Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேலும் ஒரு மாதத்திற்கு அவசரகால நடைமுறை நீடிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலும் ஒரு மாதத்திற்கு அவசரகால நடைமுறை நீடிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்திருப்பதாக கடந்த மே மாதம் 19ஆம் நாளன்று அறிவித்திருந்த சிறீலங்கா அரசாங்கம், மகிந்த ராஜபக்சேவின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகக்கூறி மேலும் ஒரு மாதத்திற்கு அவசரகால நடைமுறையை நீடித்துள்ளது.

அவசரகால நடைமுறையை நீடிப்பதற்கு எதிராக பதின்மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்த பொழுதும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை சேர்ந்த நூறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு வாக்குகளுடன் அவசரகால நடைமுறையை நாடாளுமன்றத்தில் சிறீலங்கா அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.

இதன்பொழுது அவசரகால நடைமுறை நீடிக்கப்படுவது அனாவசியமானது என்றுகூறி, இன்றைய வாக்கொடுப்பின் பொழுது அவையின் அமர்வுகளை ஜே.வி.பி வெளிநடப்பு செய்துள்ளது.

அவசரகால நடைமுறையை நீடிப்பதற்கான தீர்மானத்தை சமர்ப்பித்து இன்று காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சிறீலங்கா சுகாதாரத்துறை அமைச்சரும், அவை முதல்வருமான நிமால் சிறீபால டீ சில்வா, மகிந்த ராஜபக்சேவின் உயிருக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் நிலவுவதாக தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்:

ஷஷயுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள பொழுதும் அதிபர் மகிந்த ராஜபக்சேவை படுகொலை செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. அண்மையில் பதுளையில் அதிபர் ராஜபக்சே கலந்து கொண்ட பொது நிகழ்வு மைதானத்தில் இருந்து ஒரு தொகுதி கிளைமோர் கண்ணிவெடிகளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியிருந்தனர்.

இப்பொழுதும்கூட அதிபர் ராஜபக்சேவின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதையே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. எனவே யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டாலும் அவசரகால நடைமுறையை நீடிக்க வேண்டிய தேவை தொடர்ந்தும் நிலவுகின்றது.

அவசரகால நடைமுறை நீக்கப்பட வேண்டும் என்று பரப்புரை செய்வோர், அதிபர் ராஜபக்சேவை படுகொலை செய்ய முற்படுவோருக்கு மறைமுகமாக துணைபோகின்றனர். அதிபர் ராஜபக்சேவை சனநாயக வழியில் தோற்கடிக்க முடியாதவர்கள், அவரை படுகொலை செய்து தமது அரசியல் இலக்குகளை ஈட்டிக்கொள்ள முற்படுகின்றனர்.

இவ்வாறு சிறீலங்கா சுகாதாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனை ஆட்சேபித்து உரையாற்றிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரா குமார திஸநாயக்க:

“எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு அபத்தமான – பொய்யான விளக்கங்களை அளித்து அவையை தவறாக வழிநடத்துவதற்கு இந்த அரசாங்கம் முற்படுகின்றது. சனநாயக உரிமைகளை நசுக்குவதற்கு அவசரகால நடைமுறையை இந்த அரசாங்கம் பயன்படுத்துகின்றது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார் அவர்.

இதேயிடத்தில் உரையாற்றிய ஆளும் கட்சியின் நாடாளுமன்ற அமைப்பாளர் அமைச்சர் தினேஸ குணவர்த்தன:

“எமது அதிபருக்கு எதிராக பன்னாட்டு மட்டத்திலான சதித்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தமது கைக்கூலிகளைப் பயன்படுத்தி எமது அதிபருக்கும், அரசாங்கத்திற்கும், நாட்டிற்கும் எதிரான சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்றன. மிகப்பெரும் சதியின் சிறிய காட்சியை மட்டுமே நாம் இப்பொழுது பார்க்கின்றோம். இவ்வாறான சதிகாரர்களை நாம் நிச்சயம் தோற்கடிப்போம்”.

இவ்வாறு ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கூறினார்.

http://www.meenagam.org/?p=9994

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.