Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சிக்கு அமெரிக்க இலங்கை தமிழ்ச் சங்கம் ஆதரவு

Featured Replies

தமிழர் அரசியலை உருப்படியாக முன்நகர்த்திச் செல்வதற்கு யாருமற்ற - இன்றைய வெறுமையான சூழலில் முன்னெடுக்கப்படுகின்ற 'நாடு கடந்த தமிழீழ அரசு' ஒன்றை அமைப்பதற்கான முயற்சியை வரவேற்றுள்ள அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கம் - அந்த முயற்சிக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க இலங்கை தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு:

சிங்களவர்களை மட்டுமே கொண்ட சிறிலங்காவின் படையினரால் காவல் காக்கப்படும் தடுப்பு முகாம்களுக்குள் 3 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் நிர்க்கதி நிலையில் தளர்ந்து போயுள்ளனர்; ஏனெனில், சிறிலங்காவிவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் லுன்ஸ்டாட் கூறியது போன்று, "அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக" மட்டுமே.

இலங்கைத் தீவில் நடந்து முடிந்த போரின்போது தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்புப் படுகொலையையும் போர்க் குற்றங்களையும் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்துவற்கான எந்த ஒரு உருப்படியான முயற்சியும் தீவுக்கு உள்ளிருந்தோ அல்லது வெளியில் இருந்தோ தன்னும் மேற்கொள்ளப்படவேயில்லை.

தமிழ்த் தேசத்தினது - தமிழ்த் தேசிய இனத்தினது - தெளிவான - தனித்துவமான - அடையாளங்களை அழிப்பதில் சிறிலங்கா அரசு மிகக் கவனமான நடவடிக்கைகளை எடுக்கின்றது.

தமிழர் தாயக நிலத்தில் தமிழ் பேசும் மக்களின் குடிசனப் பரம்பல் சமநிலையை மாற்றி அமைக்கும் செயற் திட்டங்களை அது ஒழுங்கு முறையில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

தமிழர் தேசம் தனது இருண்ட காலங்களில் ஒன்றிற்குள் இப்போது சிக்குண்டுள்ளது.

தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைவதே தற்போதைய காலத்தின் தேவையும் எமக்க முன்னால் உள்ள கடமையும் ஆகும்.

தமிழர்களின் தலைமை போரியல் ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர், தமிழர்கள் தற்போது பாதுகாப்பற்ற - பலவீனமான - நிலையில் விடப்பட்டுள்ளனர்.

இந்தப் புதிய சூழலில் - தமிழர் அரசியலை உருப்படியாக முன்நகர்த்திச் செல்வதற்கு யாருமற்ற நிலையில் - தமக்கான நேர்த்தியான அரசியல் தலைமை ஒன்றை தமிழ் மக்கள் எதிர்பார்த்து நிற்கிறார்கள்.

இன்றைய இந்த அரசியல் வெறுமை நிலையை - நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்கும் முயற்சி நிரப்ப முடியும் என்றும் நிரப்பும் என்றும் அமெரிக்க இலங்கை தமிழ் சங்கம் நம்புகின்றது.

ஏனெனில் - நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்குவதற்கு என அமைக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் - தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தோடு மிக நீண்ட காலமாக தம்மை இணைத்துக்கொண்டு உள்ளவர்கள்.

தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தாகங்களை அவர்கள் ஆழமாகப் புரிந்து கொண்டுள்ளார்கள்.

அரசியல் விடுதலைக்கான நீண்ட பயணத்தில் என்ன என்ன விதமான தடைகளும் சிக்கல்களும் எம்மை எதிர்கொள்ளும் என்பதை அவர்கள் நன்கு அறிந்துகொண்டவர்கள்.

தாம் ஏற்றுள்ள முயற்சியை சீராக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான சிறப்புத் திறமைகளையும் தகுதிகளையும் அவர்கள் கொண்டவர்கள்.

'நாடு கடந்த அரசு' என்ற கருத்தாக்கம் இதுவரையில் இல்லாத ஒன்று என்பதையும் நாம் விளங்கி வைத்துள்ளோம்.

பனியிலும், உறைய வைக்கும் குளிரிலும், சுட்டெரிக்கும் வெய்யிலிலும் - உலக நாடுகளின் வீதிகளில் இறங்கிப் போராடிய இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளையும் இந்த நாடு கடந்த அரசு பிரதிபலிக்க வேண்டும்.

அந்த வகையில் - அனைத்துலக நாடுகளில் வாழும் 15 இலட்சம் தமிழர்கள் மத்தியில் நடத்தப்பட உள்ள - இந்த நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்கள் ஒரு சரியான முன்னெடுப்பு என்று தான் அமெரிக்க இலங்கை தமிழ் சங்கம் கருதுகின்றது.

குறிப்பாக - தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தலைமைத்துவம் ஒன்றை உருவாக்குதில் இந்துக்கள், கத்தோலிக்கர்களுடன், முஸ்லிம்களின் பங்களிப்பையும் சேர்த்துக்கொள்வதில் இந்த ஆலோசனைக் குழு காட்டும் உறுதிப்பாட்டை வரவேற்கின்ற அதே வேளையில் -

இலங்கைத் தீவுக்குள் வாழும் தமிழர்களுடனும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் அரசியல் சக்திகளுடனும் இணைந்து பணி ஆற்றுவதற்கான வழிகளையும் இந்த ஆலோசனைக் குழு கண்டறிய வேண்டும் எனவும் அமெரிக்க இலங்கை தமிழ் சங்கம் விரும்புகின்றது.

நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்கும் முயற்சிக்கு முன்னால் எழுந்து நிற்கும் சவால்கள் மிகப் பெரியவை. அந்தச் சவால்களை முறியடித்து இந்த முயற்சி வெற்றி பெற சங்கம் தனது முழு ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.