Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையின் புதிய வெளியுறவுக் கொள்கை மேற்குலகுடன் கசப்புணர்வை வளர்க்குமா?

Featured Replies

அரசு ஒன்றின் அடிப்படைப் பண்புகளாக நவீன அரசியல் விஞ்ஞான ஆய்வாளர்கள் 5 முக்கிய பண்புகளை அடையாளம் காண்பிக்கின்றனர். அரசின் பண்புகளில் ஒன்றாகவே அரசாங்கம் கருதப்படுகிறது.

அரசு என்றால் என்ன? என்பதற்கான தெளிவான வரைவிலக்கணம் அரசியல் விஞ்ஞான ஆவாளர்களினால் கூறப்படாவிட்டாலும்அரசியல் அறிஞர்கள் தாம் வாழ்ந்த அரசியல் கால

சூழ்நிலைகளுக்கேற்ப இதுதான் அரசு என்று தமது கூற்றுக்களை காலாகாலமாக வெளியிட்டுவந்தனர்.

அவ்வாறு அரசு பற்றிய வரைவிலக்கணங்களை கூறியவர்களுள் அரசியல் அறிஞரான ரூசோவின் கருத்து பிரபல்யமிக்கது. அவர் அதிகாரங்களைப் பெற்ற ஒரு மையமே அரசு என்றார்.

அவ்வாறே அரசாங்கம் என்றால், அதிகாரங்களை அமுல்படுத்தும் ஒரு கருவியே அரசாங்கம் என அரசியல் ஆவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரசாங்கமானது அரசிலிருந்து தோன்றிய ஒன்றாகும். அரசாங்கம் இராணுவ அரசாங்கமாகவோ அல்லது ஜனநாயக அரசாங்கமாகவோ ஏன் குடும்ப ஆட்சி அரசாங்கமாகவோ இருக்கலாம்.

இந்த அரசாங்கமே நாட்டினுடைய கொள்கைகளை வகுத்து செயற்படும். அதாவது அரசு மாற்றமடையாது. ஆனால் அரசாங்கமோ அடிக்கடி மாறுபடக்கூடியது. 1948 இல் இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அது இலங்கை அரசாக உருவாகியது. எனினும் காலத்திற்கு காலம் மாறிமாறி வந்த அரசாங்கங்கள் நாட்டை ஆட்சி செய்தன.

அந்த வகையில் இலங்கையானது பல அரசாங்கங்களை கண்டுள்ளது. இலங்கையின் இதுகால வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கமுமே நாட்டை நிர்வாகம் நடத்தின. இவை தமது கட்சி கொள்கைகளுக்கேற்ப நாட்டை நிர்வகிப்பித்தன. வெளியுறவுக் கொள்கைகளையும் தமது கட்சி நலன் சார்ந்தே கடைப்பிடித்தன.

இலங்கையைப் பொறுத்தவரையில் வெளியுறவுக் கொள்கை பிரதான விடயமாக கருதப்படுகிறது. உலக வரைபடத்தில் அதன் அமைவிடமே இதற்கான காரணமாகும்.

வல்லரசு நாடுகளினதும் ஆசிய பிராந்தியத்தினதும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான கேந்திர முக்கியத்துவ பண்புகள் இலங்கையிடம் உள்ளன.

முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் ஆரம்பமாகிய சமயங்களில் இலங்கை பிரித்தானியரின் ஆதிக்கத்திலிருந்த போது பிரித்தானியாவின் நலன்களே இங்கும் கருத்திற் கொள்ளப்பட்டன.

சுதந்திரத்திற்குப் பின்னர் சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ். சேனாநாயக்கா தலைமையிலான அன்றைய அரசாங்கம் உலகம் இரு துருவங்களாக பிளவுபட்டிருந்த போதும் இலங்கை அணிசேரா கொள்கையை கடைபிடிக்குமென துணிச்சலாக அறிவித்தது.

பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து சுதந்திரமடைந்த உடனேயே இலங்கையிடமிருந்து வெளிப்பட்ட அந்த அணிசேராப் பிரகடனம் அனைத்து நாடுகளினாலும் கூர்ந்து அவதானிக்கப்பட்டது.

எனினும் தனது நிலைப்பாட்டில் இலங்கை உறுதியாகவே இருந்ததுடன் அதன் பின்னைய காலங்களில் அணிசேரா மாநாட்டை இலங்கையில் நடத்தி தனது நிலைப்பாட்டு உறுதியை உலகிற்கு உணர்த்தியது.

அவ்வாறான ஒரு நிலையிலேயே சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த போது பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செயப்பட்டார்.

இங்கு இரு பிரதான தலைமைகள் நிர்வாக மற்றும் சட்டத்துறைகளுடைய நிர்வாகிகளாக செயற்பட்டனர்.

இதன்போது நிலவிய போட்டித் தன்மை காரணமாக இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மேற்கத்திய நாடுகளுக்கு சார்பான நிலையில் காணப்பட்டது.

இக்காலப் பகுதியில் பிரதமராக செயற்பட்ட ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரம சிங்க தனது மிகக்குறுகிய பதவிக் காலத்தில் அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக செயற்பட்ட ஜோர்ஜ் புஷ்ஷினை 3 தடவைகள் சந்தித்திருந்தார்.

இதன்மூலம் மேற்குலகின் செல்லப் பிள்ளை என்று கூட அவர் வர்ணிக்கப்பட்டார்.

இலங்கை இனப்பிரச்சினையில் எப்போதுமே பங்குதாரராக விளங்கிய இந்தியா ஓரங்கட்டப்பட்டு மேற்கத்திய நாடுகளின் பூரண ஆசீர்வாதத்துடன் அன்றைய அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே அணுசரணைப் பணியினை மேற்கொள்வதற்காக நோர்வே களத்தில் இறக்கப்பட்டதும் இக்கால கட்டத்திலேயாகும்.

இவ்விரு சம்பவங்களும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மேற்கத்திய நாடுகளுடன் கொண்டிருந்த உறவை விளக்கும் போதிய ஆதாரங்களாகும். இலங்கையின் அணிசேராக் கொள்கை சற்று ஆட்டம் கண்ட காலப்பகுதியும் இதுவேயாகும்.

ஆனாலும் அதன் பின்னரான காலப்பகுதி குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவுமின்றி அணிசேராக் கொள்கை பின்பற்றப்பட்ட காலப்பகுதியாகவே இருந்தது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னரும் இதே நிலையே காணப்பட்டது. ஆனாலும் விடுதலைப் புலிகளுடன் போரில் வெற்றியீட்டியதாக அரசாங்கம்அறிவித்த பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய வெளியுறவுக் கொள்கை குறித்து பகிரங்கமாகவே அறிவிப்புச் செய்துள்ளார்.

புதிய வெளியுறவுக் கொள்கை

தனது சுதந்திர காலத்திலிருந்து அணிசேராக் கொள்கையை கடைப்பிடித்து வரும் இலங்கைக்கு புதிய வெளியுறவுக் கொள்கை சாத்தியமா? என்ற கேள்வி இங்கு எழுகிறது. இதற்கான பதில் ஆம் என்று அமைகிற போதும் புதிய வெளியுறவுக் கொள்கை எவ்வாறு அமையுமென்ற எதிர்பார்ப்பு இங்கு மேலோங்குகிறது.

விடுதலைப் புலிகளுக்கெதிரான அரசாங்கப்படையினரின் தாக்குதல்கள் உக்கிரமடைந்த காலப்பகுதியிலிருந்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை உற்று அவதானிப்பவர்களுக்கு சில விடயங்கள் தெளிவாகப் புலப்படும்.

அதாவது சர்வதேச அபிப்பிராயங்களை அலட்சியப்படுத்தும் ஒரு போக்கினை இலங்கை அரசாங்கம் கடைப்பிடிப்பதனை அவதானிக்கலாம்.

இதற்கு உதாரணமாக பின்வருவனவற்றை கூறலாம்.

1. அரசாங்கம் போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியமை.

2. ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயம்.

3. இலங்கைக்கான ஆயுத உதவியை இஸ்ரேல் நிறுத்தியமை.

4. ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் உறுப்புரிமை இழப்பு.

5. ஜனாதிபதியின் சீனா, இந்தியா, லிபியாவுக்கான விஜயங்கள்

இந்த உதாரணங்களுடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆடை ஏற்றுமதி கோட்டா ரத்துச் செயப்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும் அது குறித்து கருத்திற் கொள்ளாமை உள்ளிட்ட மேலும் பல சம்பவங்களும் இலங்கை அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய சமூகத்தை அலட்சியப்படுத்துகிறது என்ற விடயத்தை உறுதி செகிறது.

அத்துடன் புலிகளுடனான யுத்தத்தின் இறுதி வாரங்களிலும் ஆசியப் பிராந்தியம் தவிர்ந்த ஐக்கிய நாடுகள் சபையுடன் சேர்ந்து முழு உலகமும் உடனடிப் போர்நிறுத்தத்தை வலியுறுத்திய போதும் புலிகள் தோற்கடிக்கப்படும் வரை போர் என்ற நிலைப்பாட்டில் விடாப்பிடியாகவே நின்ற இலங்கை அரசாங்கம் அச்சூழ்நிலையில் அங்கு சென்ற பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்களின் அழுத்தங்களைக்கூட புறக்கணித்திருந்தது.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் தொலை பேசி அழைப்புகள் கூட அரசாங்கத்திற்கு (தொல்லைபேசி) அழைப்பாகவே தெரிந்தது.

இச்சம்பவங்கள் கூட இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச அலட்சியப்படுத்தல்களை உலகிற்கு தெளிவாக உணர்த்தியது.

இலங்கை போன்ற சிறிய நாடு சர்வதேச சமூகத்தை இவ்வாறு அலட்சியப்படுத்துகிறது என்றால் அதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது.

http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.