Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தென்னிலங்கை ஊடகங்களின் பார்வையில் ‐ கே.பீ – புலிகள் ‐ ஆயுதங்கள் – குண்டு லொறிகள் ‐ கப்பல் கொள்வனவு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பு – அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் குறித்த தகவல்களை கே.பி வெளியிட்டு வருகிறார் ‐ பிரதமர்:

கைதுசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் தற்போதைய தலைவர் எனக்கூறுப்படும் கே.பி கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் இதனால் அவற்றை அகற்றும் வரை முழு இலங்கையிலும் சமாதானம் ஏற்பட்டு விட்டது எனக் கூறமுடியாது என பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹொரணையில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 30 வருடங்களாக காணப்பட்ட இருண்ட யுகம் தற்போது அற்றுப் போயுள்ளதாக சிலர் நினைக்கின்றனர். அந்த யுகம் அற்றுப் போயுள்ளது என நினைக்க வேண்டாம். நோயாளியின் உடம்பில் இன்னும் நோய் கிருமிகள் இருக்கின்றன. அந்த கிருமி எல்லா இடங்களிலும் ஒடி திரிகின்றது. குண்டுகள் கொண்டு வரப்பட்டமை தொடர்பாக மாத்திரமே தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது, அவற்றை செயற்படுத்துவதற்கான நபர்கள் சென்றுள்ள நபர்கள் பற்றியும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எங்கு இவர்கள் இருக்கின்றனர். வெடிப் பொருட்கள் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பவற்றை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதனால் முழுமையான சமாதானம் ஏற்பட்டு விட்டது என அரசாங்கத்தினால் முழுமையான சான்றிதழை வழங்க முடியாது. மீண்டும் இலங்கையில் பயங்கரவாதம் ஏற்படாத வகையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது எனவும் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

கே.பி போன்றவர் நபரை கைதுசெய்து சர்வதேச சக்திகளை ஒடுக்கிமை இலங்கை பெற்ற பாரிய வெற்றி – யாப்பா:

இலங்கைக்கு பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தி வந்த கே.பி போன்றவர் நபரை கைதுசெய்து சர்வதேச சக்திகளை ஒடுக்கிமையானது நாடு என்ற வகையில் இலங்கை பெற்ற பாரிய வெற்றியென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதன் அமெரிக்க வங்கிகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்ட நபர் எனவும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கடந்த தேர்தலில் ஒத்துழைப்புகளை வழங்கியவர் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளை படையினர், இலங்கையில் ஒடுக்கிய போதிலும் சர்வதேச ரீதியில் அதனை மேற்கொள்ள ஆதரவு கிடைக்காது என எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்தி வந்தன. வெளிநாடு ஒன்றில் வைத்து கே.பி கைதுசெய்யப்பட்டதன் மூலம் அந்த வாதமும் தகர்க்கப்பட்டுள்ளது எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் பகுதி பகுதியாக தேர்தல்கள் நடத்தப்பட மாட்டாது எனவும் இலங்கை மக்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என தெரிவித்துள்ள அமைச்சர், எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில், ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கப்பல் கொள்வனவுக்கு யப்பான் சென்ற புலித் தலைவர் குறித்து தகவல் கிடைத்துள்ளது என்கிறது காவற்துறை:

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு கப்பல் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக ஜப்பான் சென்ற புலிகளின் தலைவர் ஒருவர் குறித்த தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஜப்பானுக்கு சென்று இலங்கை திரும்பிய நிலையில் அண்மையில் கட்டுநாயக்க பகுதியில் கைதுசெய்யப்பட்ட, இரண்டு பேரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த தகவல் தெரியவந்திருப்பதாகவும் புலனாய்வுத் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் புலிகளின் தலைவர் உள்ளிட்ட அந்த அமைப்பின் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பான வீடுகளை நிர்மாணிப்பதற்கான வரைவுகளை மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கப்பல் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக ஜப்பானுக்கு சென்றிருந்த புலிகளின் முக்கியஸ்தருக்கும் தாம் தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் கைதுசெய்யப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் முக்கிஸ்தரான பாலகுமாரினால், சம்பந்தப்பட்டவர் ஜப்பானுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் அவரின் ஆலோசனையின்படியே தாம் அவருக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் கைதுசெய்யப்பட்டுள்ள ரொட்டியார் என்பவர் கூறியுள்ளதாக மேல் மாகாண புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஆயுதங்கள் ‐ வெடிப் பொருட்கள் மீட்பிற்கு ‐ புனர்வாழ்வு அழிக்கப்படும் புலிகள் உதவுகிறார்கள் ‐ கூறுகிறார் இராணுவத் தளபதி

விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்;டுள்ள ஆயுதங்கள் மற்றும் வெடிப் பொருட்களை மீட்பதற்காக புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் காவற்துறையினர் மற்றும் இராணுவத்தினருக்கு பாரிய ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலிகளின் உறுப்பினர்களிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவர்கள் வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில் எதிர்காலத்தில் பெருமளவிலான ஆயுதங்களையும் வெடிப் பொருட்களையும் மீட்க முடியும் என இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பு முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது என்பதை புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் புலிகளின் உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் தொழில் ஒன்றை செய்து வாழ்வதே தமது ஒரே நோக்கம் என அவர்கள் கூறிவருவதாகவும் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

குண்டு பொருத்தப்பட்ட வாகனம் ஒன்றை விடுதலைப்புலிகள் கொழும்புக்கு அனுப்பியுள்ளனர் ‐ காவற்துறை:

குண்டு பொருத்தப்பட்ட வாகனம் ஒன்றை விடுதலைப்புலிகள் கொழும்புக்கு அனுப்பியுள்ளதாக கிடைத்துள்ள தகவல்களை அடுத்து, அதனை கண்டறிவதற்கான விசாரணைகளை தாம் மேற்கொண்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகள் சிறிய சொகுசு பேரூந்து ஒன்றில் குண்டை பொருத்தி அதனை வவுனியாவில் இருந்து கொழும்புக்கு அனுப்பி உள்ளதாக இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதனடிப்படையில் இந்த விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் இந்த தகவல்களை வழங்கியுள்ளதாகவும் இராணுவத்தின் புலனாய்வு பிரிவினர் பின்னர், அந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். யுத்தம் முடிவடைவதற்கு முன்னர், விடுதலைப்புலிகள் இந்த பேரூந்தை கொழும்புக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் அல்லது பேரூந்து குறித்து தகவல்களை அறிந்தால், அது பற்றி, அருகில் உள்ள காவற்துறை நிலையம் அல்லது இராணுவ முகாமுக்கு அறிவிக்குமாறும் இராணுவத்தினர் கேட்டுள்ளனர்.

http://www.globaltamilnews.net/tamil_news....13154&cat=1

Edited by ஜீவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.