையால் அவர்களுக்கு உதவ முடியவில்லை என்று "யுனிசெவ்"நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.

malnutrition.jpg

நிவாரண உதவிகளுக்கு பத்து மணித்தியாலங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டி உள்ளதால் உடனடி உதவி தேவைப்படும் சிறு குழந்தைகள், முதியவர்கள், காயமுற்றோர் அவற்றைப் பெறமுடியாத நிலையும் முகாம்களில் உண்டு என்று "யுனிசெவ்"சுட்டிக்காட்டி உள்ளது.

"யுனிசெவ்"அமைப்பின் இலங்கைக்கான பேச்சாளர் ஜேம்ஸ் எல்டரை மேற்கோள் காட்டிஇ ஐ.நா.மனிதாபிமான அலுவலகத்தின் செய்திச் சேவையான ஐ.ஆர்.ஐ.என்.

செய்திச் சேவை இத்தகவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அந்தச் செய்திச்சேவை மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு:

மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களில் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகளவு குழந்தைகள் போசாக்கின்மையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

10,000 குழந்தைகள் போசாக்கின்மையால் பாதிப்பு

சுமார் 3 லட்சம் மக்கள் அரசால் அமைக்கப்பட்டுள்ள 40 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 13 வீதமானவர்கள் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள் எனச்சுட்டிக்காட்டியுள்ள மனிதாபிமான வட்டாரங்கள், சுமார் 10 ஆயிரம் குழந்தைகள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிடுகின்றன.

நீண்ட வரிசையில் பத்து மணித்தியாலங்களுக்கு மேல் நிற்கவேண்டியுள்ளதால் உடனடி உதவி தேவைப்படும், காயமடைந்தவர்கள், வயோதிபர்கள், சிறு குழந்தைகள், முதியவர்கள் எவராலும் நிவாரண உதவிகளைப் பெற முடியாதுள்ளது என்றும் அவைசுட்டிக்காட்டுகின்றன.

கடந்த மார்ச் மாதம் குழந்தைகளின் நிலை குறித்து ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. அப்போது 13 முகாம்களில் இருந்த குழந்தைகளில் 25.5 வீதமானவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இவர்களிலும் 5.2 வீதமானவர்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்தது. பிரச்சினையின் தீவிரத்தை அறியமுடியவில்லை

"தற்போது இந்த முகாம்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாகப் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட மேலும் பல சிறுவர்கள் இருக்கலாம். நாங்கள் இது குறித்துக் கவலையடைந்துள்ளோம். எனினும் எங்களால் முகாம்களுக்குள் செல்ல முடியாதுள்ளதால் பிரச்சினையின் உண்மையான தீவிரத்தை அறிய முடியாமலுள்ளது" என மனிதாபிமான அமைப்புகள் தெரிவிக்கின்றன.

முகாம்களுக்குள் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக மக்களின் சகல தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாதுள்ளது என யுனிசெவ் குறிப்பிட்டுள்ளது.

"சிறுவர்களின் ஊட்டச்சத்து நிலை எமக்கு முக்கிய கவலைக்குரிய விடயமாகவுள்ளது. இந்த முக்கியமான தருணத்தில் விதிக்கப்பட்டுள்ள தடைகள் காரணமாக சிறுவர்களின் போஷாக்கின்மைக்குத் தீர்வுகாண முடியாதுள்ளது" என யுனிசெவ் அமைப்பின் இலங்கைப் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டா தெரிவித்துள்ளார்.

[Pathivu]

போன கப்பலையும் துரத்துறாங்கள்.. யுனிசெவ்வாலும் ஒன்றையும் செய்ய முடியவில்லை..

புலிகள் மக்களை பிடிச்சு வைச்சிருக்கினம் என்று முதலைக் கண்ணீர் வடிச்ச சில நாய்கள்

இப்ப சிறீலங்கா அரசு முகாம்களில் மக்களை கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லும்போது

ஏன் வாயை பொத்திக்கொண்டு இருக்குதுகள்...?

இப்பவும் பதவிக்காக நாக்கை தொங்கபோட்டுவிட்டு காத்திருக்கிறார்கள்...

இயலுமென்றால் முகாமில் உள்ள மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றி

சிறீலங்கா அரசை கண்டித்துஒரு வரி பேசட்டும் பார்க்கலாம்.. தேவாங்குகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களே பாருங்கள். எங்கோ தப்பு நடக்குது.

அல்லது இலங்கை ஐ நா வில் வலுவாக காலூன்றி உள்ளது

காசா, பாக்கிஸ்தானுக்குள்ள அருமை நமது மக்களுக்கு இல்லை

Edited by Mullaimainthan

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா முகாம்களில் குழந்தைகள் போசாக்கின்றி கடும் பாதிப்பு : UNICEF

on 09-06-2009 07:20

வவுனியாவில் உள்ள அகதி முகாம்களில் தங்கியுள்ள குழந்தைகளில் சுமார் 10,000 குழந்தைகள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. அமைப்புகள் முகாம்களுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையால் அவர்களுக்கு உதவ முடியவில்லை என்று "யுனிசெவ்" நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.

நிவாரண உதவிகளுக்கு பத்து மணித்தியாலங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளதால் உடனடி உதவி தேவைப்படும் சிறு குழந்தைகள், முதியவர்கள், காயமுற்றோர் அவற்றைப்பெற முடியாத நிலையும் முகாம்களில் உண்டு என்று "யுனிசெவ்" சுட்டிக்காட்டியுள்ளது.

"யுனிசெவ்" அமைப்பின் இலங்கைக்கான பேச்சாளர் ஜேம்ஸ் எல்டரை மேற்கோள்காட்டி, ஐ.நா.மனிதாபிமான அலுவலகத்தின் ஐ.ஆர்.ஐ.என். செய்திச் சேவை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அந்தச் செய்திச்சேவை மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு:

மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களில் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகளவு குழந்தைகள் போசாக்கின்மையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

10,000 குழந்தைகள் போசாக்கின்மையால் பாதிப்பு

சுமார் 3 இலட்சம் மக்கள் அரசால் அமைக்கப்பட்டுள்ள 40 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 வீதமானவர்கள் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள் எனச்சுட்டிக்காட்டியுள்ள மனிதாபிமான வட்டாரங்கள்,சுமார் 10 ஆயிரம் குழந்தைகள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிடுகின்றன.

நீண்ட வரிசையில் பத்து மணித்தியாலங்களுக்கு மேல் நிற்கவேண்டியுள்ளதால் உடனடி உதவி தேவைப்படும், காயமடைந்தவர்கள், வயோதிபர்கள், சிறு குழந்தைகள், முதியவர்கள் எவராலும் நிவாரண உதவிகளைப் பெற முடியாதுள்ளது என்றும் அவைசுட்டிக்காட்டுகின்றன.

கடந்த மார்ச் மாதம் குழந்தைகளின் நிலை குறித்து ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. அப்போது 13 முகாம்களில் இருந்த குழந்தைகளில் 25.5 வீதமானவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இவர்களிலும் 5.2 வீதமானவர்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்தது.

பிரச்சினையின் தீவிரத்தை அறியமுடியவில்லை

"தற்போது இந்த முகாம்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாகப் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட மேலும் பல சிறுவர்கள் இருக்கலாம். நாங்கள் இது குறித்துக் கவலையடைந்துள்ளோம்.

எனினும் எங்களால் முகாம்களுக்குள் செல்ல முடியாதுள்ளதால் பிரச்சினையின் உண்மையான தீவிரத்தை அறிய முடியாமலுள்ளது"என மனிதாபிமான அமைப்புகள் தெரிவிக்கின்றன.

முகாம்களுக்குள் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக மக்களின் சகல தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாதுள்ளது என யுனிசெவ் குறிப்பிட்டுள்ளது.

"சிறுவர்களின் ஊட்டச்சத்து நிலை எமக்கு முக்கிய கவலைக்குரிய விடயமாகவுள்ளது.

இந்த முக்கியமான தருணத்தில் விதிக்கப்பட்டுள்ள தடைகள் காரணமாக சிறுவர்களின் போஷாக்கின்மைக்குத் தீர்வுகாண முடியாதுள்ளது" என யுனிசெவ் அமைப்பின் இலங்கைப் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டா தெரிவித்துள்ளார்.

TNC

Last update : 09-06-2009 07:20

அதிகாலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.