Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை: மங்கள சமரவீர குற்றச்சாட்டு

Featured Replies

போர் முடிவுக்கு வந்து இரண்டு மாதங்களாகின்ற போதிலும், நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை எனக் குற்றம் சாட்டியிருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி - மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமானால தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான ஒரு தீர்வை முன்வைப்பது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனநாயக மக்கள், முன்னணி, புதிய ஹெல உறுமய என்பவற்றுடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இந்தக் கருத்துக்களை மங்கள சமரவீர முன்வைத்தார்.

கொழும்பு - இராஜகிரிய வீதியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் அலுவலகத்தில் இந்த ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது.

இங்கு அவர் மேலும் கூறியதாவது:

"தற்போது பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டு அது முழுநாட்டுக்கும் வியாபிப்பது அவசியமானதாகும். இவ்வாறு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பது அவசியமானது. அதன் பின்னரே நாட்டின் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காணக்கூடியதாக இருக்கும்.

அதாவது வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பது அவசியமானது. நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்திய பின்னரே இந்தப் பிரச்சினைகளில் கவனத்தைச் செலுத்த முடியும். ஆனால், இந்த அரசிடம் அதற்கான வேலைத் திட்டங்கள் எதுவும் இல்லை. போர் வெற்றிகொள்ளப்பட்ட மறுநாள் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்றார். ஆனால், அதற்கான செயற்பாடுகள் எதனையும் காண முடியவில்லை.

தமிழர்களின் பிரச்சினை பல தசாப்த காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அதற்கு நிரந்தரமான தீர்வு ஒன்று பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

இந்நிலையில் அரச தலைவர் தான் பெற்றுக்கொடுக்கவிருக்கும் தீர்வு என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். 13 ஆவது திருத்தமா அல்லது அதற்கு மேலாகவா என்பதை வார்த்தைகளினால் அல்ல செயலினால் வெளிப்படுத்த வேண்டும்.

மகிந்த சிந்தனையின் அடிப்படையில் தீர்வை முன்வைக்கப்போவதாகத் தெரிவிக்கின்றார். அதனை அவர் முன்வைக்க வேண்டும். அதன் மூலமாகவே அதற்காக எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் அவர் பெற்றுக்கொள்ள முடியும். தமிழர்கள் உரிமையுடன் வாழக்கூடிய ஒரு தீர்வை அவர்களுக்காக முன்வைக்க வேண்டும்.

இந்நிலையில் இனவாதிகளின் நாட்டின் ஒருமைப்பாடு, ஐக்கியம் போன்ற வார்த்தை ஜாலங்களுக்கு அடிபணியாமல் அரசு செயற்படுவது அவசியமாகும். இதன் மூலமாகவே தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். தேர்தல்கள் வரையில் இதற்காகக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தலுக்கு முன்னதாகவே இதனை அரசு வெளியிட வேண்டும்.

இதேவேளையில், இடம்பெயர்ந்துள்ள மூன்று லட்சம் மக்களும் விலங்குகளைவிட கீழான நிலையில் உள்ளனர். அவர்கள் நலன்புரி நிலையங்களில் அல்ல சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளது போன்ற நிலையிலேயே உள்ளனர். இவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழ அனுமதிக்கப்படவேண்டும்.

இந்த முகாம்கள்தான் உலகிலேயே சிறந்த முகாம்கள் என அரசு கூறுகின்றது. ஆனால், இதற்கு முரணான கருத்தையே அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகர் வாசுதேவ நாயணக்கார தெரிவிக்கின்றார். இப்பிரச்சினையிலும் அரசிடம் எந்தவொரு வேலைத் திட்டமும் இல்லை"

இவ்வாறு மங்கள சமரவீர தெரிவித்தார்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.