Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகாம்களில் தங்கியுள்ள போராளிகளை விடுவிப்பதாக கூறி நிதி கறக்கும் சிறி லங்கா புலனாய்வு குழுக்கள் - தடுப்பு முகாம் விழிப்பு குழு

Featured Replies

வவுனியா பிரதேசத்தில் தடுப்பு முகாம்களில் தங்கியுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களை அங்கிருந்து வெளியில் எடுத்து விடுவதாக கூறி அரச புலனாய்வு குழுக்கள், காவல்துறை,மற்றும் இராணுவத்தரப்பினை சேர்ந்தவர்கள் பல்வேறு முகாம்களிலும் தமது தமிழ் முஸ்லிம் உளவாளிகளை விட்டுள்ளனர். இது தொடர்பாக நம்பகமான பலரிடமிருந்து பெற்ற தகவல்கள் எம்மிடம் உள்ளது என தடுப்பு முகாம் விழிப்பு குழு தெரிவித்துள்ளது. இங்கு மூன்று முக்கிய குழுக்கள் இந்த பணியில் ஈடுபடுகின்றன என்றும் முதலாவது பாதுகாப்பு துறையின் அதி உயர் தலைமையின் கீழ் வவுனியாவில் இயங்கும் ஒட்டுக்குழு மூலமும், இரண்டாவதாக புனர்வாழ்வு மைச்சர் தலைமையிலான முஸ்லிம் குழு, மூன்றாவதாக வசந்ததிற்கு பொறுப்பான முக்கியமான அமைச்சு பொறுப்பிலுள்ளவர் தலைமையிலான குழு.

இந்த குழுக்கலிற்கு இடையே அண்மையில் ஏற்பட்ட பங்கு பிரச்சினை காரணமாகவே பலர் வெளிப்படையாக கைது செய்யப்பட்டனர். என தெரிய வருகின்றது. இந்த குழுக்கள் முகாம்களில் பல்வேறு வடிவங்களில் பணி செய்பவர்கள் போலவும், வியாபாரிகள் போலவும், நடமாடுகின்றனர்.

முகாம்களிற்குள் பொதுமக்களிற்கு மொபையில் தொலைபேசி வசதிகளை களவாக கொடுத்து கதைக்க பண்ணி அவர்களின் நம்பிக்கையினை பெற்று வெளினாடுகளில் தொடர்பை ஏற்படுத்துகின்றனர். வியாபாரிகள் போல முகாம்களிற்குள் நடமாடி கடனிற்கு பொருட்களை மக்களிற்கு நம்பிக்கயினை கொடுத்து தமது வியாபாரத்தினை ஆரம்பிக்கின்றனர்.

இவ்வாறு நம்பிக்கையினை பெற்று அவர்களிடம் தகவல்களை பெற்று தாம் போராளிகளை மற்றும் பொதுமக்களை வெளியில் எடுத்து தருவதாக கூறி தமது வியாபாரத்தினை தொடங்குகின்றனர். இவர்கள் ஒரு எறியில் இரு காய்கள் அல்ல பல காய்கள் வீழ்த்துகின்றனர். அதாவது

1 வெளி நாட்டிலுள்ளவர்களின் தகவல் திரட்டுவது

2 போராளிகள் பற்றிய தகவல்களை திரட்டுவது

3 முகாம்களில் தீவிர இயக்க ஆதரவாளர்கள் தகவலை திரட்டுவது

4 பெருமளவில் பனத்தினை கப்பமாக பெறுவது

5 வெளியில் எடுக்கின்றோம் எனக்கூறி எல்லவற்றையும் பெற்றூக்கொண்டு அவர்களை வெளியில் எடுத்து பின்பு கைது செய்வது அல்லது கொல்வது.

6 இவ்வாறு கைது செய்து கொலை செய்யப்படுவோரினை தமக்கு தெரியாது அவர்கள் தப்பி சென்று இருக்கலாம் என கூறுவது.

இது அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளது. இதனை அரசாங்கமே திட்டமிட்டு செய்கின்றது ஆனால் தமக்கு எதுவும் தெரியாதது போன்று அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கின்றது அரச தரப்பு. என த.மு. விழிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன் தினம் பாதுகாப்பு செயலர் கூறிய கருத்தும் தமது மேற்கூறப்பட்ட நடவடிக்கைகளை வழமைபோல் பாதிக்கப்பட்டவர்கள் மீது போடுவதற்கே ஆகும்.எனவும் கூறியுள்ளனர்.

பாதுகாப்பு செயலரின் கூற்று வருமாறு:

இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுவிப்பதற்கு திட்டமிட்ட சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக முழுமையாக தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஒன்றிணைவதற்கான முயற்சிகளை எஞ்சியுள்ள புலி உறுப்பினர்களும் அவ்வியக்கத்துக்கு சார்பானவர்களும் ஆரம்பித்துள்ளனர்.

இடைத்தங்கல் முகாம்களிலிருந்து திட்டமிட்ட வகையில் தப்பிச் செல்ல முயற்சி மேற்கொள்வோர் மற்றும் தப்பிச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவோர் தொடர்பில் பொலிஸாரும் படை வீரர்களும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஆகவே அனைத்து தமிழ் மக்களும் இவ்விடயத்தில் விழிப்பாக இருக்கும்படி வவுனியா தடுப்பு முகாம் விழிப்பு குழு கேட்டுள்ளது.

http://www.eelanatham.net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.