Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கில் அடை மழை! வவுனியாவில் ஏதிலிகள் பெரும் அவலம்! இரு நாட்களாக உணவு வழங்கப்படவில்லை!

Featured Replies

வடபகுதியில் பெய்துவரும் அடைமழை காரணமாக வவுனியா ஏதிலிகள் முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் கூடாரங்களுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் பெரும் அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர் என வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் அடை மழையினால் மக்களின் தற்காலிகக் கூரங்களுக்கும் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் மக்கள் ஒரு இலட்சத்திற்கு அதிகமான மக்கள் கூடாரங்களை விட்டு வெளியேறி வெளியே மழையில் நனைந்துள்ளனர்.

up1.gif

ஏதிலிகள் முகாம் நிலப்பகுதி தாழ்வான பகுதியாக இருப்பதால் வெள்ளம் தேங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இருநாட்கள் பெய்த அடை மழையினால் முகாமில் இருந்த மக்களுக்கு உணவுகள் வழங்கப்படவில்லை எனவும், சமையல் வேலைகளை நடைபெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

up2.gif

மழை காரணமாக கூடாரங்களினுள் இருக்க முடியாத மக்கள் முகாங்களை விட்டு மரங்களை நோக்கி வெளியேற முற்பட்ட போது அப்பகுதிக்கு பெருந்தொகையான காவல்துறையினரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் தங்களை வேறு முகாங்களுக்கு மாற்றுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த போதும் அவர்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் செவிசாய்கவில்லை.

எதிர்வரும் நாட்களில் மழை தொடர்ந்தால் இந்த அவலநிலை மேலும் மோசமடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற போரினால் இடம்பெயர்ந்து வந்த சுமார் மூன்று லட்சம் தமிழர்கள் வவுனியா மெனிக் பாமில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

45 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வரும் இந்த முகாமில் தற்போது உணவு சமைத்து உண்பதற்கு கூட வசதி இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுக் காலை திடீர் என்று பெய்த கடும் மழை காரணமாக சோன் 4 முகாமில் வாழ்ந்து வந்த மக்களின் இடுப்பளவுக்கு வெள்ளம் பாய்ந்து ஓடியுள்ளது. இதன் காரணமாக மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்துள்ளனர்.

உயர் தர பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்கள் தங்களின் பாடப் புத்தகங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பரீட்சைக்கு செல்ல முடியாமல் உள்ளனர்.

முகாமின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளமையினால் மக்கள் உறங்குவதற்கு இடம் இன்றி வேறு தேவைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களில் தங்கியுள்ளனர்.

தற்காலிக மலசல கூட கிடங்குகள் நிரம்பி வெள்ள நீருடன் கலந்து உள்ளமையினால் அப்பகுதி முழுவதும் மக்கள் சுவாசிக்க முடியாத அளவுக்கு மிகவும் மோசமாக துர்நாற்றம் வீசுகின்றது.

சமைப்பதற்கு விறகுகள் இல்லாத நிலையிலும் இருக்கும் விறகுகள் நனைந்து உள்ள நிலையில் மக்கள் தங்களுக்காக உணவுகளை கூட சமைக்க முடியாமல் உள்ளனர்.

இந்த செய்தி இலங்கை நேரப்படி 3.30க்கு எழுதப்பட்டு கொண்டு இருக்கும் நேரத்தில் மெனிக்பாம் பகுதியில் மிகவும் மோசமாக மழை பெய்து கொண்டுள்ளது. சோன் இரண்டு பகுதியில் இருக்கும் ஒருவரிடம் தொடர்பு கொண்ட போது தற்போது இங்கு மிகவும் மோசமாக மழை பெய்து கொண்டுள்ளது. பார்க்கும் இடம் எல்லாம் வெள்ளம். வெள்ள நீருடன் மலசல கழிவு நீர் ஓடுவதால் மக்கள் மிகவும் மோசமாக பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். உணவு இல்லை குடிப்பதற்கு நீர் இல்லை தொண்டு நிறுவனங்கள் 1000 பொதி பிஸ்கட்டுகள் கொண்டு வந்துள்ளனர். அந்த பிஸ்கட்டுகளை வழங்க முடியாத அளவுக்கு மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நான் நிற்கும் சோன் இரண்டு முகாமின் அவலத்தினை சொல்ல முடியாமல் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ஒட்டு மொத்தமாக மக்கள் அனைவரும் பாதிப்படைந்துள்ளனர . தொற்று நேய்கள் விரைவாக பரவும் நிலமையும் காணப்படுவதாவும் தெரிவிக்கப்படுகிறது.

Edited by தராக்கி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.