Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெள்ளவத்தையின் குறிப்பிட்ட பகுதிகள் சிறிலங்கா படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில்

Featured Replies

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் வெள்ளவத்தையின் குறிப்பிட்ட சில பகுதிகள் சிறிலங்கா தரைப் படையினர் மற்றும் காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக காணப்படும் அதேவேளையில், அப்பகுதியில் நடமாடும் தமிழர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன், வீடுகளும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன.

வெள்ளவத்தையில் காலி வீதிக்கு தரைப் பகுதியில் உள்ள உருத்திரா மாவத்தை, அருத்துசா லேன், சென். லோறன்ஸ் வீதி போன்றனவே கடந்த சில நாட்களாக படையினராலும், காவல்துறையினராலும் சுற்றிவளைக்கட்ட நிலையில் காட்சி தருகின்றன.

இங்கு தொடர்ந்து காவல் கடமையில் ஈடுபடும் சிறிலங்கா படையினர் அவர்களுடன் இணைந்த சாதாரண உடை தரித்த படைப்புலனாய்வாளர்கள் ஆகியோர் அப்பகுதியில் நடமாடும் தமிழ் இளைஞர்கள், யுவதிகளிடம் மட்டுமன்றி அனைவரின் அடையளங்களை பரிசீலித்து வருவதுடன் விசாரணைகயை மேற்கொண்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெள்ளவத்தை சென் லோறன்ஸ் வீதியில் உள்ள தொடர் மாடி ஒன்றில் விடுதலைப் புலிகளின் புலனாய்த்துறையின் முக்கிய உறுப்பினர்கள் தங்கியுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து சிறிலங்கா புலனாய்வுத்துறை மிக இரகசியமான சுற்றிவளைப்பு ஒன்றை செய்து அவர்களை கூண்டோடு கைதுசெய்ய முயன்றுள்ளது.

இருந்த போதிலும் இதை அறிந்துகொண்ட விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையினர் என சந்தேகிக்கப்படுபவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதை காலம் கடந்தே அறிந்துகொண்ட சிறிலங்கா புலனாய்வுத்துறை உருத்திரா மாவத்தை பகுதியை சுற்றிவளைத்து அவர்கள் அங்கு ஒளிந்து இருக்கலாம் என்றும் சந்தேகத்தில் தேடுதல் ஒன்றை நடாத்தியிருந்தது.

ஆனால், அவர்கள் அங்கும் இருக்கவில்லை எனத் தெரிந்துகொண்ட நிலையில் அவர்கள் தங்கி இருந்ததாக கூறப்படும் தொடர்மாடியில் இருந்து சில புலனாய்வு சம்பந்தப்பட்ட நூல்கள் மற்றும் குறிப்புகள் சிலவற்றை கைப்பற்றிய படையினர் அந்தப் பகுதியில் தொடர் காவலில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், வெள்ளவத்தை பகுதியில் உள்ள இணைய சேவை வழங்கும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் சிறிலங்காப் படையினரால் அழைக்கப்பட்டு கடுமையாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் இணைய சேவைகளை பயன்படுத்த வருபவர்கள் கடுமையாக கண்காணிக்கபடவேண்டும் என்றும் அவர்களின் செயற்பாடுகளில் சந்தேகம் ஏற்படின் உடனடியாக தமக்கு அறிவிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் கண்காணிப்பு கமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் அவற்றின் பதிவுகள் பேணப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேநேரம் வெள்ளவத்தை உருத்திரா மாவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கைக்குண்டுகள் தற்கொலை அங்கி மற்றும் மைக்கிறோ பிஸ்ரல் என்பனவற்றை கைப்பற்றி உள்ளதாக படையினர் அறிவித்துள்ளது பற்றி அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்டபோது அவர்கள் அவ்வாறான சம்பவம் ஒன்று நடைபெற்றதற்கான அறிகுறிகள் தமது இருப்பிடங்களுக்கு அண்மையாக இடம்பெற்றதாக தாம் அறியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், படையினர் தொடர்ந்தும் உருத்திரா மாவத்தை மற்றும் சென் லோறன்ஸ் வீதியில் காவலில் ஈடுபட்டுள்ளதையும் சாதாரண உடை தரித்த காவல்துறை புலனாய்வாளர்கள் நடமாட்டம் அதிகமாகியுள்ளதையும் அவதானிக்கக்கூடியதாகவிருப்ப

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.