Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நாசகார சதியில் "றோ"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நாசகார சதியில் "றோ"

திகதி: 15.06.2009 // தமிழீழம்

உலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நாசகார சதி நோக்கத்துடன், ஆங்கில, தமிழ் ஊடக வலையமைப்பு ஒன்றை நிறுவுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் இந்தியாவின் வெளியக உளவு அமைப்பான "றோ" நிறுவனம் இறங்கியிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கென்று புதுடில்லியை சேர்ந்த இராமச்சந்திரன் என்ற தென்னிந்திய ஆங்கில பத்தியெழுத்தாளர் ஒருவரை தென்கிழக்காசிய நாடொன்றுக்கு "றோ" நிறுவனம் அனுப்பி வைத்திருப்பதோடு, அவர் ஊடாக கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இயங்கி வரும் தமிழ் - ஆங்கில பத்திஎழுத்தாளர்கள் அணுகப்பட்டு, தமிழீழம் என்பது வெறும் பகற்கனவு என்றகருத்தியலை விதைக்கும் நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

இதேபோன்று, கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் முரண்பாடுகள் நிலவியமை போன்ற கருத்துக்களையும், தற்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்புக்களில் உடைவுகள் ஏற்பட்டிருப்பது போன்ற செய்திகளையும் வெளியிடும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை, த நேசன், த சண்டே லீடர், த ஹிந்து, புறொன்ட் லைன் போன்றஆங்கில ஊடகங்களில் ஆய்வுப் பத்திகளை எழுதி வந்த கனடிய தமிழ் ஊடகவியலாளரின் உதவியுடன், "றோ" நிறுவனம் அமுல்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் வெளிப்பாடாகவே, இதுவரை காலமும் புலிச் சாயத்துடன் இயங்கி வந்த சில தமிழ் இணைய ஊடகங்கள், தமது முன்னைய தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இருந்து குத்துக்கரணம் அடித்து, மாற்று அரசியல் தீர்வுகள், இராசதந்திர உறவாடல்கள் போன்ற குழப்பகரமான செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிடுவதாக விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதனிடையே, தென்தமிழீழமாவட்டங்களில் தலைமறைவாக செயற்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின்அரசியல்துறைப் போராளிகளின் பெயரைப் பயன்படுத்தி, அவர்களின் ஒப்புதலும் அங்கீகாரமும் இன்றி போலியான அறிக்கைகள் சிலவற்றை சுவிற்சர்லாந்தில் இருந்து இயங்கி வரும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் வெளியிடுவதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

இதுதொடர்பாக தென்தமிழீழத்தில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள், கடந்த ஒரு வாரகாலப்பகுதிக்குள் தமது அரசியல்துறைப் போராளிகள் எவரும் எவ்விதமானஅறிக்கைகளையும் வெளியிடவில்லை என்று, திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

sankathi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்ம்.....

பனையால விழுந்தவனை மாடேறி மிதித்தது பழங்கதை....

பனையால விழுந்தவனை மாடுகள் ஏறி மிதித்து உழக்குவது புதுக்கதை.......

நாளை என்பது எமக்கில்லை..

நம்பிக்கை கரங்கள் எமக்கு எதுவும் இல்லை..

உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் ..இதுதான் இப்ப நடக்குது

எங்களின் வரலாறு, எங்களின் இறுதி இலக்கு, எங்களின் அனுபவம், எங்களின் எதிரி

எங்கள் இனத்தின் பலவீனம் போண்றவற்றைப்பற்றி தெளிவான அறிவிருந்தால்

ஒவ்வொரு செய்தியைப்பற்றியும் அலைபாயவேண்டி வராது. எல்லாச்செய்தியையும் படியுங்கள்

ஒவ்வொருசெய்தியினது தொனியினையும் புரிந்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'றோ' ஏற்கனவே தமிழ் ஊடகங்களில் ஊடுருவியிருப்பதை நன்கு அறியலாம். உதாரணத்திற்கு மூன்று நபர்கள், விகடனில் கருத்துக்களை பதிகிறார்கள். ஆகையால், நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

சுவிசில் தன்னை ஊடகவியளாளனாக இனம் காட்டி, முத்தமிழ் மன்றம் என்ற ஒரு இந்திய கருத்துக் களத்திற்கு புலிகளைப் பற்றிய அவதூறு பரப்பும் செய்திகளை கொலைவெறி சிங்களவனின் சார்புப் பத்திரிகையில் வந்த புலிக்காச்சல் ஆய்வுகளை கருத்துக்களை இணைத்து புலிகளின் பால் ஒரு வித வெறுப்பை தமிழக மக்களின் பால் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு ஊடக விபச்சாரியை இந்த செய்தியுடன் தொடர்பு படுத்தி சந்தேகப்பட வேண்டியுள்ளது. இந்த ஊடகவியளாளன் முன்னா யாழ் களத்திலும் கருத்துகள் எழுது வந்தவன். பின் தடை செய்யப்பட்டு வேறு ஒரு பெயரில் முகமூடி இட்டு வந்து கருத்து எழுதியவனோ என சந்தேகப்படுகின்றென். பெயர் அ..வன் . சுவிஸில் உள்ள உறவுகள் யாராவது உறுதிப்படுத்த முடியுமா?

ஜானா

பலரின் முகமூடிகள் கிழிந்து உண்மையான முகங்கள் தெரியும் நேரம் இது...

பொறுத்திருங்கள்.........

சுவிசில் தன்னை ஊடகவியளாளனாக இனம் காட்டி, முத்தமிழ் மன்றம் என்ற ஒரு இந்திய கருத்துக் களத்திற்கு புலிகளைப் பற்றிய அவதூறு பரப்பும் செய்திகளை கொலைவெறி சிங்களவனின் சார்புப் பத்திரிகையில் வந்த புலிக்காச்சல் ஆய்வுகளை கருத்துக்களை இணைத்து புலிகளின் பால் ஒரு வித வெறுப்பை தமிழக மக்களின் பால் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு ஊடக விபச்சாரியை இந்த செய்தியுடன் தொடர்பு படுத்தி சந்தேகப்பட வேண்டியுள்ளது. இந்த ஊடகவியளாளன் முன்னா யாழ் களத்திலும் கருத்துகள் எழுது வந்தவன். பின் தடை செய்யப்பட்டு வேறு ஒரு பெயரில் முகமூடி இட்டு வந்து கருத்து எழுதியவனோ என சந்தேகப்படுகின்றென். பெயர் அ..வன் . சுவிஸில் உள்ள உறவுகள் யாராவது உறுதிப்படுத்த முடியுமா?

ஜானா

ஐhனா... அவர் யார் குறிப்பிட்டால் எதிர்காலத்தில் அவரை இனம் காண்பதற்கு இலகுவாக இருக்கும்... முடிந்தால் தனிமடலில் அவரின் பெயரை அறியத்தாருங்கள்....

மற்றும் லுசேர்ன் ல் வசிக்கும் ல.... சுந்...... எனும் நபர் தமிழ்மக்களுக்கிடையே தன்னை பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபடடு வருவதாக தெரிகிறது.... இவர் கடந்த காலத்தில் பல பத்திரிகைகளில் தேசியம் மற்றும் புலிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்தவர் என்பது குறிப்பிடவேண்டும்....

இவரும் றோவில் எடுபிடியாக இருக்கலாம்....மேலதிக தகவல்கள் இருப்பவர்கள் அறியத்தரவும்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.