Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணித்துப் போவதையும் விட மனதை வாட்டி வதைக்கும் அவஸ்தையே அகதி வாழ்க்கை-இன்று சர்வதேச அகதிகள் தினம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரணித்துப் போவதையும் விட மனதை வாட்டி வதைக்கும் அவஸ்தையே அகதி வாழ்க்கை-இன்று சர்வதேச அகதிகள் தினம்

வீரகேசரி நாளேடு 6/20/2009 9:20:08 AM -

ஒருவன் அல்லது ஒருத்தி அல்லது ஒரு குடும்பம், தத்தமது சொந்த வீட்டிலிருக்கும் வரை அதிதித்துவமே மாறாக அகக்காரணங்களாலோ புறக் காரணங்களாலோ பலவந்தமாகவோ பலவந்தமற்ற முறையிலோ வெளியேறி விடுமிடத்து அத்தகையோர் அகதிகளே. நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் என்பதுபோல சொந்த இருப்பிடத்தின் அருமை அகதி முகாம்களில் தெரியாதிருக்க முடியாது. சுமார் 280,000 பேர் அகதிகளாக அல்லலுறுகின்றனர் அகதி முகாம்களிலே. அது ஒரு கட்டுக்கடங்காத எண்ணிக்கை எனில் எவருமே ஏற்றுக் கொள்ள முடியும். அகதிகள் பராமரிப்பானது எத்தகைய திறத்தவரிடமிருந்து கிடைக்கப் பெறினும் கட்டுக்கடங்காதுள்ள தற்போதைய எண்ணிக்கையானது பெருத்த சவால் நிறைந்ததாகும். இத்தகைய எண்ணிக்கையிலான அகதிகளுக்கு இன்பமோ களிப்போ கிஞ்சித்தும் இருக்க முடியாததாயினும் பருகுவதற்கும் கழிப்பதற்கும் உண்டான வசதிகள் கிரமமாக கிட்டக் கூடியதாக இருப்பின் அதுவே அவர்களது நிம்மதிப் பெருமூச்சுக்கு மிக்க ஆறுதலாக அமையும் எனலாம்.

மரணித்துப் போவதையும் விட மனதை வாட்டி வதைக்கும் அவஸ்தையே அகதி வாழ்க்கையாகும். அகதித்துவத்தைப் பற்றி எவராலும் சிறந்த முறையில் ஆறுதல் கூறவும் வியாக்கியானமளிக்கவும் முடியும். ஆனால் அகதிகளோடு அகதிகளாக இருந்து கஷ்டத்தைப் பங்கு போட்டுக் கொள்வது நடவாத காரியமாகும். கடினமான நோய் காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ஒரு நோயாளியின் மனோபாவமே அகதி முகாம்களில் தங்கியிருக்கக் கூடிய மனிதர்களுக்கும் இருக்கலாம் எனக் கூற முடியாதென்பதல்ல.

எவ்வாறாயினும் சம காலத்தில் அகதிகளாக அல்லல்பட்டுக் கொண்டிருப்போரின் அகதித்துவத்தில் அடக்கு முறையான அம்சத்துவம், பலவந்தத்துவம் போன்றன மறைந்திருப்பதன் நிமித்தம் ராங்கித்தனம் காரணமாக அடங்கியும், முடங்கியும் சீரழிவதை விட தற்கால அகதி வாழ்வு அஹிம்சையையும் அமைதியையும் தமக்களிப்பதாக கூறுகின்ற அகதி முகாம் வாசிகள் இருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் பிரஸ்தாபிக்கின்றன.

வரைவிலக்கணமும் அகதிகளும்

1951 ஆம் ஆண்டில் ஐ.நா. ஸ்தாபனம் அகதிகளுக்கான ஐ.நா. உயர்தஸ்தானிகர் (க்.N.ஏ.இ.கீ) என்ற பதவியை தோற்றுவித்துத் தாபித்த வரைவிலக்கணத்தின்படி இனம், சமயம், தேசியம், அரசியல் வேறுபாடுகள் அல்லது ஒரு சமூகக் குழுவில் அங்கத்துவம் போன்றன காரணமாக பரம்பரை பரம்பரையாக எழக்கூடிய தொடர்ச்சியான தொந்தரவின் நிமித்தம் எழும் ஸ்திரமான அச்சம் காரணமாக ஒருவர் தாம் வாழும் நாட்டை விட்டுப் பிரிய நிர்ப்பந்திக்கப்படின் அந் நபரே ஒரு அகதி எனப்படுகிறது. மேலும் இவ்வரை விலக்கணம் சில சந்தர்ப்பங்களில் யுத்தங்கள் மனித உரிமை மீறல்கள் காரணமாக தத்தமது நாட்டை விட்டு தப்பியோடும் மக்களும் அகதிகளாகவே கணிக்கப்படுவதாக கூறுகிறது. அதேவேளையில் அகக் காரணங்களோ, புறக் காரணங்களோ தத்தமது ஜீவனோபாயத்துக்கு குந்தகமாகவோ உழைத்து உண்பதற்குத் தடையாகவோ சூழ்நிலைகள் காணப்படாதிருக்கையில் தங்களது சொந்த தனிப்பட்ட காரணங்களுக்காக தம்மை அகதிகளாக அறிமுகப்படுத்தியும் அடையாளப்படுத்தியும் செயல்படுகின்றவர்களுமுள்ளனர

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.