Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் அவர்களின் விருப்பம் பெறப்படாமல் ஒரு நாள் சம்பளம் கழிக்கப்பட்டுளள்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் அவர்களின் விருப்பம் பெறப்படாமல் ஒரு நாள் சம்பளம் கழிக்கப்பட்டுளள்து

வீரகேசரி இணையம் 6/21/2009 11:20:43 AM -

வடக்கில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி நிதியத்திற்கு மட்டக்களப்பு மற்றும் கல்குடா கல்வி வலய பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் அவர்களின் விருப்பம் பெறப்படாமல் இம் மாதச் சம்பளப்பட்டியலில் ஒரு நாள் சம்பளம் கழிக்கப்பட்டுளள்து.

எவ்வித காரணமோ, முன்னறிவித்தலோ,சம்மதமோ இன்றி தங்களுடைய சம்பளப் பட்டியலில் அதிகாரிகளினால் தன்னிச்சையாக ஒரு நாள் சம்பளம் கழிக்கப்பட்டிருப்பது குறித்து அதிர்பர்களும் ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளதோடு தமது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்

கிழக்கு மாகாண சபையின் கீழ் சேவையாற்றும் ஊழியர்களிடமிருந்து அவர்களது சம்மதத்தை பெற்று இந் நிதியத்திற்கு ஒரு நாள் சம்பளத்தை அனுப்பி வைக்குமாறு கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால் சகல திணைக்களத் தலைவர்களுக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது

இதற்கு மேலதிகமாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் சகல வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மற்றுமொரு சுற்றறிக்கையில் அதிபரகள் மற்றும் ஆசிரியர்களிடம் இந் நிதியத்திற்கு ஒரு நாள் சம்பளம் அவர்களது சம்மதத்தை பெற்று அறவிடுவது தொடர்பாக பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது

குறிப்பிட்ட இரண்டு சுற்றறிக்கைகளையும் மீறும் வகையில் தங்களுடைய இம் மாத சம்பளத்தில் ஒரு நாள் சம்பளம் அறவிடப்பட்டுள்ளதாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள அதிபர்களும் ஆசிரியர்களும் இது தொடர்பாக தொழிற் சங்ககங்களிடமும் மாகாண சபை உறுப்பினர்களிடமும் முறைப்பாடு செய்துள்ளனர்

"ஊழியர்களின் சம்மதமின்றி சம்பளப் பட்டியலில் இந் நிதி அறவிடப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல .இதற்கு எதிராக தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டி வரும் "என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் கூறுகின்றார்.

"மாகாண கல்வி அமைச்சர் ,செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு இதனை கொண்டு வருவதற்கு அவர்களுடன் தொடர்பு கொள்ள முயன்ற போதிலும் தொடர்புகள் கிடைக்கவில்லை " என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

இது தொடர்பாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.தண்டாயுதபானி அவர்களை தொடர்பு கொண்டு எமது செய்திச் சேவை இது தொடர்பாகக் கேட்ட போது

'சம்பந்தப்பட்டவர்களிடமிருந

வடக்கில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி நிதியத்திற்கு மட்டக்களப்பு மற்றும் கல்குடா கல்வி வலய பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் அவர்களின் விருப்பம் பெறப்படாமல் இம் மாதச் சம்பளப்பட்டியலில் ஒரு நாள் சம்பளம் கழிக்கப்பட்டுள்ளது.

சோசலிச குடியரசு என்று சொல்வதன் அர்த்தம் இதுதானோ? இல்லாட்டிக்கு இதை சமநிலைப்படுத்தல் என்றும் சொல்லலாமோ?

சோசலிச குடியரசு என்று சொல்வதன் அர்த்தம் இதுதானோ? இல்லாட்டிக்கு இதை சமநிலைப்படுத்தல் என்றும் சொல்லலாமோ?

அது சில நேரம் புதிய சனநாயக சோசலிசமாக இருக்கும்

Edited by Jil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.