Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் சிறையிலுள்ள இந்தியர்களைக் கருத்தில் எடுப்பதுபோல தம்மை இந்தியா கருத்தில் எடுப்பதில்லை – சிறிலங்கா சிறையிலுள்ள இந்தியர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாகிஸ்தான் சிறையிலுள்ள இந்தியர்களைக் கருத்தில் எடுப்பதுபோல தம்மை இந்தியா கருத்தில் எடுப்பதில்லை – சிறிலங்கா சிறையிலுள்ள இந்தியர்கள்

இலங்கையில் பல ஆண்டுகளாக இந்திய வம்சாவழியி மக்கள் சிலர் சிறைவைக்கப்பட்டுள்ளமை வெளியுலகிற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்களில் சிலர் 16 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. எந்தக்குற்றமும் இளைக்காத இவர்கள் ஏன் சிறையில் இருக்கிறார்கள் என்பது அரசுக்கே தெரியாது.

தமது கோரிக்கைகளையோ முறைப்பாடுகளையோ காதில் வாங்கிக் கொள்ளாத இந்திய அதிகாரிகளைக் குறை சொல்கின்ற, இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் தமக்கான மனிதாபிமான வழிமுறைகளைக் கண்டுபிடிக்கும் முனைப்பில் தற்போது உள்ளார்கள்.

சிறையிலுள்ள இந்தியர்களின் பேச்சாளர், பாகிஸ்தான் சிறையிலுள்ள இந்தியர்களைக் கருத்தில் எடுப்பதுபோல தம்மை இந்திய அதிகாரிகள் கருத்தில் எடுப்பதில்லை என்றும் தம்மில் சிலர் கிட்டத்தட்ட 16 வருடங்களாக சிறையில் வாடுவதாகவும், இலங்கையைப் பொறுத்தவரையில் ஆயுட்கால தண்டனை என்பது ஒருவரின் வாழ்நாள் முழுவதையும் சிறையில் செலவழிப்பது என்றும் கூறியதோடு தம்மில் பலருக்கு பலவித மன மற்றும் உடல் நோய்கள் தாக்கியுள்ளதாகவும் அதைப்பற்றி கவலை கொள்வார் யாரும் இல்லை என்றும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் ஜூலை 8 ஆம் திகதிய கூற்றுப்படி பலவித குற்றச்செயல்களைப் புரிந்த 6,540 இந்தியர்கள் கிட்டத்தட்ட 59 நாடுகளின் சிறைகளில் உள்ளார்கள்.

அதோடு இலங்கைச் சிறைகளில் 33 ஆண்களும் 4 பெண்களுமாக 37 இந்தியர்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் சிறையிலுள்ள இந்தியர்களின் பேச்சாளர் கூறும்போது, வெலிக்கடை சிறையில் 28 பேரும், நீர்கொழும்புச் சிறையில் 10 பேரும், அனுராதபுரம் சிறையில் 5 பேருமாக மொத்தம் 43 பேர் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சட்டவிரோத குடிவரவு போன்ற குற்றச் செயல்களால் இவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றங்களில் வழக்கு நடைபெறும்போது தம்மிடம் பணம் இல்லாததால் தாம் வக்கீல்களை வைத்து வாதாடமுடியாத நிலையில் இருந்ததாகக் கூறும் மேற்படி பேச்சாளர் தம்மில் அநேகர் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார். இலங்கை சட்ட நடைமுறைப்படி பார்த்தால் இவர்களுக்கு தற்போது இலங்கை குடியுரிமை வழங்கப்பட வேண்டிய நிலை காணப்படுகிறது. ஏன் எனில் இவர்களில் பலர் பல வருடங்களாக இலங்கையில் தங்கியுள்ளனர்.

http://www.meenagam.org/?p=6211

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையைப் பொறுத்தவரையில் ஆயுட்கால தண்டனை என்பது ஒருவரின் வாழ்நாள் முழுவதையும் சிறையில் செலவழிப்பது என்றும் கூறியதோடு தம்மில் பலருக்கு பலவித மன மற்றும் உடல் நோய்கள் தாக்கியுள்ளதாகவும் அதைப்பற்றி கவலை கொள்வார் யாரும் இல்லை என்றும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

அப்படியானல் இந்தியாவில் நளினி ஆயூள் காலத்தண்டைனைக்கு மேலாகவும் இப்பொழுது சிறையில் இருக்கிறாரே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.