Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் காட்டித் தப்பிக்க முயல்கிறார் ராஜபக்ஷ

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் காட்டித் தப்பிக்க முயல்கிறார் ராஜபக்ஷ

யுத்த கள முனையில் விடுதலைப் புலிகளின் ஆயுத பலம் முறியடிக்கப்பட்ட பின்னர் இலங்கை அரசு நினைத்ததைப் போல் அல்லாமல், தமிழீழ விடுதலைப் போர் முன்னரைக் காட்டிலும் உத்வேகமாக பல்வேறு திசைகளிலும் விரிந்து செல்கின்றது.

யுத்த வெற்றி ஒன்றின் மூலம் மகிந்த சகோதரர்கள் சிங்கள மக்களை அந்த வெற்றி மாயையினுள் வைத்துத் தமது ஆட்சிக்காலத்தை அடுத்த தேர்தலிலும் நீடித்துச் செல்லலாம் என்பதைத் தவிர, சிங்கள தேசம் பல்வேறு இழப்புக்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது.

அரசியல் விவேகமற்ற மகிந்த ராஜபக்ஷவை ஆடசியில் அமர்த்திய விடுதலைப் புலிகளின் இராஜதந்திரம் அவர்களுக்கு களமுனைத் தோல்வியை ஏற்படுத்தினாலும், அவர்களது இலக்கு மாறாத பயணத்திற்கு ராஜபக்ஷ சகோதரர்களின் மாறாத இனவாத நிலைப்பாடு பெரும் உத்வேகத்தை வழங்கி வருகின்றது.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர், தமிழ் மக்களை அரவணைக்க முற்பட்டிருந்தால்…,

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பலி கொள்ளப்பட்ட இறுதி யுத்தத்தை சிங்கள தேசத்தின் வெற்றியாகப் பிரகடனப்படுத்திக் கொண்டாடாமல் விட்டிருந்தால்…

காலம் தாழ்த்தியாவது தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளை நிவர்த்தி செய்வதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால்…

தமிழீழ விடுதலைப் போராட்டம் தடுமாறித்தான் போயிருக்கும்.

அமெரிக்கா மீதான “11 செப்ரம்பர் தாக்குதல்” ஏற்படுத்தியிருந்த புதிய ஒழுங்கு விதிகள் சிங்கள தேசம் ‘பயங்கரவாதம்’ என்ற ஒற்றைச் சொல்லினூடாகத் தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை இல்லாமல் ஆக்குவதற்கு உலக நாடுகளின் அமோக ஆதரவைப் பெற்றிருந்தாலும், யுத்த வெற்றிக்குப் பின்னரான மகிந்த சகோதரர்களின் தமிழர்கள் மீதான பழிவாங்கும் செயல்கள் அந்த நாடுகளை மீள் சிந்தனைக்குள்ளாக்கியுள்ளது.

வன்னி மீதான யுத்தத்தை ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை சிங்கள அரசு யுத்தம் நடைபெற்ற பகுதிகளுக்குச் செல்வதற்கு சுயாதீன ஊடகவியலாளர்களையோ, தொண்டு நிறுவனங்களையோ, மனித உரிமை செயற்பாட்டாளர்களையோ தொடர்ந்தும் அனுமதிக்க மறுத்து வருவது….

யுத்த கள முனையிலிருந்து தப்பி வந்த தமிழர்களை சிங்கள அரசு நடாத்தும் விதம், இறுதிவரை யுத்த கள முனையில் பணியாற்றிய ஐ.நா.வின் பணியாளர்கள், வைத்தியர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் உட்பட்ட பலரையும் யுத்தம் நடந்த காலத்தில் இடம்பெற்ற கொடூர சம்பவங்களின் சாட்சியாகாமல் தடுத்து வைத்திருப்பது….

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு இலங்கை இராணுவத்தினரை விமர்சித்த காரணத்திற்காக 20 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியது போன்ற இலங்கையின் அத்தனை நடவடிக்கைகளும் அவர்களது தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத கொடூரத்தை உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்தியுள்ளது.

இறுதி யுத்தகாலம் வரை புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் நடாத்திய போராட்டங்கள் அதிக கவனம் பெறாத போதும், அதற்குப் பின்னரான சிங்கள தேசத்தின் இனவாத நடவடிக்கைகள் காரணமாக அந்தப் போராட்டங்களின் நியாயத் தன்மை பல நாடுகளின் மனச்சாட்சியை உறுத்தி வருகின்றது.

குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான குற்றச் செயல்களினால் பெரும் அதிருப்தியை அடைந்துள்ளன. இலங்கைக்கு எதிரான அதன் முதல் தாக்குதலாக இலங்கை இதுவரை அனுபவித்து வந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை ரத்துச் செய்யும் முடிவுக்கு வந்துள்ளது.

இலங்கை அரசு தமிழர் விரோத செயற்பாடுகளை நிறுத்தி, அவர்களது அரசியல் அபிலாசைகளுக்கு மதிப்பளிக்க தொடர்ந்தும் தவறுமானால், ஐரோப்பிய நாடுகள் மேலும் பல தடைகளை இலங்கை மீது கொண்டு வரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

ஈழத் தமிழர்கள் மீதான உலகத்தின் அனுதாபங்களைச் சாதகமாக்கிக் கொள்ள புலம் பெயர் தமிழர்கள் தமது போராட்டங்களை தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதில் அந்தத் தேசங்களின் அரசியல் தலைமைகள் அக்கறை காட்ட ஆரம்பித்துள்ளன.

சிங்கள தேசத்தால் ஈழத் தமிழர்கள் மீது போடப்பட்ட பயங்கரவாதத் திரை மெல்ல மெல்ல விலகி வருகின்றது. விடுதலைப் புலிகள் மீதான பயங்கரவாத முத்திரை விரைவில் தகர்க்கப்படும் சாதக நிலையும் உருவாகியுள்ளது.

சிங்கள அரச பயங்கரவாதமே விடுதலைப் புலிகளைப் பிரசவித்தது என்பதை பிரான்சிலிருந்து வெளிவரும் ’லு மோந்த்’ போன்ற சர்வதேச பிரபல்யமான பத்திரிகைகளே ஒப்புக்கொள்ள ஆரம்பித்துள்ளன.

முள்ளிவாய்க்கால் வெற்றிக்குப் பின்னர் ‘விடுதலைப் புலிகள்’, ‘பயங்கரவாதம்’ என்ற சிங்கள தேசத்தின் பூச்சாண்டிகள் உலக நாடுகளால் ஏற்கப்படாத நிலை உருவாகியுள்ளது.

ஆக மொத்தத்தில், தமிழீழ மக்கள் இழந்தவற்றை மீட்கும் புறச் சூழல் சாதகமாகவே உள்ளது.

புலம் பெயர் தமிழர்கள் தமிழீழ மண்ணை மீட்டெடுக்கவும், தமிழீழ மக்களை சிங்கள இனவாதக் கொடூரங்களிலிருந்து விடுவிக்கவுமான தமது போராட்டங்களிலிருந்து பின் வாங்கப் போவதில்லை.

இந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மனத் தூய்மையோடு நேர்மையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

உலக நாடுகளின் அக்கினிப் பார்வையிலிருந்தும், தண்டனைகளிலிருந்தும் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள ராஜபக்ஷ சகோதரர்களுக்கு இருக்கும் ஒரே துருப்புச் சீட்டாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

இதுவரை கண்டுகொள்ளப்படாமல் விட்டு வைத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மகிந்த ராஜபக்ஷ அழைத்துச் சந்தித்ததற்குப் பின்னால் இந்தச் சதி முயற்சி உள்ளதாகவே நம்பப்படுகின்றது.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அழுத்தங்களை உலக நாடுகள் இலங்கை மீது பிரயோகிக்கும் போது, நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இதுபற்றிப் பேசுகின்றோம் என்று காலம் கடத்தும் பதிலுக்கு ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பயன்படுத்த முற்படுகிறார்.

ராஜபக்ஷ அரசைக் காப்பாற்ற இந்தியாவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மகிந்தவுடன் பேசும்படி நிர்ப்பந்தப்படுத்துகின்றது.

இந்த சதிவலையிலிருந்து விடுபட்டு, பேச்சிழக்க வைக்கப்பட்டுள்ள தமிழீழ மக்களுக்காக புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து தமிழீழத்தை மீட்கும் பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியுடன் செயலாற்ற வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் விருப்பமாக உள்ளது.

நன்றி: ஈழநாடு (பாரிஸ்)

http://www.meenagam.org/?p=10966

  • கருத்துக்கள உறவுகள்

இன்று புலிகளில்லை, அதனால் பிரிவினைவாதம் பற்றிப் பேசாமல் மக்கலனைவரும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்று சம்பந்தன் கூறுகிறார். அப்படியானால் 1976 ஆம் ஆண்டு தனித் தமிழ் ஈழம்தான் ஒரேதீர்வு என்று மக்கள் ஆணை கேட்டு 1977 தேர்தலில் தாம் அமோக வெற்றியீட்டியதை தவறு என்கிறாரா? ஆக இவர்களை பொறுத்தவரையிலும் பிரச்சனைக்குக் காரணமானவர்கள் புலிகள்தான். அவர்கள் இப்போது அழிக்கப்பட்டு விட்டார்கள், ஆகவே இனிப் பிரச்சனையுமில்லை, பிரிவினைவாதமுமில்லை !!!!பேஷ்...பேஷ்...இதைத்தானே ஐய்யா சிங்களவனும் சொல்லுகிறான். "புலிகள் தான் ஈழம் கேட்கிறார்கள், தமிழர்களுக்கென்று பிரச்சனை ஒன்றுமில்லை, இருப்பதெல்லாம் புலிப்பயங்கரவாதிகளின் பிரிவினைவாதப் பயங்கரவாதப் பிரச்சனை மட்டும்தான்". இதையே நீங்களும் சொல்கிறீர்கள்.

இதனால்த்தான் மகிந்த தனது பிரச்சாரத்துக்கு உங்களைப் பயன்படுத்துவதையோ அல்லது இந்தியா சிங்களப் பிரச்சாரத்துக்குத் துணை போகும்படி உங்களை வற்புறுத்துவதையோ உங்களால் இலகுவாக ஏற்றுக்கொள்ள முடிகிறது. இதை வெறுமனே "உயிரச்சத்தால் எடுத்த முடிவு" என்று எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஐய்யா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள அரசு கூறுவதுபோல் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு புலிகள்தான் காரணமா?

அப்ப்டியாயின் 1948 இலிந்து தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்ததா?

ஏன் ஜி ஜி பொன்னம்பலம். எஸ் ஜே வி செல்வனாயாகம் ...................போன்றோர் போராடினார்கள்.

ஆக 1948 இலிருந்து 1971-75 வரையான் காலப்பகுதிக்கு என்ன நடந்தது?

1958 சிங்கள சட்டம்,1971 பல்கலைக்கல்வி பறிப்பு, 1972 குடியரசு சட்டம் அமுல். இவை தமிழர்களுக்கு என்னத்தை தந்தது?

ஒன்று மட்டும் உண்மை. புலிகள் இல்லாதிருந்திருந்தால்

1. இலங்கையில் தமிழர்கள் அழிந்தேபோயிருப்பர்கள்.

2.உலகமெல்லாம் தமிழர் என்று ஒரு இனம் இருப்பதும தெரியவந்ததும் தமிழீழ விடுதலைப் புலிகளால்தான்

3.புலி எதிர்ப்பு கோஷம் போடும் , கட்டுரை வரையும் பலருக்கு சிங்கள் பாசிச பயங்கரவாத அரசால் ஊதியம் கிடைப்பதும் எம்மால்தான்

அண்மையில் தென் பகுதியில் வாழ் தமிழர்கள் ஒரு உண்மை ஒப்புக்கொண்டார்கள். அவர்களின் இருப்புக்கு புலிகள் வேண்டும் என்று.

இங்கு காலத்துக்கு காலம் பிரிவினைவாதம், பயங்கரவாதம்,.........................என பல சொற்பதங்கள் பிரயோகித்தாலும் தமிழர் நிரந்தரமாக வாழும் நிலை ஏற்படும்வரை விடுதலை உணர்வு மழுங்காது.

எமது மக்கள் விழிப்புடந்தான் உள்ளனர். அத்துடன் சிங்களவனும் நல்லாக காசு இறைத்து தனது கஜானாவை .............................

சில கேள்வி?

எங்கே இந்த ஆனந்த சங்கரி

டக்ளஸ் தேவானந்தா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வவுனியாவில் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்களாமே!

இன்று புலிகளில்லை, அதனால் பிரிவினைவாதம் பற்றிப் பேசாமல் மக்கலனைவரும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்று சம்பந்தன் கூறுகிறார். அப்படியானால் 1976 ஆம் ஆண்டு தனித் தமிழ் ஈழம்தான் ஒரேதீர்வு என்று மக்கள் ஆணை கேட்டு 1977 தேர்தலில் தாம் அமோக வெற்றியீட்டியதை தவறு என்கிறாரா? ஆக இவர்களை பொறுத்தவரையிலும் பிரச்சனைக்குக் காரணமானவர்கள் புலிகள்தான். அவர்கள் இப்போது அழிக்கப்பட்டு விட்டார்கள், ஆகவே இனிப் பிரச்சனையுமில்லை, பிரிவினைவாதமுமில்லை !!!!பேஷ்...பேஷ்...இதைத்தானே ஐய்யா சிங்களவனும் சொல்லுகிறான். "புலிகள் தான் ஈழம் கேட்கிறார்கள், தமிழர்களுக்கென்று பிரச்சனை ஒன்றுமில்லை, இருப்பதெல்லாம் புலிப்பயங்கரவாதிகளின் பிரிவினைவாதப் பயங்கரவாதப் பிரச்சனை மட்டும்தான்". இதையே நீங்களும் சொல்கிறீர்கள்.

இதனால்த்தான் மகிந்த தனது பிரச்சாரத்துக்கு உங்களைப் பயன்படுத்துவதையோ அல்லது இந்தியா சிங்களப் பிரச்சாரத்துக்குத் துணை போகும்படி உங்களை வற்புறுத்துவதையோ உங்களால் இலகுவாக ஏற்றுக்கொள்ள முடிகிறது. இதை வெறுமனே "உயிரச்சத்தால் எடுத்த முடிவு" என்று எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஐய்யா!!

இந்தத் துள்ளு துள்ளி இப்படி குதிக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதியது என்னவென்று எல்லோருக்கும் விளங்கும். உனக்குப் புரியவில்லை என்றால் பொத்திக்கொண்டு இரும். அல்லது மாற்றுக்கருத்து என்று கத்தும். நொண்டிகளால் குத்திக்க முடியாது என்று எனக்குத் தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.