Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் சுமுக நிலை இல்லை; தேர்தலை நடத்தி அதிகாரத்தை நிலைநிறுத்த முயற்சிக்கிறது அரசு: ஐ.தே.க. குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் சுமுக நிலை இல்லை; தேர்தலை நடத்தி அதிகாரத்தை நிலைநிறுத்த முயற்சிக்கிறது அரசு: ஐ.தே.க. குற்றச்சாட்டு

திகதி: 22.06.2009 // தமிழீழம்

சுமுகமான சூழ்நிலையில்லாத போது அரசாங்கம் வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல்களை அவசரமாக நடத்துவதற்கு காரணம் தமது ஆட்சியதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கேயாகுமென ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

அரசின் கடும் போக்கைத் தடுத்து ஜனநாயகத்தை நிலைநிறுத்தவே ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடுவதாகவும் எதிர்காலத்தில் வடக்கில் தேர்தல் நடத்த வேண்டுமாயின் முகாம்களிலுள்ள மக்களை மீளக்குடியேற்றி அபிவிருத்தியை மேற்கொண்டு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்திய பின்னரே நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்:

ஊவா மாகாணசபை மற்றும் யாழ்ப்பாண மாநகரசபை, வவுனியா நகர சபை ஆகிய தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடவுள்ளது. எமது வேட்பு மனுக்களை எதிர்வரும் புதன், செவ்வாய்க்கிழமைகளில் தாக்கல் செய்யவுள்ளோம். ஊவா மாகாணத்தில் நாம் கூட்டாகப் போட்டியிடவுள்ள நிலையில் யாழ். மற்றும் வவுனியாவில் தனித்தே போட்டியிடவுள்ளோம்.

யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை மனுத்தாக்கல் செய்யும் முன் அறிவிக்கவுள்ளோம். அரசின் ஊழல், மோசடி, துஷ்பிரயோகம், மக்கள் விரோத செயற்பாடு மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பில் பிரசாரத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் சுதந்திரமாக தேர்தலை நடத்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் நடைபெறவேண்டுமாயின் அதற்குரிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

மக்கள் சுயாதீனமாக தமது பிரதிநிதிகளைத் தெரிவுசெய்ய வழி செய்ய வேண்டும். இப்பிரதேசங்களில் ஆயுதக்குழுக்களின் செயற்பாடு உள்ளது. அவர்களிடமிருந்து ஆயுதங்களை களைவதன் மூலமே மக்கள் எவ்வித அழுத்தமுமின்றி வாக்களித்து தமது பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய முடியும்.

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டப் படையினர் ஆயுதங்களை வைத்திருக்கின்ற நிலையில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருக்கின்ற குழுவினரிடமிருந்து களைய வேண்டும். இது குறித்து தேர்தல் ஆணையாளரிடம் கோரியுள்ளோம். இதற்கான பொறுப்பு அரசிடமும் தேர்தல் ஆணையாளரிடமும் உள்ளது.

அங்கு தேர்தலை நடத்தக் கூடிய சுமுகமான சூழ்நிலை இல்லையென தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், அரசு அவசரமாக செய்வதற்குக் காரணம் தனது ஆட்சியதிகாரத்தை அங்கு நிலை நிறுத்துவதற்கான முயற்சியேயாகும். மூன்று இலட்சத்துக்கு அதிகமானவர்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ளனர். அவர்கள் கஷ்டத்தின் மத்தியில் உள்ள போது எவ்வாறு தேர்தல் தொடர்பில் சிந்திக்க முடியும்.

முதலில் அம்மக்களை மீள்குடியேற்ற வேண்டும். அடுத்ததாக சிவில் நிர்வாகம், அபிவிருத்தி உட்பட ஏனைய அவசிய சேவைகளைச் செய்த பின்பே இத்தேர்தலை நடத்த வேண்டும். அப்போதே சுமுகமான, சுதந்திரமான தேர்தல் இடம்பெறும். இவ்வாறு செய்யாது தற்போதைய தேர்தலில் அவர்கள் அதிகாரத்தை கைப்பற்றவே நடத்துகின்றனர் என்பது புலனாகின்றது.

இந்த சர்வதிகாரப் போக்கை நிறுத்த வேண்டுமென்று தேர்தல் ஆணையாளரிடம் கோரிய போதும் எமக்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை. இதேபோல், அரசாங்கம் தேர்தல் பிரசாரத்துக்காக அரச வாகனம், சொத்துகளைப் பயன்படுத்துகின்றது. நாம் ஜனநாயகத்தை நாட்டில் நிலைநாட்ட எத்தேர்தலிலும் போட்டியிடத் தயாராகவுள்ளோமெனத் தெரிவித்தார்.

சங்கதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.