Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர் லண்டனில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

பிரித்தானியாவில் இயங்கும் சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக அதன் அலுவலகத்திற்கு முன்னால் வருகின்ற 5ம் திகதி(சனிக்கிழமை 05.09.2009) சிங்களவர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். காலை 11.00 மணி முதல் மதியம் 2.00 மணிவரை இப்போராட்டம் நிகழும் என செய்திகள் கசிந்துள்ளன.

பிரித்தானியாவில் இயங்கும் சனல் 4 தொலைக்காட்சி கடந்த 25 ம் திகதி இலங்கை இராணுவம் நடத்திய கொடூரமான யுத்தக்குற்றங்களை உலகிற்கு அம்பலப்படுத்தியது. இந்த வீடியோக் காட்சிகளை இலங்கை ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்(JDS) அமைப்பு வெளியிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து BBC மற்றும் CNN உட்பட உலகின் முன்னனித் தொலைக்காட்சிகளும் இதனை ஒளிபரப்பியிருந்தன. இதனையடுத்து பெரும் நெருக்கடியில் இலங்கை அரசு உள்ளது. மிஞ்சியிருந்த இலங்கையின் நன்மதிப்பும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

இந்த வீடியோக் காட்சிகளை ஒளிபரப்பியது தவறு என்றும், சனல் 4 தொலைக்காட்சி மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரியும், சிங்களவர் ஒரு போராட்டம் நடத்தவுள்ளனர். இப்போராட்டத்திற்கு பிரித்தானிய இலங்கை பேரவை(BSLF) என்ற சிங்கள அமைப்பு அழைப்பு விடுத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் மின்னஞ்சல் மற்றும் இணையத்தளமூடாக சனல் 4 தொலைக் காட்சிக்கு எதிராக கையெழுத்து வேட்டையும் நடத்தப்படுகிறது. இச் செயலூடாக சனல் 4 தொலைக்காட்சிக்கு அச்சுறுதலை ஏற்படுத்த சிங்கள இனவாதிகள் லண்டனில் முற்படுகின்றனர்.

இலங்கையில் ஊடக சுதந்திரத்தை அடக்கியாளும் சிங்கள பாசிசம், நாடு கடந்த ரீதியாகவும் அதன் அச்சுறுத்தலை லண்டனிலும் மேற்கொள்ள முனைவதை பிரித்தானிய தமிழர்கள் அனுமதிக்கலாமா ? இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை, இன அழிப்பை உலகிற்கு எடுத்துக்காட்டிய சனல் 4 தொலைக்காட்சி என்றுமே தமிழர்களின் அபிமானத்திற்குரியது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டளர் ஜானக அழகப்பெரும எனத் தற்போது தெரியவந்துள்ளது. பிரித்தானியாவில் தமிழர் விரோதப்போக்கைக் கடைப்பிடிக்கும் சிங்கள இனவாதியாக இருக்கும் இவர், இங்கு நடத்தப்பட்ட பல சிங்கள ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்கி நடத்திவந்துள்ளார். ஏசியா ரிரைபியூன் இணையம்(Asia tribune) , இலங்கையின் பாதுகாப்பு இணையம்(defence) போன்ற இணையத்தில் இவர் கட்டுரைகள் எழுதிவருவதும் தற்போது தெரியவந்துள்ளது. சிறீலங்கா கார்டியன்(srilanka Guardian) இணையத்தில் இருந்து இவரது தொலைபேசியும், மற்றும் 2 முக்கிய சிங்கள செயல்பாட்டாளர்களது தொலைபேசி இலக்கமும் பெறப்பட்டுள்ளது.

Contact : ஜானக அழகப்பெரும +44 (0)7885973128

Anura Medagedara-07956539514

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா தமிழர்கள் சிறிலங்காப் படைகளின் அட்டுளியங்களை பிரித்தானியா மக்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக சனல் 4 தொலைக்காட்சியில் வந்த செய்திகளைத் தாங்கி ஆர்ப்பாட்டம் நடத்தலாம் தானே.

சிட்னியில் நாளை வெள்ளிக்கிழமை அவுஸ்திரெலியர்களுக்கு ,சனல் 4 வில் வந்த புகைப்படங்களைத் தாங்கி சிறிலங்கா அரசின் இன அழிப்பை காண்பிப்பதற்காவும், தடுப்பு முகாம்களில் வன்னி மக்களின் அவலங்களை வெளிப்படுத்துவதற்காகவும் மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறுகிறது.

விபரங்களுக்கு

image001mql.jpg

http://www.yarl.com/forum3/index.php?showtopic=63377

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.