Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அநுராதபுர வானூர்தி தள தாக்குதலின் பிரதான சூத்திரதாரி வவுனியா முகாமில் கைது: காவல்துறை அறிவிப்பு

Featured Replies

சிறிலங்காவின் பிரதான வானூர்தி தளங்களில் ஒன்றான அநுராதபுர வானூர்தி தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த முக்கிய நபர் வவுனியா இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாமில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

2007 ஒக்ரோபரில் நடைபெற்ற இந்தத் தாக்குதலின்போது 24 கரும்புலிகள் கலந்துகொண்டதாக கைது செய்யப்பட்டவர் தெரிவித்ததாக காவல்துறையினரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் உட்பட மூன்று பேர் அநுராதபுரம் முகாமுக்கு வெளியால் நின்று தாக்குதல் நடவடிக்கைகளுக்கான கட்டளைகளை வழங்க மற்றவர்கள் சிறு சிறு குழுக்களாக கம்பி வேலிகளை வெட்டிக்கொண்டு முகாமுக்குள் பிரவேசித்ததாக கைது செய்யப்பட்டவர் ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தக் குழுவினர் முகாமுக்குள் அனுப்பப்பட்டுவிட்டார்கள் என்ற தகவலை தான் செய்மதித் தொலைபேசி மூலமாக வன்னித் தலைமையகத்துக்குத் தெரியப்படுத்தியதாகவும் அதன் பின்னரே விடுதலைப் புலிகளின் வானூர்திகள் முகாம் மீது குண்டு வீசுவதற்காக அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தகவல்களைச் சேகரித்து கொள்வதற்காக தானும் மற்றும் சில விடுதலைப் புலிகளின் போராளிகளும் மூன்று தடவை அனுராதபுரம் வானூர்தி தளத்துக்கு வந்ததாகவும், ஆனால், தாம் இராணுவச் சீருடைகளுடன், சிங்கள மொழியில் சரளமாகப் பேசிக்கொண்டும் இருந்தமையால் தம்மீது யாரும் சந்தேகப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தமது குழுவினர் நுவரவேவாவுக்கு அண்மையில் உள்ள காட்டுப் பகுதிக்குள் மறைந்திருந்ததாகவும், அதிநவீன கமராக்களைப் பயன்படுத்தி அநுராதபுரம் வானூர்தி தளத்தைப் படமெடுத்ததாகவும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் மாதிரி முகாம் ஒன்றை வன்னியில் தாம் அமைத்து அதில் பயிற்சியை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் நடத்தப்படுவதற்குப் பத்து நாட்களுக்கு முன்பாக நுவரவேவா காட்டுப் பகுதிக்கு 21 கரும்புலிகள் உட்பட 24 விடுதலைப் புலிகள் வந்ததாகத் தெரிவிக்கும் காவல்துறையினர், அவர்கள் அங்கு தமது ஆயுதங்களை மறைத்து வைத்துவிட்டு எவருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு இராணுவச் சீருடைகளுடன் சிங்களத்தில் பேசியவாறு நடமாடியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர் 26 வயதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தபோரூபன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. முகாமுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்திய 21 கரும்புலிகளும் அந்தத் தாக்குதல் சம்பவத்தில் மரணமடைந்த அதேவேளையில், முகாமுக்கு வெளியேயிருந்துகொண்டு அவர்களுக்கான கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்த மூவரும் பாதுகாப்பாகத் தப்பிச் சென்றுவிட்டனர்.

இத்தாக்குதல் சம்பவத்தில் சிறிலங்காவின் வான் படைக்குச் சொந்தமான பல வானூர்திகளும் இராணுவத் தளபாடங்களும் அழிக்கப்பட்டன.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.