Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா ஆடைகளைப் புறக்கணிக்குமாறு அமெரிக்காவில் தமிழர்கள் போராட்டம்: முதற்கட்டம் பெரும் வெற்றி

Featured Replies

சிறிலங்காவில் தயாரிக்கப்படும் தைக்கப்பட்ட ஆடைகளைப் புறக்கணிக்குமாறு கோரி நேற்று முன்நாள் அமெரிக்காவில் நடத்தப்பட்ட முதற்கட்டப் போராட்டத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளதாகவும், இந்தப் போராட்டத்தை அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப் போவதாகவும் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திவரும் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் பெரும் சந்தை வாய்ப்பைப் பெற்றிருக்கும் சிறிலங்கா ஆடைகளை அமெரிக்க மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனக் கோரும் போராட்டம் நேற்று முன்நாள் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

இதில் பெரும் தொகையானவர்கள் கலந்துகொண்டதுடன், விற்பனையாளர்கள், கொள்வனவு செய்ய வந்தவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரதும் ஆதரவு கிடைத்ததால் இது பெரும் வெற்றி பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

usa_20090803001.jpg

சிறிலங்காவுக்கு அதிகளவு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் துறைகளில் ஒன்றாக தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி அண்மைக்காலத்தில் வளர்ச்சியடைந்திருக்கின்றது.

குறிப்பாக சிறிலங்காவில் இருந்து அமெரிக்காவே அதிகளவுக்கு தைக்கப்பட்ட ஆடைகளை இறக்குமதி செய்கின்றது.

இந்நிலையில் சிறிலங்காவில் தைக்கப்பட்ட ஆடைகளைக் கொள்வனவு செய்ய வேண்டாம் என அங்கு தொடங்கப்பட்டுள்ள போராட்டம் சிறிலங்கா அரசுக்குப் பெரும் பொருளாதார நெருக்கடியைக் கொடுப்பதாக அமையும் எனக் கருதப்படுகின்றது.

அமெரிக்காவின் மான்ஹற்றன் பகுதியில் உள்ள ஜீ.ஏ.பி. விற்பனை நிலையத்துக்கு முன்பாக அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் பெருமளவில் கூடிநின்று முதற்கட்டமாக இந்தப் போராட்டத்தை நேற்று முன்நாள் நடத்தினார்கள்.

"சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை வாங்க வேண்டாம்" என்ற பதாதைகளைத் தாங்கியவாறு பெண்கள், குழந்தைகள் உட்பட பெரும் தொகையானவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தியது பொருட்களைக் கொள்வனவு செய்ய வந்தவர்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது.

ஜீ.ஏ.பி. க்கு தாம் எதிரானவர்கள் அல்ல என இங்கு தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தமிழர்கள் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்படும் சிறிலங்காவில் தைக்கப்பட்ட ஆடைகளை அமெரிக்கர்கள் கொள்வனவு செய்வதையே தாம் விரும்பவில்லை என விளக்கினார்கள்.

இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தும் அமெரிக்க தமிழர் அரசியல் செயலவையின் [united States Tamils Political Action Council - USTPAC] பேச்சாளரான சிவா நாதன் இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், அங்கு பொருட்களைக் கொள்வனவு செய்ய வந்தவர்கள் - குறிப்பாக இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தின் பின்னணி தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்வதில் பெரும் ஆர்வத்தை வெளிப்படுத்தியதாகத் தெரிவித்தார்.

ஆடை விற்பனை மூலமாகப் பெறப்படும் நிதியின் ஒரு பகுதி தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களை முன்னெடுப்பதற்காக படையினருக்குப் பயன்படுத்தப்படுகின்றது என்பதை அறிந்து அவர்கள் பெரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க வாழ் தமிழர்களின் இந்தப் புறக்கணிப்புப் போராட்டம் இரண்டு முனைகளில் முன்னெடுக்கப்படுகின்றது.

usa_20090803002.jpg

ஒரு புறத்தில் அமெரிக்காவில் உள்ள முன்னணி ஆடை விற்பனையாளர்களைத் தொடர்புகொள்ளும் தமிழ்ப் போராட்டக் குழுவினர், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான முன்னெடுக்கப்படும் இனப்படுகொலைகள் தொடர்பாக அவர்களுக்கு விளக்குவதுடன், சிறிலங்காவுடன் வர்த்தகத் தொடர்புகளை நிறுத்திக்கொள்ள வேண்டிய தார்மீகத் தேவையையும் வலியுறுத்தி வருகின்றார்கள்.

மறுபுறத்தில் - அமெரிக்காவில் உள்ள சமூக உணர்வுள்ள மக்களுக்கு சிறிலங்காவின் இனப்படுகொலைகளையும், தமிழர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதையும் விளக்கி, சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட ஆடைகளைப் புறக்கணிக்குமாறு கோருகின்றார்கள். மின்னஞ்சல் மூலமாகவும், ஏனைய அடிமட்ட அமைப்புக்கள் மூலமாகவும், எதிர்ப்புப் போராட்டங்கள் மூலமாகவும் இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது.

நேற்று முன்நாள் மான்ஹற்றனில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்துக்கு மேலதிகமாக, முன்னணி வர்த்தக நிலையங்களுக்குள் சென்று சிறிலங்கா ஆடைகளைப் புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் ஒன்றும் பிறிஹ்ரன், நியூ ஜேர்சி ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது. ஜீ.ஏ.பி., மக்கீஸ் மற்றும் ஜே.சி.பென்னி நிறுவனங்களுக்குச் சென்ற தமிழ்ப் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் நிறுவனங்களின் முகாமையாளர்களுடன் தமது போராட்டம் தொடர்பாக விளக்கமளித்தார்கள்.

சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் இங்கு பெருமளவில் விற்பனை செய்யப்படுவதை அறிந்து அதிர்ச்சியடைந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்கள், அவற்றை விற்பனை செய்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தார்கள். இது தொடர்பான பேச்சுக்கள் சுமூகமாகவே நடைபெற்றது. இது தொடர்பாக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் பேசி தாம் முடிவெடுப்பதாக முகாமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்தப் போராட்டம் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட சிவநாதன், முதல்நாள் போராட்டம் முழு அளவில் வெற்றியளித்திருப்பதாகத் தெரிவித்தார். இந்தப் போராட்டத்தை அமெரிக்காவில் உள்ள ஏனைய முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப் போவதாகவும் அவர் அப்போது குறிப்பிட்டார்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.