Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்து ஆயுதங்களை வைத்து தமிழர்களை அழித்த இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து ஆயுதங்களை வைத்து தமிழர்களை அழித்த இலங்கை

புதன்கிழமை, ஆகஸ்ட் 19, 2009, 16:49 [iST]

லண்டன்: இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை தமிழர்களுக்கு எதிரான போரில் பெருமளவில் இலங்கை ராணுவம் பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈழத்தில் மட்டுமல்லாது, காஸாவிலும் இங்கிலாந்து ஆயுதங்களை இஸ்ரேல் ராணுவம் பெருமளவில் பயன்படுத்தியதாக இங்கிலாந்து எம்.பிக்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், அப்பாவி மனிதர்களுக்கு எதிரான போர்களில் இங்கிலாந்து தயாரிப்பு ஆயுதங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

பாலஸ்தீனத்தில் காஸா முனையிலும், இலங்கையின் வடக்கிலும் இந்த வகை ஆயுதங்களைத்தான் இரு நாட்டு ராணுவங்களும் பெருமளவில் பயன்படுத்தியுள்ளன.

இலங்கையில், அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பின்னர் இந்த ஆயுதங்களை இங்கிலாந்திலிருந்து இலங்கை பெருமளவில் கொள்முதல் செய்துள்ளது. 2006ம் ஆண்டு போர் நிறுத்தம் முறிந்த பின்னர் இந்த ஆயுதங்களை அப்பாவிகளுக்கு எதிராக இலங்கை ராணுவம் பயன்படுத்தியுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கூட்டறிகையில் கையெழுத்திட்டுள்ள தொழிலாளர் கட்சி உறுப்பினர் ரோஜர் பெர்ரி கூறுகையில், உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள, சமீபத்தில் சண்டையை நிறுத்தியுள்ள நாடுகளுக்கு ஆயுதங்களை சப்ளை செய்யும்போது, அந்த நாடுகளில் இங்கிலாந்து நாட்டு ஆயுதங்கள் எந்த வகையில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை இங்கிலாந்து அரசு கண்காணித்து வர வேண்டும்.

காரணம், சண்டை நிறுத்தம் ஒருவேளை முறிவடைந்தால் இங்கிலாந்திலிருந்து வாங்கிய ஆயுதங்களை அந்த நாடுகளின் படைகள் பயன்படுத்தக் கூடும்.

இலங்கையில் நடந்தது அதைத்தான் நிரூபிக்கிறது. எனவே இதுகுறித்து இங்கிலாந்து அரசு மிகவம் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

ஆயுதங்களை விற்பதில் உள்ள லைசென்ஸ் முறையி்ல் விதிகளை இறுக்கமாக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எம்.பிக்கள் குழுவின் கவலைகளை அரசும் பகிர்ந்து கொள்கிறது.

இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்ட ஆயுத ஏற்றுமதி குறித்த அனைத்து விவரங்களையும் அரசு தீர ஆராய்ந்தது. இந்த ஆய்வு முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் இந்த ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

ராணுவ பட்ஜெட்டை அதிகரிக்கும் இலங்கை...

இதற்கிடையே, புலிகளுடனான சண்டை முடிவடைந்து விட்ட போதிலும், ராணுவ பட்ஜெட்டைக் குறைக்காமல் அப்படியே நீட்டிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாம்.

இதுகுறித்து பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சே கூறுகையில், ராணுவத்தை நவீனப்படுத்த வேண்டியுள்ளது. கடனுக்கு வாங்கிய பல்வேறு வகையான தளவாடங்களுக்கான நிலுவைப் பணத்தைத் தர வேண்டியுள்ளது.

எனவே இன்னும் ஒரு ஆண்டுக்கு ராணுவ பட்ஜெட்டைக் குறைக்கும் வாய்ப்பு இல்லை.

ஆயுதங்கள் வாங்குவதை நாங்கள் குறைத்துள்ளோம். இருப்பினும் ராணுவ பலத்தை அதிகரிக்க நவீனத் தொழில்நுட்பங்களை கொண்டு வர வேண்டியது அவசியமாகும் என்றார் கோத்தபயா.

ராணுவ பட்ஜெட்டை இதுவரை இல்லாத அளவுக்கு சமீபத்தில் 1.6 பில்லியன் டாலர்களாக உயர்த்தியது இலங்கை அரசு என்பது நினைவிருக்கலாம்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து பெருமளவில் ஆயுதங்களை வாங்கிக் குவித்திருந்தது. புலிகளுக்கு எதிரான போர் முடிந்த பின்னர் சீனாவிடம் வாங்குவதாக இருந்த 200 மில்லியன் டாலர் ஆயுதக் கொள்முதலை அது ரத்து செய்து விட்டது.

தற்ஸ்தமிழ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம்:பிரித்தானிய ஆயுதங்கள் உபயோகிக்கப்பட்டதா

on 19-08-2009 17:57

இலங்கை பிரிட்டனிடம் வாங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி தமிழ் மக்களைக் கொலை செய்ததாய் அச்சம் எழுந்துள்ளது. இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் பிரித்தானியாவும் முக்கியமானது. கடந்த மூன்று வருடங்களில் மட்டும் 13.6 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்டுகள் பெறுமதியான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி இலங்கையரசு தமிழ் மக்களைக் கொலை செய்துள்ளதாய் அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளதால் ஆயுத வியாபாரம் தொடர்பான ஆய்வு ஒன்றுக்கு அவசியம் ஏற்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் ஊடகம் ஒன்று கூறியுள்ளது.

இலங்கையுடன் ஆயுத வியாபாரத்துக்கென உள்ள அனைத்து உரிமங்கள் பற்றியும் ஆய்வு நடத்த வேண்டும் என நான்கு பாராளுமன்றக் குழுக்கள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுத்துள்ளன. இதுபற்றி ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அமைப்பின் தலைவர் ரோகர் பெரி கூறும்போதுஇ அண்மைக்காலங்களில் தமது போர் நடவடிக்கைக்களை நிறைவு செய்துள்ள இலங்கை போன்ற நாடுகளில் மீண்டும் போர் வரலாம் என்பதால் அவற்றை மிகக்கவனமாக புலனாய்வு செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார்.

இவ்வாறு விழிப்புடன் கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளுள் இலங்கை மிக முக்கியமானது என்றும் கூறினார். இதேவேளை இந்த பாராளுமன்ற அமைப்புகள்இ பிரிட்டனின் ஆயுதங்கள் எப்படிப் பயன்படுத்தப்பட்டன என்பதைக் கண்டறிவது சாத்தியமற்ற ஒன்று என்று கூறியுள்ளதோடுஇ அவ்வாயுதங்கள் பொதுமக்களைப் படுகொலை செய்வதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளன எனபதே பொதுவான கருத்தாக உள்ளது என்று கூறியுள்ளன.

பிரிட்டன் வழங்கும் ஆயுதங்களை அவற்றுக்கான உரிம விதிமுறைகள் மீறும்விதமாக எதிர்காலத்தில் கையாளப்படலாம் என்பதால் மிகக் கவனமாக ஆராய்வது முக்கியமாகிறது. எனினும் பிரிட்டன் வழங்கும் ஆயுதங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட நெறிகளுக்கு உட்பட்டவை என்பதால் உள்நாட்டுப் போர் மற்றும் வறிய நாடுகளுக்கு அனுப்பப்படும் ஆயுதங்கள் சிலவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும்இ பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரிட்டனின் ஆயுதங்களில் எவ்வகை ஆயுதங்களை 20இ000 பொதுமக்களைக் கொல்ல இலங்கையரசு பாவித்தது என்பது தமக்குத் தெரிய வரவேண்டும் என்று கேட்டுள்ளார்கள்.

இலங்கையில் மிக உக்கிரமான போர் தொடங்கியதும் பிரிட்டன் அரசாங்கமானது இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்ட ஆயுத விவகாரம் சம்பந்தமான அனைத்து உரிமங்கள்இ ஒப்பந்தங்கள் பற்றியும் மீளாய்வு செய்யத் தொடங்கியுள்ளது எனவும்இ அந்த ஆய்வானது முடிவுக்கு வரும் தறுவாயில் உள்ளதால் வெகு விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று வெளிநாட்டு அலுவலக பேச்சாளர் லண்டன் டெய்லி டெலிகிராஃப் பத்திரிகைக்குக் கூறியுள்ளார்.

2008 ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் மட்டும் மொத்தமாக 21 உரிமங்களை பிரிட்டன் ஏற்றுக் கொண்டதென்றும்இ ஐரோப்பிய ஒன்றிய சட்டவிதிகளை மீறியதால் இரு உரிமங்கள் மறுக்கப்பட்டதென்றும் த ரைம்ஸ் கூறுகிறது. கடந்த ஆண்டும் ஏப்பிரல் முதல் மார்ச் வரையான ஒரு ஆண்டில் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கவென மொத்தமாக 34 உரிமங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த வருட கடைசியில் புலிகளையும்இ பொதுமக்களையும் இலங்கையரசு கொன்று குவித்ததால் இலங்கைக்கு ராணுவ உதவிகள் மற்றும் விற்பனைகள் செய்வதை அமெரிக்கா நிறுத்தியிருந்தது. இவ்வாறு பிரிட்டனும் முன்னரே தமது ஆயுத வியாபாரத்தை நிறுத்தியிருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர். உண்மையில் பிரிட்டன் இவ்வாறு செய்யும் என தாம் எதிர்பார்த்திருந்ததாக பெரியும் கூறியுள்ளார்.

அதிகாலை

இங்கிலாந்து ஆயுதம் விக்க அதை இலங்கை வாங்கி என்ன செய்து இருக்கும்...? :wub: ஒரு வேளை ராஜபக்ஷ சகோதரர்கள் side business செய்கிறார்களோ...? இறக்குமதி செய்கிற ஆயுதத்தை அல்கைடாவுக்கு (Al-Qaeda) ஏற்றுமதி செய்யினமோ?? :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.