Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம் வரவேற்பு

Featured Replies

ஈழத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகள் தமிழர்களின் வரலாற்றுத் தாயகம் என்பதை ஏற்றுக்கொண்ட சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரகடனப்படுத்தி இருப்பதை தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம் வரவேற்றுள்ளது.

இது தொடர்பில் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையின் விபரம் வருமாறு:

ஈழத் தமிழ் மக்களின் சட்டபூர்வமான அரசியல் வேட்கைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள தீர்மானத்தை சம்மேளனம் வரவேற்கிறது.

ஆயுத முரண்பாடுகள் முடிவுக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், வடக்கில் இரண்டு நகர சபைக்கான தேர்தல்கள் இந்த வார இறுதியில் நடக்கவுள்ளன.

இந்நிலையில், ஈழத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகள் தமிழர்களின் வரலாற்றுத் தாயகம் என்பதை ஏற்றுக்கொண்ட சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளது.

"ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலான தீர்வுத் திட்டம் ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரித்து வருகின்றது. விரைவில் அது அரசிடமும் இந்தியாவிடமும் அனைத்துலக சமூகத்திடமும் கையளிக்கப்படும்" என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில், அரசு தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடும் துணைப் படையினரால் தமது வேட்பாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டபோதும், கூட்டமைப்பு இந்த அடிப்படை நிலைப்பாட்டை எடுத்திருப்பது தென்துருவ தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனத்திற்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தருகிறது.

இலங்கையில் தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை அடையும் நோக்குடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, விடுதலைப் புலிகளால் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் முன்வைக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசும் உற்ற உறுதுணையாக இருக்கும் என்று சம்மேளனம் உறுதியாக நம்புகின்றது.

வடக்கில் உள்ள தமிழர்கள் அனைவரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் அணிதிரளுமாறு தென்துருவ தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம் ஊக்கப்படுத்துகிறது.

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட உலகில் உள்ள ஜனநாயக நாடுகள் அனைத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்புகளைப் பேணவேண்டும் என்று சம்மேளனம் கேட்டுக்கொள்கிறது.

தமிழ் மக்கள் தமது அரசியல், சமூக, பொருளாதார தலைவிதியைத் தாமே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை வழங்கக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை பிரச்சினைக்குரிய இரு தரப்பினரும் கண்டு அடைவதற்கான அனுசரணையை அனைத்துலக நாடுகள் வழங்க வேண்டும். தமிழ் மக்கள் பாதுகாப்புடனும் அமைதியுடனும் மதிப்புடனும் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு அனைத்துலக சமூகம், சிறிலங்கா அரசு மீதான செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்றும் சம்மேளனம் கோருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமையுடன் தொடர்புகளைப் பேணுமாறு அனைத்துலக ஊடகங்களிடமும் சம்மேளம் கோரிக்கை முன்வைக்கிறது. கூட்டமைப்பு தனது வரலாற்று ரீதியான முயற்சியில் வெற்றி பெறுவதற்கான ஆதரவை அனைத்துலக சமூகத்திடம் இருந்து திரட்டுவதற்கும் ஊடகங்கள் உதவவேண்டும்.

எந்த ஊடகத்திற்காவது தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டி இருப்பின், அதற்கான உதவிகளை மேற்கொள்வதற்கு தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம் தயாராக இருக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது.

புதினம்

யார் யார் எதுக்கு அறிக்கை விடுவது என்று விவஸ்தை இல்லாமல் கிடக்கிறது. கொஞ்ச நாளுக்கு முன்புதான் விடுதலைப் புலிகளின் அறிக்கைக்கு வரவேற்பினை இந்தத் தெந்துருவத் தமிழ்ச்சங்கம் விட்டதை புதினம் இணையத்தில் பார்த்தேன்.

முன்பு புலிகள் பலமாக இருந்த போது அறிக்கைவிடவில்லை. இப்ப இவை அறிக்கை விடுகினம். எதோ புலிகள் இவ்வளவு காலமும் ஒழுங்காக நடக்கவில்லை. இப்பதான் சரியாக நடக்கிறது போல இவை பாராட்டுகினம். இப்ப தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.